சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சென்ற வாகனம் விபத்து
க்குள்ளானது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே காலகண்மாய்என்ற இடத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி சென்ற கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது விபத்துக்குள்ளான மாவட்ட ஆட்சியர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறு காயங்களுடன் ஆட்சியர் உயிர் தப்பினார் ஆட்சியர் மதுசூதனரெட்டி காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்ய சிவகங்கையிலிருந்து புறப்பட்டு காளையார்கோவில் வழியாகச் சென்றுள்ளார்.
அப்போது காளக்கண்மாய் என்ற இடத்தில் சென்ற போது எதிரே சைக்கிளில் ஒரு சிறுவன் குறுக்காகச் செல்ல முயன்ற போது அதனைக் கண்ட கார் ஓட்டுநர் எதிர்பாராதவிதாக பிரேக்கை அதிகமாக அழுத்தியுள்ளார். இதனால் முன்பக்க டயர் வெடித்து அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வண்டி மோதி தலைக்குப்புற கவிழ்த்துள்ளது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆட்சியரை காப்பாற்றியுள்ளனர். ஆட்சியர் ஷீட் பெல்ட் போட்டுகொண்டு பயணித்துள்ளார். இதனால் ஏர் பேக் திறந்து காப்பாற்றியுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவர்.
இவரது சொந்த ஊர் கர்னூல், ஆந்திரப்பிரதேசம் ஆகும். கல்வி தகுதி: பி. டெக். பொறியியல் பட்டம். இவர் பணியாற்றிய இடங்கள் வேலூர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியர் திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் வருவாய்த் துறையில் நில நிர்வாக இணை ஆணையர் பெரு நகர சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறை இணை ஆணையர் ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக 14-11-2020 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கருத்துகள்