முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய வேளாண்மைத் துறை சார்ந்த சீர்திருத்தக் கொள்கை மாற்றங்கள்.குறித்த இணையவழிக் கருத்தரங்கு

மத்திய வேளாண்மை கூட்டுறவு விவசாயிகள் நலன் துறை ‘இந்திய வேளாண் துறையில் சீர்திருத்தங்கள், கொள்கை மாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள்’ ஆகியவை குறித்த இரண்டு இணைய வழி கருத்தரங்குகளை நடத்தியது மத்திய வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை 25, 26 ஜூன் 2020 தேதிகளில் இரண்டு இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியது. முதலாவது கருத்தரங்கு, ‘இந்திய விவசாயத்தில் நிலச்சீர்திருத்தங்கள், விவசாயத் தொழில்களில் உருவாகும் முதலீட்டு வாய்ப்புகள்’, என்ற தலைப்பிலும், இரண்டாவது கருத்தரங்கு, ‘விவசாய சீர்திருத்தங்களில் புதிய விடியல் - மாற்றங்கள் கொள்கை வகுப்பாளர்களின் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலும் நடைபெற்றன. வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறைச் செயலர் திரு.சஞ்சய் அகர்வால்; கால்நடை, பால்பண்ணை துறைச் செயலர் திரு. அப்துல் சதுர்வேதி; மீன் வளத்துறைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன்; உணவுத்துறை செயலர் திருமதி புஷ்பா சுப்பிரமணியன் ஆகியோர் இந்த கருத்தரங்குகளில் உரையாற்றினர்.   கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் போது வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையிலான அரசு, புதிய பாதைகளை உருவாக்குவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நெருக்கடி காலத்தின் போதும், இந்திய விவசாயிகள், வேளாண் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த ஆண்டு கரீஃப் பருவத்தின் போது 316 லட்சம் ஹெக்டேர் நிலம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 154 லட்சம் ஹெக்டர் நிலம் பெயரிடப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 187 லட்சம் எக்டர் பயிரிடப்பட்டது என்று அவர் கூறினார்.   மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் வேளாண் துறையில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினருக்கு மேற்பட்டவர்களுக்கு வேளாண் துறை வாழ்வாதாரம் அளித்து வருகிறது. வேளாண்துறையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது என்று திரு சஞ்சய் அகர்வால் வலியுறுத்தினார். அறுவடைக்குப் பிந்தைய கட்டமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாயிலான வேளாண் கட்டமைப்பு நிதியம்; பத்தாயிரம் FPO களுக்கான திட்டம்; இதுவரை கேசிசி பெறாத 25 மில்லியன் விவசாயிகளுக்கு கே சி சி வழங்குவதற்கான சிறப்பு திட்டம்; டிஜிட்டல் மயமான வேளாண் சந்தை உருவாகும் வகையிலான, திறமையான வேளாண்மைக்காக, வேளாண் அடுக்கு ஒன்றை ஏற்படுத்துவது; போன்ற பல திட்டங்கள் மூலமாக இந்தியாவில் உள்ள வேளாண் சூழல் மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். வேளாண்மையில் சுயசார்பு என்ற தொலைநோக்கு திட்டத்தையும் அவர் முன்வைத்தார். விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டி, நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழும் வகையில், அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவது; முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ‘வேளாண்மைக்கு செல்லுங்கள்’ என்று வேளாண் துறையை மாற்றுவது; உலகிற்கான உணவுக் கூடையாக இந்தியாவை உருவாக்குவது; போன்றவை குறித்தும் செயலர் கூறினார்.   கால்நடை வளர்ப்பு என்பதை ஏடிஎம் இயந்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசிய கால்நடை பால்பண்ணைத் துறைச் செயலர் திரு.அதுல் சதுர்வேதி சில்லரை வியாபாரிகளிடம் பால் விற்பனையாவதைப் போல, வேறு எந்தப் பொருளும் விரைவில் விற்பனையாவது இல்லை என்று கூறினார். தற்போது 158 மில்லியன் எம்டி டன்னாக உள்ள பால் துறை அடுத்த 5 ஆண்டுகளில் 290 மில்லியன் எம்டி டன்னாக அதிகரிக்கச் செய்வதே நோக்கமாகும் என்று கூறினார். பால் பதப்படுத்தும் துறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவின் பங்கு தற்போது 30 முதல் 35 சதவீதமாக உள்ளது என்றும், இதை 50 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் செயலர் கூறினார்.   மீன்வளத் துறைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் பேசுகையில், மீன்வளத்துறை புதிதாக உதயமாகும் துறைகளுள் ஒன்று என்று கூறினார். 2014- 15 முதல் 2018- 19 வரை மீன்வளத்துறை 10.8 7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றார். மீன் உற்பத்தி 7.53 சதவிகிதமும், மீன் ஏற்றுமதி 9.71 சதவிகிதமும் அதிகரித்துள்ளது என்றும், உலக அளவிலான மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 7.7 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார் உலகிலேயே மீன்வளர்ப்பு உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய நாடாகவும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார்.   அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் துறைக்கான மத்திய அரசின் முக்கிய இலக்குகளையும் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் எடுத்துக் கூறினார். மீன் உற்பத்தி 2018 -19 இல் 137.58 லட்சம் டன்னாக இருந்தது. 2024- 25 காலத்தில் 220 லட்சம் டன்னாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சராசரி மீன்வளர்ப்பு உற்பத்தி ஹெக்டேருக்கு 3.3 டன்னாக இருந்தது. 2024- 25ல் இது ஹெக்டேருக்கு 5.0 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீன் ஏற்றுமதி 2024- 25 ஆண்டுக்குள் மேலும் ஒரு லட்சம் கோடி அதிகமான அளவிற்கு இருக்கும். 2028 ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கோடி அதிகரிக்கும். 2018- 19 இல் 15 லட்சம் என்றிருந்த வேலை வாய்ப்பு 2024- 25 ல் 55 லட்சம் என்று அதிகரிக்கும்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...