செய்தியாளர் :-எஸ்.மணிகண்டன் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம்
சட்டமன்ற தொகுதி 1962 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து பிரிந்து உருவானது. விவசாயிகளும், மீனவர்களும், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. 2 லட்சத்து 42 ஆயிரத்து 278 மக்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 342 வாக்காளர்களில் ஆண்கள் 94275. பெண்கள் 98067.
2016 தேர்தலில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் அதற்கு முன் 1962 ல் இராமலிங்கம் (காங்கிரஸ்) 1967 ல் பி.வி.தேவர் (காங்கிரஸ்) 1971 மற்றும் 1977 மற்றும் 1984 ல் எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க) 1980 ல் எம்.எஸ். மாணிக்கம் (அ.தி.மு.க) 1989 மற்றும் 1991 ல் பி.வி.ராஜேந்திரன் (காங்கிரஸ்) 1996 மற்றும் 2001 மற்றும் 2006 ல் எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க) 2011 ல் என்.வி.காமராஜ் (அ.தி.மு.க) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள்11 முறை தேர்தல் நடைபெற்.6 முறை திமுக வென்றுள்ளது. நீண்ட காலம் மக்களின் எதிர்பார்ப்பு உப்பளத் தொழிற்சாலை வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஹெக்டேரில் சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் 2 தனியார் தொழிற்சாலைகளும் கடந்த 50 ஆண்டு கடந்தும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். 30 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.
உப்பை மூலப்பொருளாகக் கொண்டு காஸ்டிக் சோடா தொழிற்சாலை தொடங்கப்படும் என அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். ஆனால் எந்தவிதமான பணியும் தொடங்கவில்லை. உற்பத்தியாகும் உப்பு வெளி மாநில ஏற்றுமதிக்கு அகல ரயில்பாதை இல்லை கடந்த 15 ஆண்டுகளாக அகல ரயில் பாதை அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது.
மேலும் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மா உற்பத்தியில் ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் டன் பல வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்கின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான மாங்கூழ் தயார் செய்யும் தொழிற்சாலை தேவை, மேலும்
5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடியை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.சென்ட் தொழிற்சாலை தேவை. விவசாயத்தை நம்பிய கடைமடைப் பாசனப் பகுதி.. ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட்டு முதல்கட்டமாக 500 பெண்கள் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் உணவு பூங்காவும் அமைய உள்ளது சுதந்திரம் அடைந்ததிலிருந்து இது வரை தீர்க்கப்படாத ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தென்னடார், சிறுதலைக்காடு, கடினல்வயல், கோடியக்கரை, கோடியக்காடு, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவேண்டும்
திமுக ஆட்சிக்காலத்தில்கொண்டு வந்த வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டம்தான் இன்னமும் இயங்கி வருகிறது. அந்த குடிநீர் போதுமானதாக இல்லை அதை மேம்படுத்தி முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
வேட்டைக்காரணிருப்பு பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகபெரிய நெல் சேமிப்பு கிடங்காக ரூபாய் 164 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டது கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்து தற்போது மீண்டும் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும்
இந்தப் பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர் எந்த ஒரு மீனவ கிராமத்திலும் ஒரு மீன்பிடி துறைமுகம் கூட வரவில்லை.
வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.110 கோடியிலும், ஆறுகாட்டுத்துறை ரூ.150 கோடியிலும் தூண்டில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டு வெள்ளப்பள்ளத்தில் மட்டும் தற்போது பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கும் கோடியக்கரை கடல் பகுதியில் 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஜட்டி ஒன்று கட்டப்பட்டது. மீனவர்களின் படகுகளை கடல் ஆலையில் இருந்து பாதுகாப்பாக ஓரமாக அதை நிறுத்திக் கொள்வதற்கான வசதி இருந்தது.
தற்போது அந்த ஜட்டி முற்றிலும் அழிந்துவிட்டது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் முதல் மார்ச் வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர் 40 ஆண்டு காலமாக நடைபெறும் இந்த மீன்பிடி சீசன் காலத்தில் படகுகளை நிறுத்துவதற்கு ஒரு தூண்டில் வளைவு அல்லது ஒரு சிறிய துறைமுகம் கட்டவேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.வேதாரண்யம் தொகுதியை பொறுத்தவரையில் தற்போதைய எம்.எல்.ஏ வும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் அதிமுக பாஜக பா ம க கூட்டணியில் போட்டியிட அவருக்கு ஆதரவாக உள்ள மக்களை விட எதிர்ப்பாக உள்ள மக்கள் அதிகம் என்பது நாம் பல இடங்களில் பேசியபோது புரிந்நது அவருக்கு எதிராகக்
களம் காணும திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் மக்களின் தனித்த செல்வாக்குப் பெற்றிருந்த மூன்று முறை வென்ற எஸ.கே.வேதரத்தினம் போட்டியிடுகிறார். தவிர,அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் ம நீ மையம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்
தற்போதய சூழலில் வேதாரண்யம் மக்கள் யாரை விரும்புகிறார்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்ற கேள்வியை நமது செய்தியாளர் மக்கள் மத்தியில் முன்வைத்த போது அப்பகுதிமக்களில் மீனவர்கள் தொழிலாளர்கள் மற்றும் அணைத்து ஜாதி மக்கள் ஆதரவுடன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் வெற்றி வாகை சூடுவார் என்ற நிலை தான் உள்ளது. அமமுக சார்பில் போட்டியிடும் பி.எஸ.ஆறுமுகம் பிரிக்கும் 7 சதம் வாக்குகள் திமுக வேட்பாளருக்கு சாதகமான சூழ்நிலை தான்
கருத்துகள்