இரயில்வே அமைச்சகம்
முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை வந்தடைந்தது
மூன்று டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள ஹாப்பாவில் இருந்து 2021 ஏப்ரல் 25 அன்று மாலை 6.03 மணிக்கு கிளம்பிய ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், மகாராஷ்டிராவில் உள்ள கலம்பொலியை 2021 ஏப்ரல் 26 காலை 11:25 மணிக்கு வந்தடைந்தது.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தடைவதற்காக பசுமை வழித்தட வசதி வழங்கப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தால் இயக்கப்படும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக நாடு முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக மருத்துவ ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது.
860 கிலோமீட்டர்கள் பயணித்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் அதன் இலக்கை அடைந்தது. சுமார் 44 டன்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்த டேங்கர்கள் எடுத்து வந்தன. ஆக்சிஜன் எக்ஸ்பிரசுக்காக தேவையான ஏற்பாடுகள் கலம்பொலி சரக்குகள் மையத்தில் செய்யப்பட்டிருந்தன.
விரம்காம், அகமதாபாத், வடோதரா, சூரத், வசாய் சாலை மற்றும் பிவாண்டி சாலை வழியாக அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் கலம்பொலியை வந்தடைந்தது. ஜாம் நகரில் உள்ள திருவாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த ஆக்சிஜன் டேங்கர்களை வழங்கினர்.
நாக்பூரில் இருந்து நாசிக் வழியாக மும்பையிலிருந்து விசாகப்பட்டினம் வரையிலும், லக்னோவில் இருந்து பொகாரோ வரையிலும், திரும்பவும் அதே எதிர் வழிதடத்திலும், சுமார் 150 டன்கள் திரவ ஆக்சிஜனை 2021 ஏப்ரல் 25 வரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் இந்திய ரயில்வே எடுத்துச் சென்றுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.இரயில்வே அமைச்சகம்
9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பியுள்ளது ரயில்வே
கொவிட் இரண்டாவது அலையில், தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பும் படி பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ரயில்வேயிடம் கொவிட் சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்ட 4000 ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன.
9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த கொவிட் சிகிச்சை பெட்டிகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
மொத்தம் 81 பேர், கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எங்கும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தில்லி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 9 ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளின் விவரம்:
தில்லியில் மாநில அரசின் தேவையை ரயில்வே முழு அளவில் நிறைவேற்றி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் 75 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் 50 ரயில் பெட்டிகள் சகுர் பஸ்தி ரயில் நிலையத்திலும், 25 ரயில் பெட்டிகள் ஆனந்த் விகார் ரயில் நிலையத்திலும் உள்ளன. தற்போது சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்தாண்டு கொவிட் முதல் அலையின் போது, சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொவிட் சிகிச்சை பெட்டிகளில் 857 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
மத்தியப் பிரதேசம் போபாலில், 292 படுக்கை வசதிகளுடன் 20 கொவிட் சிகிச்சை பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது இங்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா நந்த்ரூபரில் 292 படுக்கை வசதிகளுடன் 24 பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 73 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய 2வது அலையில் மட்டும் 55 பேர் அனுமதிக்கப்பட்டு, 7 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 4 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
உத்திரப் பிரதேச அரசு எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்றாலும், இங்கு பைசாபாத், பதோகி, வாரணாசி, பரேலி மற்றும் நசிபாபாத் ஆகிய இடங்களில் தலா 10 கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 800 படுக்கை வசதிகள் உள்ளன.இரயில்வே அமைச்சகம்
ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சென்ற மொத்த மருத்துவ ஆக்ஸிஜனின்அளவு நாளை காலை 450 மெட்ரிக் டன்களை கடக்கிறது
சில நாட்களுக்கு முன் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸின் முதல் ரயில், மும்பையிலிருந்து காலி ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை விசாகப்பட்டினம் கொண்டு சென்றது. அதன்பின்பு, 302 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சென்றது.
மற்றொரு 154 மெட்ரிக் டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களுக்கு, உயிர் காக்கும் திரவ ஆக்ஸிஜனை கொண்டுச் செல்லும் சவாலை ரயில்வே ஏற்றுள்ளது.
4 டேங்கர்களுடன் சத்தீஸ்கரில் இருந்து சென்று கொண்டிருக்கும் ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று தில்லியை சென்றடையும்.
மகாராஷ்டிரா மக்களுக்காக, குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 3 டேங்கர்களை(44 மெட்ரிக் டன்கள்) இன்று மும்பைக்கு கொண்டுச் சென்றுள்ளது.
மற்றொரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜார்கண்டிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் 5 டேங்கர் லாரிகளில் 90 மெட்ரிக் டன்கள் திரவ ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இது நாளை காலை லக்னோ சென்றடையும்.
மாநில அரசுகளின் அனைத்து வேண்டுகோள்களையும் ஏற்று, ரயில்வே செயல்பட்டு வருகிறது. கூடுதல் ஆக்ஸிஜன் ரயில்களின் தேவைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ரயில்வே தொடர்பில் உள்ளது. இரயில்வே அமைச்சகம்
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்: மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், தில்லிக்கு இதுவரை 450 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம்
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகிக்கும் பணியை இந்திய ரயில்வே தொடர்ந்து மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இதுவரை 10,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்து 450 மெட்ரிக் டன் பிராணவாயுவை மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லிக்கு 6 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வாயிலாக 26 டேங்கர்களில் எடுத்துச் சென்றுள்ளது.
தற்போது ஜபல்பூர் வழியாக பொகாரோவிலிருந்து போபால் வரை மற்றொரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளது.
6 டேங்கர்களில் 64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை ஏற்றிச் செல்லும் இந்த ரயில், போபால் மற்றும் ஜபல்பூர் வாயிலாக மத்திய பிரதேசத்தின் பிராணவாயு தேவையை பூர்த்தி செய்யும்.
70 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ பிராணவாயுவுடன் முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தில்லி சென்றடைந்தது.
இதுவரை முதற்கட்ட தகவலின்படி உத்தரப் பிரதேசத்துக்கு 202 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 174 மெட்ரிக் டன் மற்றும் தில்லிக்கு 70 மெட்ரிக் டன் பிராணவாயுவை இந்திய ரயில்வே விநியோகித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் மத்திய பிரதேசத்திற்கு 64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு கிடைக்கும்.
கருத்துகள்