மின்சார பரிமாற்ற இணைப்பில் படியும் மாசின் அளவைக் கண்டறிய சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
மின்சார பரிமாற்ற இணைப்பில் படியும் மாசின் அளவைக் கண்டறிவதற்காக ஓர் தரமான செயல்முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
மின்சார பரிமாற்ற இணைப்பில் படியும் மாசின் அளவைக் கண்டறிவதற்காக ஓர் தரமான செயல்முறையை சென்னை இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மாசு சம்பந்தமான குறைந்த மின்னழுத்தம், மின்தடை மற்றும் அமைப்பின் சரிவுக்கு வழிவகுக்கும். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலாக இருக்கும் மாசடைந்துள்ள மின்தேக்கியை இயக்கத்தின்போது சுத்தம் செய்வதால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்த முடியும்.
இதற்கு மாற்றாக, லேசரால் தூண்டப்பட்ட செயலிழப்பு ஸ்பெக்ட்ரோஸ்கோபியின் அடிப்படையில் ஓர் நேர்த்தியான தீர்வை இந்தக் கழகத்தின் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் திரு ஆர் சாரதி, பொறியியல் வடிவமைப்புத் துறை பேராசிரியர் திரு என்.ஜே. வாசா ஆகியோரின் ஆராய்ச்சிக் குழுக்கள் உருவாக்கியுள்ளன. ஐஓபி- மெஷர்மென்ட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற சஞ்சிகையில் இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய எரிசக்தி அமைச்சகம், பெங்களூருவில் உள்ள மத்திய எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக இதற்கு நிதி உதவி அளித்தது.
தற்போது 40 மீட்டர் தொலைவிற்குள் ஏற்பட்டிருக்கும் மாசை லேசர் கதிரைப் பயன்படுத்தி கண்டறியலாம். இதனை 100 மீட்டர் தூரமாக நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் தொழில்நுட்பம் மற்றும் மின்சார அமைப்புமுறை இணைப்பில் அதன் பயன்பாட்டின் செயல் விளக்கத்தை எடுத்துரைக்க, தேசிய அனல் மின் கழகம், எரிசக்தித் தொகுப்பு மற்றும் இதர நிறுவனங்களை அணுக சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சி குழு திட்டமிட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சியின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள் பின்வருமாறு:
மின்சார விநியோகத்திற்கு இடையூறு அளிக்காத வகையில் இணையதளம் வாயிலான கண்காணிப்பு.
துரிதமான மற்றும் தொலைநிலை அளவீடு.
பாதிக்காத/ அழிவு ஏற்படாத அளவீடு.
மிகவும் குறைந்த செலவிலான நடைமுறை.
கருத்துகள்