முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்வதற்கு கடற்படையின் மேற்கு பிரிவு தயாராக உள்ளது


பாதுகாப்பு அமைச்சகம் கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்வதற்காக உள்ளூர் நிர்வாகங்களுக்கு உதவ கடற்படையின் மேற்கு பிரிவு தயாராக உள்ளது

அதிகரித்து வரும் கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக மருத்துவமனை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், இந்திய கடற்படையின் மேற்கு பிரிவின் கீழ் உள்ள 3 மருத்துவமனைgalaana- ஐஎன்எச்எஸ் ஜீவந்தி, கோவா; ஐஎன்எச்எஸ் பதஞ்சலி, கார்வார்; மற்றும் ஐஎன்எச்எஸ் சந்தானி, மும்பை ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தின் பயன்பாட்டிற்காக சில கொவிட் படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லாமல் இருப்பதற்காக மும்பையில் உள்ள கடற்படை வளாகங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் கடற்படை அதிகாரிகள், தேவை ஏற்படும் பட்சத்தில் எந்த விதமான கொவிட் அவசரகால உதவியையும் செய்யத் தயாராக இருப்பதோடு, அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

கார்வாரில் உள்ள கடற்படை அதிகாரிகளும் இதேபோன்று விரிவான வசதிகளை செய்துள்ளதோடு, சுமார் 1,500 இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் பொருட்கள் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை அளித்துள்ளனர். கொவிட்-19 பாதிப்புள்ள பொதுமக்களுக்கு கடந்த வருடம் சிகிச்சை அளித்த முதல் பாதுகாப்பு படைகள் மருத்துவமனையான ஐஎன்எச்எஸ் பதஞ்சலி, அவசரகால தேவை எதேனும் ஏற்பட்டால் பொதுமக்களில் உள்ள கொவிட் நோயாளிகளை அனுமதிக்க தயாராக உள்ளது.

கொவிட்-19 முதல் அலையின் போது சமுதாய சமையல் அறைகளை அமைத்த கோவாவில் உள்ள கடற்படையினர், அதேபோன்ற உதவியை தற்போதும் வழங்க தயாராக உள்ளனர். மேலும், ஐஎன்எச்எஸ் ஜீவந்தியில் உள்ள ஆக்சிஜன்  படுக்கைகளில் சிலவற்றை பொதுமக்களுக்காக ஒதுக்கியுள்ள கோவா பிராந்திய கடற்படை தலைமையகம், உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் பொதுமக்களுக்கான மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்குவதற்கு திட்டமிட்டு வருகிறது.

முக்கியமான மருந்து பொருட்கள் மற்றும் கொவிட் பாதிப்புள்ள பகுதிகளுக்கு உபகரணங்களை எடுத்துச் செல்லுதல், ஏழைகளுக்காக சமுதாய சமையல் அறைகளை அமைத்தல் மற்றும் இதர தொழில்நுட்ப உதவியை வழங்குதல் என உள்ளூர் நிர்வாகத்திற்கு குஜராத் கடற்படைப் பிரிவு ஆதரவளித்து வருகிறது.

தற்சமயம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தடுப்பூசிகளை அனைத்து கடற்படை மருத்துவமனைகளும் வழங்கி வருகின்றன. அருகில் வசிக்கும் பொதுமக்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு 2021 மே 1-ல் இருந்து தடுப்பூசிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொவிட் காரணமாக அமைக்கப்பட்டுவரும் மருத்துவமனைகளுக்கு குறுகிய கால அவகாசத்தில் அனுப்புவதற்காக மருத்துவம் மற்றும் போர்க்கள செவிலியர் பயிற்சி பெற்ற மருத்துவம் சாராத பணியாளர்களை தயார் நிலையில் மும்பையில் உள்ள ஐஎன்எச்எஸ் அஸ்வினி வைத்துள்ளது.

கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்வதற்காக உள்ளூர் நிர்வாகங்களுக்கு உதவ கடற்படையின் மேற்கு பிரிவு தயாராக உள்ள நிலையில், களத்திலுள்ள கடற்படை பிரிவுகள் கடல்சார் பாதுகாப்பின் நிலைத் தன்மையை உறுதி செய்து வருகின்றன. பிரான்ஸ் கடற்படை உடனான வருணா 21 உள்ளிட்ட  கூட்டுப் பயிற்சிகளில் மேற்கு கடற்படை பிரிவில் படைகள் சமீப நாட்களில் பங்கெடுத்து வருகின்றன. மேலும், மங்களூருக்கு அருகே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல் மார்க்கமாக கடத்தப்படும் போதை மருந்துகள் பறிமுதல், மற்றும் அரேபிய கடல் வழியாக செல்லும் இந்திய வியாபார கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்ளையர்களுக்கு எதிரான ரோந்துகள் உள்ளிட்டவற்றிலும் மேற்குக் கடற்படைப் பிரிவு ஈடுபட்டு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...