முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அவசரகால கடன் விவரம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அவசரகால கடன் விவரம்




நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ரூ 3 லட்சம் கோடி பிணையில்லா தானியங்கி கடன்கள், அழுத்தத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ 20,000 கோடி துணை கடன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிதியின் கீழ் ரூ 50,000 கோடி நிதி, ரூ 200 கோடி வரையிலான கொள்முதல்களுக்கு சர்வதேச ஒப்பந்தங்கள் கோரப்படாது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு வலுவூட்டுவதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய அரசு எடுத்துள்ளது.

மேலும், 2021 ஜூலை 2 அன்று, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ரூ 2.73 லட்சம் கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ 2.14 கோடி வழங்கப்பட்டு விட்டது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கொவிட்-19 பெருந்தொற்று தற்காலிகமாக பாதித்தது. அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பை தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் ஆய்வு செய்தன.

தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் ஆய்வின் படி 91 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. பணப்புழக்கம், புதிய ஆர்டர்கள், தொழிலாளர்கள், போக்குவரத்து மற்றும் மூலப் பொருட்கள் கிடைத்தல் ஆகியவை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஐந்து முக்கிய பிரச்சினைகள் என்றும் கண்டறியப்பட்டது.

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் ஆய்வின் படி, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் 88 சதவீத பயனாளிகள் கொவிட்-19 காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். 12 சதவீதம் பேர் கொவிட்-19 காரணமாக தாங்கள் பலனடைந்ததாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டதாக தெரிவித்த 88 சதவீதம் பேரில் 57 சதவீதம் நபர்கள் தங்களது நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட காலத்தில் சிறிது காலத்திற்கு இயங்கவில்லை என்றும், 30சதவீதம் பேர் உற்பத்தி மற்றும் வருவாய் குறைந்ததாகவும் கூறினார்கள்.

பலனடைந்ததாக தெரிவித்த 12 சதவீதம் பேரில் 65 சதவீதம் நபர்கள் தங்கள் வணிகம் மேற்குறிப்பிட்ட காலத்தில் அதிகரித்ததாக கூறினர்.

46.60 சதவீதம் பேர் தாங்கள் முழு ஊதியங்களை பெற்றதாகவும், 42.54 சதவீதம் பேர் ஓரளவு ஊதியம் பெற்றதாகவும், 10.86 சதவீதம் பேர் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் எதையும் பெறவில்லை என்றும் கூறினர்.

நிதி ஆதரவு, வட்டி தள்ளுபடி மற்றும் தங்கள் பொருட்களுக்கு சந்தைப்படுத்துதல் ஆதரவு தேவை என்று பெரும்பாலான பயனாளிகள் தெரிவித்தனர்.

மத்திய புள்ளியியல் அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் அனைத்திந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட மொத்த பங்களிப்பு முறையே 30.5 மற்றும் 30 சதவீதம் ஆகும்.

2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் அனைத்திந்திய மொத்த உற்பத்தி மதிப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு முறையே 36.9 மற்றும் 36.9 சதவீதம் ஆகும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கொவிட்-19 பெருந்தொற்று தற்காலிகமாக பாதித்தது. அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் 8,46,650 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 45,851.22 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் 8,36,065 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 36,954.72 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22-ம் ஆண்டில் 2021 ஜூன் வரை 2,44,300 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 13,315.95 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காதியின் இரண்டு புதிய பொருட்களான காதி குழந்தைகள் ஆடை மற்றும் காதி கைவினை காகித காலணிகளை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் 2021 ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தியது.

முதல் முறையாக, பிறந்த குழந்தைகள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆடைகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. கைகளால் செய்யப்பட்ட மென்மையான பருத்தி துணியில் குழந்தைகளின் மேனியில் ஒவ்வாமை ஏதும் ஏற்படாத வகையில் இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் கைவினைக் காகித காலணிகளையும் காதி நிறுவனம் உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மலிவான விலையிலும் இந்த காலணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பருத்தி மற்றும் பட்டு கந்தல்கள் மற்றும் வேளாண் கழிவுகள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து இந்தக் காகிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைவான இந்த காலணிகளை பயணத்தின்போதும், வீடுகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...