வந்தே பாரத்இயக்கத்தின் கீழ் மே 7 ஆம் தேதி முதல் 43 விமானங்க ளில் 8503 இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்புகின்ற னர். ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸால் இயக்கப்படும் 43 விமானங்களில் இந்தியாவுக்கு மே 7ம் தேதி தொடங்கி கடந்த 6 நாட்களில் 8503 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தியர்களை தனது தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக இந்திய அரசு வந்தே பாரத் மிஷனை மே 7 ஆம் தேதி துவக்கி வைத்துள்ளது. இந்த பணியின் கீழ், இந்தியர்களை மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளி விவகார அமைச்சகம் ஆகியவை மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது.
ஏர் இந்தியாவும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸும் இணைந்து 12 நாடுகளுக்கு மொத்தம் 64 விமானங்களை (ஏர் இந்தியா - 42 மற்றும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் - 24) இயக்குகின்றன. முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, பங்களாதேஷ், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரும் விமான வெளியேற்றும் பணியில் ஒவ்வொரு செயல்பாடும் அரசு மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் வகுத்துள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறையை கண்டிப்பாக பின்பற்றுகிறது. MoCA, இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை இந்த முக்கியமான மருத்துவ வெளியேற்றப் பணிகளில் பயணிகள், பணியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் எந்தவொரு தளர்வையும் அளிக்கவில்லை.
அரசாங்க வழிகாட்டுதல்களின்படி விரிவான மற்றும் மிக உன்னிப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்