பிரதமர் அலுவலகம் மும்பை மேற்கு மலட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு கருணைத் தொகையை பிரதமர் அறிவித்தார்
மும்பை மேற்கு மலட் பகுதியில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:‘மும்பை மேற்கு மலட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய நான் பிராத்திக்கிறேன்: பிரதமர் @narendramodi’’
உயிரழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகையாக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
கருத்துகள்