வெளி முதலீடுகளை ஈர்க்க சிறப்புக் குழு - முதல்வர்.
இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு குழு, கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பின்னர் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் தமிழகத்தில் ஏற்கனவே அதிக முதலீடுகளை செய்துள்ள நாடுகளின் தொழில் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி அவர்கள் பிற நாடுகளில் இருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கீர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தடம் பதிக்க வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையிலான குழு
இடம் பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களைக் கண்டறிது தமிழகத்துக்கு ஈர்பதற்கு வழங்க வேண்டிய ஒற்றைச்சாளர அனுமதி வழிமுறைகள், சிறப்புச் சலுகைகள், ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள் மற்றும் கட்டமைப்புப் பணிகளைக் கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகளை இக்குழுவினர் மேற்கொள்வர்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவானது தனது முதற்கட்ட அறிக்கையை ஒருமாதத்திற்குள் முதல்வரிடம் வழங்கும் எனவும் அறிவிப்பில் உள்ளது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்