முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

150 டன்கள் திரவ ஆக்சிஜனை 2021 ஏப்ரல் 25 வரை இந்திய ரயில்வே எடுத்துச் சென்றுள்ளது.



இரயில்வே அமைச்சகம்   


முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை வந்தடைந்தது

மூன்று டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள ஹாப்பாவில் இருந்து 2021 ஏப்ரல் 25 அன்று மாலை 6.03 மணிக்கு கிளம்பிய ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், மகாராஷ்டிராவில் உள்ள கலம்பொலியை 2021 ஏப்ரல் 26 காலை 11:25 மணிக்கு வந்தடைந்தது.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தடைவதற்காக பசுமை வழித்தட வசதி வழங்கப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தால் இயக்கப்படும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக நாடு முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக மருத்துவ ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது.

860 கிலோமீட்டர்கள் பயணித்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் அதன் இலக்கை அடைந்தது. சுமார் 44 டன்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்த டேங்கர்கள் எடுத்து வந்தன. ஆக்சிஜன் எக்ஸ்பிரசுக்காக தேவையான ஏற்பாடுகள் கலம்பொலி சரக்குகள் மையத்தில் செய்யப்பட்டிருந்தன.

விரம்காம், அகமதாபாத், வடோதரா, சூரத், வசாய் சாலை மற்றும் பிவாண்டி சாலை வழியாக அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் கலம்பொலியை வந்தடைந்தது. ஜாம் நகரில் உள்ள திருவாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த ஆக்சிஜன்   டேங்கர்களை வழங்கினர்.

நாக்பூரில் இருந்து நாசிக் வழியாக மும்பையிலிருந்து விசாகப்பட்டினம் வரையிலும், லக்னோவில் இருந்து பொகாரோ வரையிலும், திரும்பவும் அதே எதிர் வழிதடத்திலும், சுமார் 150 டன்கள் திரவ ஆக்சிஜனை 2021 ஏப்ரல் 25 வரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் இந்திய ரயில்வே எடுத்துச் சென்றுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.இரயில்வே அமைச்சகம்

9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பியுள்ளது ரயில்வே

கொவிட் இரண்டாவது அலையில், தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பும் படி பல மாநிலங்கள்  கோரிக்கை விடுத்துள்ளன. ரயில்வேயிடம் கொவிட் சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்ட 4000 ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன.

 9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தற்போது, இந்த கொவிட் சிகிச்சை பெட்டிகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

மொத்தம் 81 பேர், கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எங்கும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தில்லி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 9 ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளின் விவரம்: 

தில்லியில் மாநில அரசின் தேவையை ரயில்வே முழு அளவில் நிறைவேற்றி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் 75 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் 50 ரயில் பெட்டிகள் சகுர் பஸ்தி ரயில் நிலையத்திலும், 25 ரயில் பெட்டிகள் ஆனந்த் விகார் ரயில் நிலையத்திலும் உள்ளன. தற்போது சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்தாண்டு கொவிட் முதல் அலையின் போது, சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொவிட் சிகிச்சை பெட்டிகளில் 857 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

மத்தியப் பிரதேசம் போபாலில், 292 படுக்கை வசதிகளுடன் 20 கொவிட் சிகிச்சை பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.  தற்போது இங்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா நந்த்ரூபரில் 292 படுக்கை வசதிகளுடன் 24 பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 73 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய 2வது அலையில் மட்டும் 55 பேர் அனுமதிக்கப்பட்டு, 7 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 4 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

உத்திரப் பிரதேச அரசு எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்றாலும், இங்கு பைசாபாத், பதோகி, வாரணாசி, பரேலி மற்றும் நசிபாபாத் ஆகிய இடங்களில் தலா 10 கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 800 படுக்கை வசதிகள் உள்ளன.இரயில்வே அமைச்சகம்

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சென்ற மொத்த மருத்துவ ஆக்ஸிஜனின்அளவு நாளை காலை 450 மெட்ரிக் டன்களை கடக்கிறது

சில நாட்களுக்கு முன் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸின் முதல் ரயில், மும்பையிலிருந்து காலி ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை விசாகப்பட்டினம் கொண்டு சென்றது. அதன்பின்பு, 302 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சென்றது. 

மற்றொரு 154 மெட்ரிக் டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களுக்கு, உயிர் காக்கும் திரவ ஆக்ஸிஜனை கொண்டுச் செல்லும் சவாலை ரயில்வே ஏற்றுள்ளது.

4 டேங்கர்களுடன் சத்தீஸ்கரில் இருந்து சென்று கொண்டிருக்கும் ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று தில்லியை சென்றடையும். 

மகாராஷ்டிரா மக்களுக்காக, குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 3 டேங்கர்களை(44 மெட்ரிக் டன்கள்) இன்று மும்பைக்கு கொண்டுச் சென்றுள்ளது.

மற்றொரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜார்கண்டிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் 5 டேங்கர் லாரிகளில் 90 மெட்ரிக் டன்கள் திரவ ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இது நாளை காலை லக்னோ சென்றடையும்.

மாநில அரசுகளின்  அனைத்து வேண்டுகோள்களையும் ஏற்று, ரயில்வே செயல்பட்டு வருகிறது. கூடுதல் ஆக்ஸிஜன் ரயில்களின் தேவைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ரயில்வே தொடர்பில் உள்ளது.               இரயில்வே அமைச்சகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்: மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், தில்லிக்கு இதுவரை 450 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகிக்கும் பணியை இந்திய ரயில்வே தொடர்ந்து மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இதுவரை 10,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்து 450 மெட்ரிக் டன் பிராணவாயுவை மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லிக்கு 6 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வாயிலாக 26 டேங்கர்களில் எடுத்துச் சென்றுள்ளது.

தற்போது ஜபல்பூர் வழியாக பொகாரோவிலிருந்து போபால் வரை மற்றொரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளது.

6 டேங்கர்களில் 64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை ஏற்றிச் செல்லும் இந்த ரயில், போபால் மற்றும் ஜபல்பூர் வாயிலாக மத்திய பிரதேசத்தின் பிராணவாயு தேவையை பூர்த்தி செய்யும்.

70 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ பிராணவாயுவுடன் முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தில்லி சென்றடைந்தது.

இதுவரை முதற்கட்ட தகவலின்படி உத்தரப் பிரதேசத்துக்கு 202 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 174 மெட்ரிக் டன் மற்றும் தில்லிக்கு 70 மெட்ரிக் டன் பிராணவாயுவை இந்திய ரயில்வே விநியோகித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் மத்திய பிரதேசத்திற்கு 64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...