முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நடவடிக்கைகள் கொவிட்-19 ஐ எதிர்கொள்வதில் முக்கிய பங்கு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியில் ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நடவடிக்கைகள் கொவிட்-19 ஐ எதிர்கொள்வதில் முக்கிய பங்கு









வகிக்கின்றன. 

கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பங்களை விரைவாகக் கொண்டுவருவதிலும், தொற்றுநோயைச் சமாளிக்க தேசத்திற்கு உதவுவதிலும் அறிவியல் அடிப்படையிலான தொடக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் திறன்களையும், இந்த பிரமாண்டமான போரை அனைத்து முனைகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளையும் ஒருங்கிணைத்ததால், பல அறிவியல் அடிப்படையிலான தொடக்கங்கள் (அ) முயற்சிகள் புதிய தொழில்நுட்பங்களை வெளிக்கொண்டு, தற்போதுள்ள தொழில்நுட்பங்களை மீண்டும் உருவாக்கி, அதன் செயல்பாடுகளை அளவிட்டு, அரசாங்கத்தின் ஆதரவுடன் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த காலகட்டத்தில் நாட்டை மேம்படுத்தும் வகையில் பிபிஇ கவச உடைகள், முகக்கவசங்கள், சோதனைக்கான உள்கட்டமைப்பு, தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்க தற்போதுள்ள திறன், உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் நியாயமான முறையில் நிர்வகிக்கப்பட்டன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நிதி உதவி, பல புதிய (அ) தொடக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை, சோதனைக் கருவிகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், உடல் வெப்ப பரிசோதனைக் ஸ்கேனர்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை சந்தைப்படுத்திக்கொள்ள உதவியது. COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் இத்தகைய நிதி உதவியை வழங்குவதற்காக தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளைத் தேடும் நிறுவனங்களின் திட்டங்களுக்கான அழைப்பால் இது தூண்டப்பட்டது. அழைப்பால் ஊக்கப்படுத்தப்பட்ட, பல புதிய (அ) தொடக்க நிறுவனங்கள் புதுமையான திட்டங்களை முன்வைத்தன, இது சிறிய அறிவியல் அடிப்படையிலான முயற்சிகளால் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்க உதவியது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட புதுமையான தீர்வுகளைக் கொண்டு வந்தது.

காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காண்பிக்கும் நபர்களின் மாதிரிகளைத் திரையிட்டு கண்டறிந்து நிகழ்நேர பி.சி.ஆர் (real-time PCR) அடிப்படையிலான மூலக்கூறு கண்டறியும் கருவியை உருவாக்கிய உள்ளூர் நிறுவனம் புனேவைச் சேர்ந்த மைலேப் (Mylab Discovery) டிஸ்கவரி ஆகும். ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஸ்கோவால் (CDSCO) அங்கீகரிக்கப்பட்டு இந்த கருவி உருவாக்கப்பட்டதோடு, மிகக் குறுகிய காலத்தில் பயன்படுத்தப்பட்டது. TDB இன் ஆதரவுடன், கருவி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு மிகக்குறுகிய காலத்தில் நாளொன்றுக்கு 30,000 சோதனைகள் 2 லட்சம் சோதனைகள் வரை அதிகரித்தது.

மேலும், இந்த நிறுவனம் அதிக உணர்திறன் கொண்ட ஆன்டிஜென் கருவி (antigen kit) ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கருவி ஆர்டி-பி.சி.ஆர் சோதனை மற்றும் காம்பாக்ட் எக்ஸ்எல் ஆகியவற்றை அணுக முடியாத தொலைதூர பகுதிகளில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை அடைந்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பு ஆய்வகங்களை வடிவமைத்து மகாராஷ்டிரா, கோவா மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று இரண்டாவது அலைகளின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நடமாடும் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகங்களை அமைத்த்து.

இந்தியாவின் முதல் சுய சோதனைக் கருவி மற்றும் அதன் வணிகமயமாக்கலை அதிகரிக்கும் “கோவிசெல்ஃப்” என்ற வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளும் கருவியை சமீபத்தில் உருவாக்கிய மைலேப்ஸ், இந்த நெருக்கடியின் போது சிறந்த நிறுவனமாக (யூனிகார்னாக) உருவெடுத்துள்ளது, மேலும் இந்த நிறுவனம் COVID-19 க்கான சோதனை தொடர்பாக மேலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...