தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குழுவின் கூட்டத்திற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் தலைமை வகித்தார்
உள்துறை அமைச்சகம் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குழுவின் கூட்டத்திற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் குமார் மிஷ்ரா தலைமை வகித்தார்
புதுதில்லியில் இன்று நடைபெற்ற தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குழுவின் கூட்டத்திற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் குமார் மிஷ்ரா தலைமை வகித்தார். நாடு முழுவதிலும் இருந்து தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை திரு அஜய் குமார் மிஷ்ரா கவுரவித்தார்.
கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய அமைச்சர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் கொண்டாடப்பட்டு வருவதை குறிப்பிட்டார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் விடுதலை போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டதாகவும், அவர்களது மதிப்பிட முடியாத பங்களிப்பை நாடு என்றைக்கும் மறக்காது என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய திரு மிஷ்ரா, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆகியோரின் அறிவுறுத்தல்களின் படி, சுதந்திர போராட்ட வீரர்களின் நலன் மீது அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், சிறப்பான வசதிகளை அவர்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கூட்டத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரர்கள் வழங்கிய ஆலோசனைகளுக்கு செவிமடுத்த அமைச்சர், அவை விரைந்து பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள்