முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்சிப் பதவிக்கு  தானே வெட்டிக் கொண்ட ஜந்து -பகவான் நந்து


  •            கட்சிப் பதவிக்கு  தானே                வெட்டுக் காயம் செய்த ஜந்து -பகவான் நந்து
    `என்னை அரிவாளால் வெட்டிட்டு ஓடிடுங்க!’ என பதவிக்காக தனக்கே ஸ்கெட்ச் போட்டு
    திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதி  பகவான் நந்து.  இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் நேற்றிரவு ஒன்பது  மணிக்கு இவர் நடந்திவந்த எலெக்ட்ரானிக்ஸ் கடையை மூடிவிட்டு வீடு கிளம்புகையில், மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் உடலில் 8 இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.
    `இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிலருடன் ஏற்கெனவே பகவான் நந்துவுக்கு முட்டல் மோதல் இருந்திருக்கிறது. அவர்கள்தான் இந்தக் கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கக் கூடும்’ என இந்து மக்கள் கட்சியினர் கொதித்துக் கிளம்பினர். இதனால் பெருமாநல்லூர் பகுதியில் இரு மதத்தினரிடையே பிரச்னை வெடிக்கும் சூழல் எற்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாகக் களத்தில் இறங்கியதும்  விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிரவைக்க
    பகவான் நந்து வெட்டப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து முதலில் பெருமாநல்லூர் காவல்துறை ஆய்வுகள் செய்ய. அக் காட்சிகளில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான பகவான் நந்துவின் டிரைவர் ருத்ரமூர்த்தி இருந்திருக்கிறார். ஏதோ முன்பகைக்காக ருத்ரமூர்த்திதான் இந்தச் சம்பவத்தைச் செய்திருக்கிறார் என போலீஸார் அவரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர். ஆனால் ருத்ரமூர்த்தியோ, `என்னை வெட்டுங்கடான்னு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே பகவான் நந்து  தான்’ எனக்கூறி காவல்துறையை மலைக்க வைத்திருக்கிறார். பைக்கை நிறுத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது கொடூர தாக்குதல்
    தன்னையே வெட்டிவீச எவனாவது ஆள் செட் பண்ணுவானா? என காவல்துறை  குழம்பிப் போயிருக்கின்றனர். ஆனால் ருத்ரமூர்த்தியோ தெளிவாக, `கட்சியில் நல்ல பதவி கிடைக்கணும். ஊர்ல நமக்குன்னு மாஸ் வரணும் என அண்ணன்தான் அவரையே வெட்டச் சொன்னார். முதுகில் லேசா வெட்டிட்டு ஓடிடுங்கடா, மத்ததை நான் பாத்துக்குறேன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அவரை லேசா வெட்டிட்டு அவர் கையிலயே அரிவாளை கொடுத்துட்டு ஓடிட்டோம். அதைவச்சி அவரே உடம்பில் சில வெட்டுக்களைப் போட்டுக்கிட்டாரு. அவர் சொன்னதால்தான் ஆள் செட் பண்ணி சின்னதா ஒரு சம்பவம் செஞ்சோம். வேற மதத்தைச் சேர்ந்தவங்க மேல பழியைப் போட்டு பிரச்னையை திசை திருப்பிடலாம்னு சொன்னார். கடைசியில இப்படி ஆகிடுச்சி’ என கூறியிருக்கிறார்.
    இதையடுத்து கொலைமுயற்சி என்றிருந்த வழக்கை மாற்றி, ருத்ரமூர்த்தியோடு சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், `சுய விளம்பரத்துக்காக மற்றும் லாபத்துக்காக பொதுமக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என அறிக்கை கொடுத்திருக்கிறார்.
    அரசியல் பதவிக்காக தன்னை வெட்ட தானே ஆள் செட் செய்த, இந்து மக்கள் கட்சிப் பிரமுகரின் செயல் திருப்பூரில் பலரும் அதிர்ச்சி  யடையச் செய்திருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...