கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு - 5 பேர் குணம டைந்துள்ளனர்.
கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள் ளனரென முதலமைச்சர் தெரிவித்தார் .கொரோனாவுக்கு மருந்து தனிமைதான்எனவும் முதல்வர் தகவல்.கொரானா மிகப்பெரிய தொற்று நோய் - வல்லரசு நாடுகளிலேயே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை
என முதல்வர் தகவல்.சிகிச்சைக் காக தமிழகத்தில் 3,018 வெண்டிலேட்டர் தயார் நிலையில் உள்ளன கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மக்களின் நன்மைக்கு தான்
சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல,
இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை.
43,537 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்,ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும்.சென்னையில் மட்டுமே 20 முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளது.30 ஆயிரம் கொரானா பரிசோதனைக் கருவிகள் வாங்கப்பட உள்ளன சென்னை யில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் மேலும்
தமிழகத்தில் இதுவரை கொரானா நோய் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்க 11 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மருத்துவர் களுக்காக பிரத்யேகமாக 25 இலட்சம் என்-95 முக்கவசங்கள் வாங்க பட உள்ளது.தமிழகத்தில் மேலும் 3 ஆய்வு மையங்கள் செயல்பட மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இறப்பு மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் மற்ற இடங்களுக்குச் செல்ல வட்டாச்சியரிடம் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும்.2500 வென்டி லேட்டர்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் 144 தடை உத்தரவுக்கு பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை வெளி மாநிலங் களிலிருந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் 1 இலட்சத்து 49 ஆயிரத்து 347 பேர் பல்வேறு மாநிலங்களிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எனவும் அவர் தெரிவித்தார். தற்போது உலகளவில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது பாதிக்கப் பட்டோர் 7,23,716 பேர், குணம டைந்தோர் 1,51,824 பேர் ஆகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்