முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அவசரகால கடன் விவரம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அவசரகால கடன் விவரம்




நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ரூ 3 லட்சம் கோடி பிணையில்லா தானியங்கி கடன்கள், அழுத்தத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ 20,000 கோடி துணை கடன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிதியின் கீழ் ரூ 50,000 கோடி நிதி, ரூ 200 கோடி வரையிலான கொள்முதல்களுக்கு சர்வதேச ஒப்பந்தங்கள் கோரப்படாது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு வலுவூட்டுவதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய அரசு எடுத்துள்ளது.

மேலும், 2021 ஜூலை 2 அன்று, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ரூ 2.73 லட்சம் கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ 2.14 கோடி வழங்கப்பட்டு விட்டது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கொவிட்-19 பெருந்தொற்று தற்காலிகமாக பாதித்தது. அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பை தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் ஆய்வு செய்தன.

தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் ஆய்வின் படி 91 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. பணப்புழக்கம், புதிய ஆர்டர்கள், தொழிலாளர்கள், போக்குவரத்து மற்றும் மூலப் பொருட்கள் கிடைத்தல் ஆகியவை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஐந்து முக்கிய பிரச்சினைகள் என்றும் கண்டறியப்பட்டது.

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் ஆய்வின் படி, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் 88 சதவீத பயனாளிகள் கொவிட்-19 காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். 12 சதவீதம் பேர் கொவிட்-19 காரணமாக தாங்கள் பலனடைந்ததாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டதாக தெரிவித்த 88 சதவீதம் பேரில் 57 சதவீதம் நபர்கள் தங்களது நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட காலத்தில் சிறிது காலத்திற்கு இயங்கவில்லை என்றும், 30சதவீதம் பேர் உற்பத்தி மற்றும் வருவாய் குறைந்ததாகவும் கூறினார்கள்.

பலனடைந்ததாக தெரிவித்த 12 சதவீதம் பேரில் 65 சதவீதம் நபர்கள் தங்கள் வணிகம் மேற்குறிப்பிட்ட காலத்தில் அதிகரித்ததாக கூறினர்.

46.60 சதவீதம் பேர் தாங்கள் முழு ஊதியங்களை பெற்றதாகவும், 42.54 சதவீதம் பேர் ஓரளவு ஊதியம் பெற்றதாகவும், 10.86 சதவீதம் பேர் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் எதையும் பெறவில்லை என்றும் கூறினர்.

நிதி ஆதரவு, வட்டி தள்ளுபடி மற்றும் தங்கள் பொருட்களுக்கு சந்தைப்படுத்துதல் ஆதரவு தேவை என்று பெரும்பாலான பயனாளிகள் தெரிவித்தனர்.

மத்திய புள்ளியியல் அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் அனைத்திந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட மொத்த பங்களிப்பு முறையே 30.5 மற்றும் 30 சதவீதம் ஆகும்.

2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் அனைத்திந்திய மொத்த உற்பத்தி மதிப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு முறையே 36.9 மற்றும் 36.9 சதவீதம் ஆகும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கொவிட்-19 பெருந்தொற்று தற்காலிகமாக பாதித்தது. அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் 8,46,650 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 45,851.22 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் 8,36,065 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 36,954.72 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22-ம் ஆண்டில் 2021 ஜூன் வரை 2,44,300 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 13,315.95 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காதியின் இரண்டு புதிய பொருட்களான காதி குழந்தைகள் ஆடை மற்றும் காதி கைவினை காகித காலணிகளை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் 2021 ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தியது.

முதல் முறையாக, பிறந்த குழந்தைகள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆடைகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. கைகளால் செய்யப்பட்ட மென்மையான பருத்தி துணியில் குழந்தைகளின் மேனியில் ஒவ்வாமை ஏதும் ஏற்படாத வகையில் இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் கைவினைக் காகித காலணிகளையும் காதி நிறுவனம் உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மலிவான விலையிலும் இந்த காலணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பருத்தி மற்றும் பட்டு கந்தல்கள் மற்றும் வேளாண் கழிவுகள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து இந்தக் காகிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைவான இந்த காலணிகளை பயணத்தின்போதும், வீடுகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த