முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் விழாவும் விருதும்

சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருது, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஒத்திவைப்பு சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருது,  கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, தேசிய தேர்வாணையத்தின் பார்வைக்கு அனுப்பப்படும். இதற்கான கூட்டம், நேற்று (டிசம்பர் 01, 2020) நடப்பதாக இருந்தது. எனினும் கொவிட்-19 பரவல் காரணமாக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்த பிறகு தேசிய தேர்வு ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று அது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் 3-ஆம் தேதி அனுசரிப்பு இந்தியாவில் இதுவரை 54.75 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1992-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாகும். இந்த வருடத்திற்கான கருப்பொருள் ‘உத்வேகத்துடன் மீண்டு வருதல்: மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய, நிலைத்த கொவிட்-19க்குப் பிந்தைய காலத்தை நோக்கி முன்னேறுவது’ என்பதாகும். இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஸ்வவ்லம்பம் என்னும் திட்டத்தின் கீழ் பிரத்தியேக அடையாள அட்டையையும் சான்றிதழையும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கிவருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முகமைகளின் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளின் தகவல்களும் அவர்கள் சார்பாக இணையதளத்தில் புதுப்பிக்கப்படுகின்றன‌.  இதற்காக அவர்கள் பிரத்தியேக மாற்றுத்திறனாளிகள் அடையாள இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளுக்கு இணையதளம் வாயிலாக அவர்கள் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்கள்/ அடையாள அட்டைகளை புதுப்பிப்பதற்கும், ஏதேனும் காரணத்தால் அடையாள அட்டை தொலைந்து விட்டால் புதிய அட்டையைக் கோரியும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வதுடன் அவற்றை அச்சிட்டும் கொள்ளலாம். இந்தியாவில் இதுவரை சுமார் 54.75 லட்சம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2.50 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 38 மாநிலங்களில் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. திருச்சிராப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவியாக ரூபாய் 25 ஆயிரமும், 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படுகிறது. மேலும் சமூக நலத் துறையின் மூலம் பட்டம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 50 ஆயிரமும், 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படுகிறது.  திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த திட்டத்தில் சேர்வதற்குப் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு சிவராசு தெரிவித்தார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, திருமண பத்திரிக்கை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட முதல் திருமணத்திற்கான சான்றிதழ் ஆகியவையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...