சிவாஜி ராவ் கைக்வாட் என்ற ரஜினிகாந்த், 1949 டிசம்பர்12 ஆம் நாள் கர்நாடகாவில் பெங்களூரில் வசித்த ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகன் மராத்திக் குடும்பத்தில் பிறந்தவருக்கு இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரி ஐந்து வயதில், தாயை இழந்து பெங்களூரில் ஆச்சாரியா பாடசாலை மற்றும் விவேகானந்த பாலக சங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்து பேருந்து நடத்துனராக வாழ்வைத் தொடங்கி மேடை நாடகங்களிலும் நடித்து பின் நடிகராகும் நோக்கத்தில் சென்னை வந்து பல இன்னல்களைச் சந்தித்து ஒரு நண்பனின் உதவியால் சென்னை திரைப்படக் கல்லூரியில சேர்ந்தார். 1975 ல், கே. பாலச்சந்தரினஹ அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலகில், 1976ல் “கதா சங்கமா” கன்னட திரைப்படத்தில் நடித்தார். பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படம் நடிகனாக அடையாளம் காட்டியது.ஒரு பொதுவான கருத்தை ஏற்பது அல்லது நிரகரிப்பது,தனக்கென ஒரு கருத்தை,கொள்கையை உருவாக்குவது.. அதை அடுத்தவரிடம் திணிப்பது,அதிகார மைய்யத்தைப் பெற முயற்சிப்பது,அல்லது அபகரிக்க நினைப்பது.தன்னுடை சொல்லையும்,செயலையும்,எதிர்ப்பையும் தன் செய்யும் தொழிலில் மூலமாக வெளிப்படுத்துவது. தன்னைக் காத்துக் கொள்ள ஆள்வோரின் துணையை நாடுவது. இது தானே அரசியல்..இதில் எதையும் செய்யாமல் இருந்தார் இருக்கிறார் ரஜினி
சொல்லும்.. செயலுமே அரசியலே தவிர கொடியும் கட்சி பெயருமல்ல.. அரசியலில் நான் இல்லை.இனி இறங்கப்போகிறேன் என்று கூறுவதுதான் உலகில் பெரிய பித்தலாட்டம்,அதுதான் மிகப்பெரிய அரசியல்
சரி சொல்லு மண்டபத்து மீட்டிங்ல.. என்ன பேசுனீங்க.?
உள்ளே பேசினதை வெளியே சொல்லீடாதீகன்னு சொன்னாங்க சார்.
பரவாயில்லை நீ சொல்லு உள்ளே என்ன பேசுனீங்க?
உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்.
அட பரவாயில்லை அதை நீ சொல்லு.
அடிச்சுக்கூட கேப்பாங்க..ஆனா..உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்.
சரி நாங்க உங்கள அடிக்கல..நீங்க அங்க நடந்துன்னு மட்டும் சொல்லுங்க..
உதச்சுக்கூட கேப்பாங்க..ஆனா..உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்
அட பரவாயில்லை அதை நீ சொல்லு.
அன்பா கூட கேப்பாங்க..ஆனா உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்.
அட பரவாயில்லை அதை நீ சொல்லு.
அன்பா..பண்பா கூட கேப்பாங்க..ஆனா உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்.
அடேய்..அடேய்.. அடேய்... நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் ஜொலிக்க மாட்டார் என்று அடித்து கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.
களைகட்டுகிறதா ரஜினியின் அரசியல் பிரவேசம். மாவட்டச் செயலாளர்களை சந்திப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ரஜினிகாந்த் தனது கட்சிப்பெயரை இந்த ஆண்டு அறிவித்து விடுவார் என்று சொல்கின்றனர். அவராக அறிவிக்கும் வரை அது நிச்சயமில்லை. ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கும் நேரத்தில் 69 வயது ரஜினிகாந்த் சினிமாவில் ஜெயித்தது போல அரசியலில் சாதிப்பாரா? சறுக்குவாரா?
அரசியலுக்கு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆனால் ஆன்மீக அரசியல் என்று சொன்ன ரஜினி போர் வரட்டும் என்று கூறியிருந்தார், அவர் சொன்ன பிறகு நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் எனப் பல போர்கள் நடந்து விட்டன. ரஜினிகாந்த் மட்டும் எந்தத் தகவலையும் வெளியிடவே இல்லை
ரஜினிகாந்த் 1996 ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக - தமாக கூட்டணிக்கு வாய்ஸ் மட்டுமே கொடுத்தார். அப்போதிருந்துஅவரை அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள். ஆனால் கருணாநிதி, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் 2017ஆம் ஆண்டில்தான் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார் ஆனாலும் ரஜினிகாந்த் முழுவீச்சில் அரசியலில் இறங்கவில்லை. சைலண்ட் ஆக இருந்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி தமிழக அரசியலில் பெரிய வெற்றி இல்லா விட்டாலும் வந்து விட்டார்.
