செய்தியாளர் கீரவாணி இளையராஜா புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலை விழிப்புணர்வுப் பேரணி. போக்குவரத்துக் காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் தலைமை நலச்சங்கத்தின் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி பொன்னமராவதி போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி தலைமையில் நடைபெற்றது. ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்