முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் மனதில் நல்ல மாற்றம் வேதாரண்யத்தில் வெற்றி வாகை சூடும் திமுக

 செய்தியாளர் :-எஸ்.மணிகண்டன்        நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம்





சட்டமன்ற தொகுதி 1962 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து பிரிந்து உருவானது.  விவசாயிகளும், மீனவர்களும், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. 2 லட்சத்து 42 ஆயிரத்து 278 மக்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 342 வாக்காளர்களில் ஆண்கள் 94275. பெண்கள் 98067.

2016 தேர்தலில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும்  அதற்கு முன் 1962 ல் இராமலிங்கம் (காங்கிரஸ்) 1967 ல் பி.வி.தேவர் (காங்கிரஸ்) 1971 மற்றும் 1977 மற்றும் 1984 ல் எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க) 1980 ல் எம்.எஸ். மாணிக்கம் (அ.தி.மு.க) 1989 மற்றும் 1991 ல் பி.வி.ராஜேந்திரன் (காங்கிரஸ்) 1996 மற்றும் 2001 மற்றும் 2006 ல் எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க)  2011 ல் என்.வி.காமராஜ் (அ.தி.மு.க) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள்11 முறை தேர்தல் நடைபெற்.6 முறை திமுக வென்றுள்ளது. நீண்ட காலம் மக்களின் எதிர்பார்ப்பு உப்பளத் தொழிற்சாலை வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஹெக்டேரில் சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் 2 தனியார் தொழிற்சாலைகளும் கடந்த 50 ஆண்டு கடந்தும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். 30 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

உப்பை மூலப்பொருளாகக் கொண்டு காஸ்டிக் சோடா தொழிற்சாலை தொடங்கப்படும் என அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். ஆனால்  எந்தவிதமான பணியும் தொடங்கவில்லை. உற்பத்தியாகும் உப்பு வெளி மாநில ஏற்றுமதிக்கு அகல ரயில்பாதை இல்லை கடந்த 15 ஆண்டுகளாக அகல ரயில் பாதை அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது.

மேலும் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மா உற்பத்தியில் ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் டன்  பல வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்கின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான மாங்கூழ் தயார் செய்யும் தொழிற்சாலை தேவை, மேலும்

 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடியை நம்பி  10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.சென்ட் தொழிற்சாலை தேவை. விவசாயத்தை நம்பிய கடைமடைப் பாசனப் பகுதி.. ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட்டு முதல்கட்டமாக 500 பெண்கள் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் உணவு பூங்காவும் அமைய உள்ளது சுதந்திரம் அடைந்ததிலிருந்து இது வரை தீர்க்கப்படாத ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தென்னடார், சிறுதலைக்காடு, கடினல்வயல், கோடியக்கரை, கோடியக்காடு, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவேண்டும்

திமுக ஆட்சிக்காலத்தில்கொண்டு வந்த வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டம்தான் இன்னமும் இயங்கி வருகிறது. அந்த குடிநீர் போதுமானதாக இல்லை அதை மேம்படுத்தி முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வேட்டைக்காரணிருப்பு பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகபெரிய நெல் சேமிப்பு கிடங்காக ரூபாய் 164 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டது  கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்து தற்போது மீண்டும் புதுப்பிக்கும் பணி  நடைபெறுகிறது. மேலும்

இந்தப் பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர் எந்த ஒரு மீனவ கிராமத்திலும் ஒரு மீன்பிடி துறைமுகம் கூட வரவில்லை.

வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.110 கோடியிலும், ஆறுகாட்டுத்துறை ரூ.150 கோடியிலும் தூண்டில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டு வெள்ளப்பள்ளத்தில் மட்டும் தற்போது பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கும் கோடியக்கரை கடல் பகுதியில் 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஜட்டி ஒன்று கட்டப்பட்டது. மீனவர்களின் படகுகளை கடல் ஆலையில் இருந்து பாதுகாப்பாக ஓரமாக அதை நிறுத்திக் கொள்வதற்கான வசதி இருந்தது.

தற்போது அந்த ஜட்டி முற்றிலும் அழிந்துவிட்டது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் முதல் மார்ச் வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர் 40 ஆண்டு காலமாக நடைபெறும் இந்த மீன்பிடி சீசன் காலத்தில் படகுகளை நிறுத்துவதற்கு ஒரு தூண்டில் வளைவு அல்லது ஒரு சிறிய துறைமுகம் கட்டவேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.வேதாரண்யம் தொகுதியை பொறுத்தவரையில்  தற்போதைய எம்.எல்.ஏ வும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் அதிமுக  பாஜக பா ம க கூட்டணியில் போட்டியிட அவருக்கு  ஆதரவாக உள்ள மக்களை விட எதிர்ப்பாக உள்ள மக்கள் அதிகம் என்பது நாம் பல இடங்களில் பேசியபோது புரிந்நது அவருக்கு எதிராகக்

களம் காணும திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் மக்களின் தனித்த செல்வாக்குப் பெற்றிருந்த மூன்று முறை வென்ற எஸ.கே.வேதரத்தினம் போட்டியிடுகிறார்.  தவிர,அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் ம நீ மையம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்

தற்போதய சூழலில் வேதாரண்யம் மக்கள் யாரை விரும்புகிறார்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்ற கேள்வியை நமது செய்தியாளர் மக்கள் மத்தியில் முன்வைத்த போது அப்பகுதிமக்களில் மீனவர்கள் தொழிலாளர்கள் மற்றும் அணைத்து ஜாதி மக்கள் ஆதரவுடன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் வெற்றி வாகை சூடுவார் என்ற நிலை தான் உள்ளது.        அமமுக சார்பில் போட்டியிடும் பி.எஸ.ஆறுமுகம் பிரிக்கும் 7 சதம் வாக்குகள் திமுக வேட்பாளருக்கு  சாதகமான சூழ்நிலை தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.