அரசியலுக்கு வருவாரா ரஜினி
அரசியலில் ஜெயிக்க மக்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் அவசியம். ரஜினிகாந்த் சினிமாவில் நடித்து பிரபலமானவர்தான். ஆனால் அவர் என்றைக்கு அரசியல் பேச ஆரம்பித்தாரோ அன்றிலிருந்தே அவர் பேசுவது அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
ரஜினிகாந்த் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ஏழரைச் சனியில் ஜென்ம சனி தொடங்கியுள்ளது. ரஜினி எப்போது கட்சி தொடங்கினாலும் அவர் தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று கேரளா ஜோதிடர்கள் கூறியுள்ளார்களாம்
ரஜினிகாந்துக்கு கடந்த 19 வருடங்களாக சனி திசை நடந்தது. அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. 2018 ஜனவரி 21 தேதியுடன், ரஜினிகாந்த்துக்கு சனி திசை முடிவடைந்து புதன் திசை தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத்தான் அவரின் ஜாதகம் சொல்கிறது. தனிக்கட்சி தொடங்கத்தான் வாய்ப்பு அதிகம். 69 வயது 6 மாதங்களுக்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும். அப்படி அவர் அரசியலுக்கு வந்தாலும், எல்லாமே வெற்றிதான் என்று மற்றொரு ஜோதிடர் கூறியுள்ளார் ஜோதிடர்.
அதே நேரத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படி வந்தாலும் ஜொலிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஜெயலலிதா கருணாநிதி இல்லாத தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருதினாலும் அதிமுக,திமுகவை அசைக்க புதிய கட்சிகள் எதுவும் வரவில்லை. 2021 அதிசயம் நிகழும் என்று கூறிய ரஜினி தனது நிலைப்பாட்டை இன்னமும் உறுதியாக வெளிப்படுத்தவில்லை. பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான். சுவாமி விவேகானந்தர், ரமணமகரிஷி, முத்துராமலிங்கத்தேவர், சுத்தானந்த பாரதி, ஆப்ரஹாம் லிங்கன், டார்வின் ஆகியோர் 3ஆம் எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்தான்.
அரசியலை விட ஆன்மீகம்தான் சிறந்தது. 69 வயதில் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. காரணம் 3 ஆம் எண் குரு 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண். ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வந்தாலும் அவர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை அதே போல கமல்ஹாசனுடன் இணைந்து செயலாற்ற வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர். கமலும் ரஜினியும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார.
எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வம், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று கூறினார். அதே போல இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபய ராஜபக்சே ஆட்சியை பிடிப்பார் என்றும் கணித்திருந்தார். இந்த இரண்டு கணிப்புகளுமே பலித்துள்ளது. அதே போல ரஜினிகாந்த் பற்றிய கணிப்பும் பலிக்குமா என்று பார்க்கலாம்.மொத்தம் இலவம் பஞ்சு மரத்தில் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பழம் பழுக்கும் எனக் காத்திருக்கும் ரசிகர்கள் நிலை தான் ஏமாற்றம் என்பது இது மக்கள் நிலை என்பது அவரை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது அது ரஜினிக்கும் அவருக்கு பின்புலமுள்ளவர்களுக்கும் நன்கு தெரியும். அரசியல் வாதிகளாவது அவ்வளவு ஏளிது அல்ல என்பது வந்து அனுபவம் பெற்ற சிவாஜி ரசிகர்கள் அறிவார்கள் அதை ரஜினிரசிகர்கள் உணர்வார்களா அல்லது உணராமலேயே தங்களுடைய தலைவருக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு என கற்பனை உலகத்தில் வாழ்வார்களா என்பது தெரியும் ஆனால் ஒன்று மட்டுமே நன்றாக நமக்குப் புரிகிறது யாரோ ஒரு வழிகாட்டும் நபர் மீது அவருக்கு நம்பிக்கை போய்விட்டது போல் தற்போது தக்க ஆலோசகர்கள் இல்லை என்பதே நிதர்சன உண்மை.அதை அவர் ரசிகர்களின் மாவட்டச் செயலாளர்களுக்குப் புரியவைத்து விட்டார் ..அதை வெளியில் வராமல் இருக்க வேண்டும் என அறிவுரை செய்திருப்பார் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
கருத்துகள்