இண்டிபெண்ணடன்ஸ் கூட்டுறவு வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு அமல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் தலைமையிடமான இண்டிபெண்ணடன்ஸ் கூட்டுறவு வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது.இண்டிபெண்டன்ஸ் கூட்டுறவு வங்கியின் நிதி நிலை மோசமாக இருப்பதால் இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளதெனினும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் எனவும், சம்பந்தப்பட்டவர்களின் பணம் வழங்கப்பட்டுவிடுமெனவும் உறுதியளித்துள்ளது.டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 99.89 சதவீதம் டெபாசிட்டர்களுக்கு பணம் வழங்கப்பட்டு விடுமென ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது.இந்தக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வங்கியின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம். இண்டிபெண்டன்ஸ் கூட்டுறவு வங்கி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையடுத்து ஆறு மாதங்களுக்கு அமலிலிருக்குமென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி, இண்டிபெண்டன்ஸ் கூட்டுறவு வங்கியின் தலைமை அதிகாரியால் கடன் மற்றும் முன்பணம் வழங்க முடியாது. முதலீடுகளையும் மேற்கொள்ளமுடியாதெனினும், வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை எனவும், வங்கி தொடர்ந்து இயங்குமெனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கருத்துகள்