ஆந்திர மாநிலத்தில் கொரானா தொற்றெனச் சந்தேகித்த இருவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இருவருக்கும் ஒரே பெயர் இருந்த குழப்பத்தால் தொற்று இருப்பவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம், காட்டூரி மருத்துவக் கல்லூரியில் கொரோனா மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரே பெயரில் இருவர் தங்க வைக்கப்பட்டி ருந்தனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி யானது. ஆனால், பெயர் குழப்பத்தால் மற்றொருவரை டிஸ்சார்ஜ் செய்வதற்குப் பதில், தொற்றுள்ளவரை மருத்துவக் குழு டிஸ்சார்ஜ் செய்து விட. அரசு அறிவித்தபடி, அவரிடம் ரூபாய் .2000 பணமும் கொடுத்து வழியனுப்பிய பின் தவறை உணர்ந்த மருத்துவர்கள் அதிர்ச்சியாகி தாடேபல்லியில் இருந்த கொரோனா தொற்றுள் ளவரது வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறி, மீண்டும் மருத்துவமனைக்கு வரும்படி அழைக்க. ஆனால், அவர் வரமாட்டேன் எனக்கூற
அதன் பின் விவரங்களை காவல்துறைக்குத் தெரிவித்த மருத்துவர்கள் காவல்துறை உதவியோடு தொற்று நபரை ஆம்புலன்ஸில் ஏற்றி என்.ஆர்.ஐ மருத்துவக் கல்லூரிக்கு கூட்டி வந்தனர். இதனால், தொற்று இருப்பவரின் வீட்டிலிருந்த நான்கு நபர்களையும் மருத்துவப் பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தக் குழப்பத்தால், தொற்று உள்ள நபர் ஒரு நாள் யார் யாரைத் தொடர்பு கொண்டார் என்பது குறித்து காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படுமென குண்டூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்