இரு மடங்காக உயர்த்தப்படும் ஆம்னி பேருந்து கட்டணம். தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் முடிவு. தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அப்சல் தெரிவித்தார். மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளது. கொரானோவைக் கட்டுப்படுத்தும் ஊரடங்கு, இன்னொரு பக்கம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலை.
மே 18 ஆம் தேதியில் இருந்து தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு 4.0 அமலுக்கு வரும் என பிரதமர் தெரிவித்தார். ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பேருந்துகள் இயங்கவில்லை. திங்கட்கிழமை யிலிருந்து குறைந்த எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயங்க வாய்ப்பு என கூறும்நிலையில் தனியார் பேருந்துகள் இப்போது இயங்க வாய்ப்பில்லை என்பதாலும், அரசு அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயரும் என் தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித் தார்.தற்போது அதிகாரபூர்வமாக ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் 3.20 ரூபாயாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. அரசு மக்கள் நலன் கருதி உரிய கட்டணம் நிர்ணயம் செய்ய அரசு போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்