தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 17 சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றால் ஒரு இராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கொடுக்க முன்வந்ததாகத் தகவல் வெளியானது.
அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே பத்து நாட்களுக்கு மேலாக நீடித்த தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்து விடுமென்று எதிர்பார்க்கப்படுகிற நிலை
அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே ஒரு நட்சத்திர ஹோட்டலில் தொகுதியின் பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்த்த நிலையில் த.மா.கா.விற்கும் இன்று தொகுதி பங்கீடாக
த.மா.காவுக்கு மூன்று தொகுதி கொடுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாம் இரு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகவே.
தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் எவை எனவும் ஆய்வு செய்த.
அ.தி.மு.க. செல்வாக்கு மிக்க தொகுதியாக இருந்தால் விட்டு கொடுக்க வலியுறுத்தப்படவே
தே.மு.தி.க.வுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு விட்டதாகவும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பதில் தான் இதுவரையில் சிக்கல் இருந்து வருவதாக கூறப்பட
அதுவும் மாலைக்குள் முடிவாகிவிடும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட தே.மு.தி.க., த.மா.கா. தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்படுவதால் 2 நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு முடியும் தேர்தல் பிரசாரம் பணிகளில் ஈடுபட அ.தி.மு.க. தலைமை தீவிரம் காட்டி வரவே தற்போது தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் நாளை விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
நடைபெற உள்ள 2021 சட்டமன்றப் பொதுதேர்தலையொட்டி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை 9 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டச செயலாளர்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
விரும்பும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படவும்
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பது பற்றியும் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.
தே.மு.தி.க. ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விரும்புகிறது. தொகுதிகள் பட்டியலையும் அந்தக் கட்சி தயாரித்து வைத்துள்ளதில் பெருவாரியான இடங்களை அ.தி.மு.க. தலைமையிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக உள்ளது. திமுக கூட்டணியான. காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ள தொகுதி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் ஒன்று தற்போது வலம் வருகிறது. காரைக்குடி - கே.ஆர்.ராமசாமி மொடக்குறிச்சி - ரா.ம.பழனிசாமி தொண்டாமுத்தூர் - கந்தசாமி விளவங்கோடு - விஜயதரணி குளச்சல் - பிரின்ஸ் கிள்ளியூர் - ராஜேஷ்குமார் பட்டுக்கோட்டை - மகேந்திரன் கலசப்பாக்கம் - செங்கம் குமார் ஆத்தூர் - அர்த்தநாரி விருதுநகர்: ஸ்ரீ ராஜா சொக்கர் முதுகுளத்தூர்- மலேசியா பாண்டியன் தாராபுரம் - காளிமுத்து உதகமண்டலம்- கணேஷ் ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை முசிறி - ராஜலிங்கம் மயிலாப்பூர் - அமெரிக்கை நாராயணன் (அ) ரவீந்திர தாஸ் ஆர்கேநகர்- M.S.திரவியம் அம்பத்தூர் : J.M.H.ஹசன் மவுலானா மதுரை மேற்கு - கார்த்திகேயன் ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ் நாங்குநேரி - ரூபி மனோகரன் ஓசூர் - கோபிநாத் கோயம்பத்தூர் : மயூரா ஜெயக்குமார் சூலூர் - V.M.C.மனோகரன் கடையநல்லூர்- பீட்டர் அல்போன்ஸ் தென்காசி : பழனி நாடார் ஓமலூர் - மோகன் குமாரமங்கலம் அறந்தாங்கி - S.T.ராமச்சந்திரன் இதில் பாதி உண்மையாகலாம். அது அல்லாது
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் .அசதுத்தீன் உவைசி எம் பி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு. செய்துளளனர்..
கருத்துகள்