தமிழகத்தில் கொரானாவால் முதல் பலி திருச்சியில் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்தார் திருச்சி உறையூர் விக்னேஷ்.சில நாட்களுக்கு முன் உடல் நலத்தில் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தொடர்ந்து விக்னேஷுக்கு சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனை அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூற உறவினர்கள், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களிலே விக்னேஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் விக்னேஷ் உயிரைக் காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், எதுவும் பலனளிக்கவில்லை.
இதற்கிடையே, விக்னேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட சில நிமிடங்களிலே உயிரிழந்து விட்டதால், அவரின் ரத்த மாதிரிகளைச் சோதனைக்கு எடுக்க இயலவில்லை என மருத்துவர்களால் கூறப்பட்டது. தற்போது அவருடன் இருந்த நபர்களின் நிலை என்ன என்ற தகவல் வரவில்லை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்