முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை திகில் ! ஊரக வளர்ச்சித் துறையில் ஊழல் பெருச்சாளிகள் சோதனையில் சிக்கிய பலகோடி ஆவணங்கள் மற்றும் நகை,ரொக்கம்

புதுக்கோட்டை திகில் ஊரக வளர்ச்சித் துறையில ஒரு ஊழல் பெருச்சாளி சோதனையில் சிக்கிய பலகோடி ஆவணங்கள் மற்றும் நகை,ரொக்கம்  வளர்ச்சித் துறையில ஒரு கடைநிலை உதவியாளரின் சொத்து 15 கோடி.  


அப்படியானால் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த வேலுமணி யின் சொத்து ?. புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை. நடத்தினர். புதுக்கோட்டை சார்லஸ் நகரிலுள்ள ஊரக வளர்ச்சித் துறையில் பணி புரியும் முருகானந்தம் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்..


இவர் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய தொடர்பில் இருந்தாக தகவல் வெளியாகியுள்ளதுரூ.15¾ கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு:அரசு ஊழியரின் வீடு உள்பட 6 இடங்களில் நடந்த  சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

அவரது வீடு, சகோதரர்கள் வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனையில். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முருகானந்தம் மனைவி காந்திமதி புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார்.


முருகானந்தம் சகோதரர் பழனிவேல் ஒப்பந்ததாரர். மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு கடுக்காகாட்டில் தனித்தனியே வீடுகள் உள்ளது. பழனிவேல் அரசு ஒப்பந்த வேலைகளை எடுத்துச் செய்து வந்தார். கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் நகராட்சி, உள்ளாட்சிகளில் எல்.இ.டி., சூரிய ஒளி மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்து வந்த நிலையில் முருகானந்தம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தததையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.15 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரத்து 381 மதிப்பில் சொத்து சேர்த்ததாக முருகானந்தம், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர்  வழக்குப்பதிவு செய்தனர்.இலஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையில் ஆய்வாளர் பீட்டர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை 6.30 மணி அளவில் புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வீட்டில் முருகானந்தத்தின் மனைவி காந்திமதி மற்றும் மகன், மகள் இருந்துள்ளனர்.


ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய போது வீட்டின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதேபோல புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள முருகானந்தத்தின் சகோதரர் பழனிவேல் வணிக வளாக அலுவலகத்திலும், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள விஜய் மகளிர் தங்கும் விடுதியிலும் சோதனை நடந்தது.  முருகானந்தத்தின் சொந்த ஊரான கடுக்காகாட்டில் உள்ள அவரது மனைவியும் ஊராட்சி மன்றத் தலைவருமான காந்திமதி, மற்றும் சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடுகளில் திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், சிவகங்கை துணை கண்காணிப்பாளர் மணிமன்னன் ஆகியோர் தலைமையிலான இலஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 7 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை சோதனை நடத்தினர். 


ஒரே நேரத்தில் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.அருகிலுள்ள  மாவட்டங்களிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்

சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தத்தின் வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான ஒரு வளாகத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின், குடோன் உள்ளது. அதிலும் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். முருகானந்தத்தின் மகன் கண்ணன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், அதற்காகவும், மற்றவர்கள் பயிற்சி பெறும் வகையில் தனியாக இந்த பயிற்சி மையம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


இந்த மையம் மற்றும் குடோனின் மதிப்பை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டு முருகானந்தத்தின் மகன் கண்ணன், மனைவி காந்திமதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கடுக்காகாட்டில் நேற்று மதியம் சோதனையை முடித்து விட்டு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் புறப்பட்டனர். 

சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தத்தின் வீட்டில் நடந்த சோதனை நேற்று இரவு 9.30 மணிக்கு மேலும் நீடித்தது.

இந்த சோதனையால் புதுக்கோட்டையில் நேற்று பரபரப்பாகப் பேசப்பட்டது.. பகுதி நேர கிளார்க்காக அரசுப் பணியில் சேர்ந்து உதவியாளரான

முருகானந்தம் குவித்த சொத்துகள் விவரம் பற்றி முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் உதவியாளராக  4 செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் முருகானந்தம். 28-டிசம்பர்-2015-ஆம் ஆண்டு முதல் 3-செப்டம்பர்-2019-ஆம் ஆண்டு வரை உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். முருகானந்தத்தின் மனைவி காந்திமதி முள்ளுக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக  2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பதவி வகிக்கிறார். இவர்கள் இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள. முருகானந்தத்தின்  சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா முள்ளுக்குறிச்சி ஆகும் வேப்பங்குடி ஊராட்சியில் பகுதி நேர கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்து கடந்த 30-அக்டோபர்-1996-ஆம் ஆண்டு முதல் 31-ஆகஸ்ட்-2016-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

அதன்பின் ஊராட்சி உதவியாளர் கிரேடு-2 ஆக வேப்பங்குடி ஊராட்சியில் 1-செப்டம்பர்-2006 முதல் 3-ஜூன்-2013-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் உதவியாளராக பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்தில் 28-டிசம்பர்-2015 முதல் 3-செப்டம்பர்-2019- வரை வேலைபார்த்தார். 

முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோர் கடந்த 1-ஜனவரி-2017 முதல் 30-ஜூன்-2020 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். இவர்கள் புதுக்கோட்டை நகரம் மற்றும் மாவட்ட பகுதியில் வீடு மற்றும் விவசாய நிலங்களை வாங்கியுள்ளனர். கடந்த 2107-ஆம் ஆண்டில் சார்லஸ் நகரில் ஒரு வீட்டு மனையும், 2018-ஆம் ஆண்டில் திருக்கோகர்ணத்தில் ஒரு பிளாட், 2019-ஆம் ஆண்டில் சாந்தநாதபுரத்தில் ஒரு வீட்டு மனையும், கடந்த 2020-ஆம் ஆண்டில் சத்தியமூர்த்தி சாலையில் வணிக வளாகம், அரண்மனை நகரில் 2 பிளாட், ஒரு வீட்டு மனையும், சாந்தநாதபுரத்தில் ஒரு பிளாட் வாங்கியுள்ளார்.  2017 முதல் 2020-ஆம் ஆண்டு வரை ரூ.12 கோடியே 83 லட்சத்து 97 ஆயிரத்து 401 மதிப்பில் 38.738 சதுர அடி இடம் வாங்கியுள்ளார். மேலும் ரூ.62 லட்சம் 2 ஆயிரத்து 499 மதிப்பில் விவசாய நிலங்களை முள்ளங்குறிச்சி, வேப்பன்குடி கிராமத்தில் வாங்கியுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டில் மனைவி பெயரில் ரூபாய்.70 லட்சத்து 43 ஆயிரத்து 921 மதிப்பில் பென்ஸ் கார் ஒன்று வாங்கியிருக்கிறார்கள். முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முகாந்திரம் உள்ள நிலையில்


முருகானந்தம் உதவியாரளாக புதுக்கோட்டையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதாக சம்பந்தப்பட்ட துறையில் கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த கடிதத்தை நிர்வாகம் நிராகரித்துள்ளது. மேலும் அவரை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர். இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவர் புதுக்கோட்டையில் பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் ஆதரவாளரான இவர் மீது இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் முருகானந்தம், கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான வேலுமணி ஆதரவாளர் எனக்கூறப்படுகிறது. அவர் மூலம் கடந்த ஆட்சியில் பல ஒப்பந்தங்களை தனது சகோதரர் பெயரில் எடுத்து பணிகள் மேற்கொண்டதாகவும்  பேசப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த முன்னாள் அமைச்சர் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்திய போது புதுக்கோட்டையிலும் சோதனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

புதுக்கோட்டை சார்லஸ் நகரில் முருகானந்தம் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நேற்று காலையில் தொடங்கி இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. இந்த சோதனையின்போது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர். கூட்டம் கூடிய நிலையில் காவலர்கள் அவர்களை விரட்டினர்.

இதேபோல் முள்ளங்குறிச்சியில் உள்ள காந்திமதி முருகானந்தம் வீட்டின் முன் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து புகார் மனு தெரிவிக்க திரண்ட பொதுமக்களை  சோதனை நடைபெறுவது குறித்துக் கூறி அனுப்பி வைத்தனர். 

16 மணி நேரம் நடந்த சோதனையில் இந்த ஊழல் பேர்வழிகளிடமிருந்து 83 பவுன் நகைகள், 3 கிலோ 700 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.46 ஆயிரத்து 160 ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர். மற்ற இடங்களில் சோதனை நிறைவடைந்ததில் அங்கு கைப்பற்றப்பட்டவை குறித்து  எதுவும் தெரிவிக்கவில்லை. சோதனை 16 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  இதில் பொதுநீதி ஒரு அரசு ஊழியர் தனது பெயரில் சொத்து வாங்குவதற்கு முன் உயர்அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு அனுமதி இல்லாமல் சொத்து வாங்குவது குற்றம் 


எனத் தெரிவிக்கின்ற .அரசாணை எண்:39. பணியாளர் மற்றும்.நிர்வாக சீர்திருத்தத் துறை (ஏ).நாள். 9-03-2010 ஆம் தேதி நகல் படி இவர் மீது நடவடிக்கை எடுத்தாலே தண்டனை வரும், அப்படி இருக்க ஒரு கடைநிலை அரசு ஊழியர் இவர் 


என்ன என்ன பண்ணியிருக்கிறார் எனப் பாருங்கள் வாசகர்களே  மக்களே !


மகனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம். 

மகள் கல்லூரி செல்ல பென்ஸ் கார். 

3 ஆண்டுகளில் 1260 சதவீதம் சொத்து மதிப்பு அதிகரிப்பு. 

ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளராக இருப்பவராலேயே இவ்வளவு சொத்துக்கள் குவிக்க முடிகிறது என்றால் அந்த துறை அமைச்சராக இருந்தவர் என்னவெல்லாம் செய்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தக் கொடுமைகளை நாம் அனுமதிக்கப் போகிறோம்? என்பதே எழுவினா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த