நடிகை ரோஜாவின் பதவி பறிப்பு. ஆந்திரப் பிரதேச முதல்வர் ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை.
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் ரோஜா அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்டது.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த அதிரடி உத்தரவால் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா வகித்து வந்த தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெருபான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற நிலையில், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் நடிகை ரோஜா இவர் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் நடிகை.ரோஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்பதியில் இருந்து வந்தனர்.
இதை அறிந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறை தலைவராக ரோஜாவை நியமித்த நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்தார். அதன்படி எம்எல்ஏக்கள் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும் பறித்துள்ளார். அதில், எம்எல்ஏ ரோஜா வகித்து வந்த ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுமென ஜெகன்மோகன் பதவியேற்பு விழாவின்போது தெரிவித்திருந்தார். அதன்படி அடுத்து வரக்கூடிய இரண்டரை ஆண்டுகளுக்கு விரைவில் மாற்றி அமைக்கக்கூடிய அமைச்சரவையில் ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா எனும் எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உள்ளது.
கருத்துகள்