ஹோட்டல் மேலாண்மை முதல் தரநிலை கிளப் தென் பிராந்திய துணை தலைமை இயக்குனர் யு.எஸ்.பி யாதவ் தொடங்கி வைத்தார்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (தென் பிராந்தியம் - சென்னை) புதிய துணை இயக்குனர் ஜெனரலாக, ஸ்ரீ யு எஸ் பி யாதவ் விஞ்ஞானி – எஃப், இன்று (2 செப்டம்பர் 2021) பதவி ஏற்றுக் கொண்டார்.
தெற்கு பிராந்திய அலுவலகத்தின் அதிகார வரம்பு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றின் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.
இந்திய தர நிர்ணய அமைவனத்தில், ஸ்ரீ யு எஸ் பி யாதவ், பெங்களூரு, டெல்லி, கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். மேலும் துணை இயக்குநர் ஜெனரலாக (தெற்கு மண்டலம்) பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் புதுடில்லியில் தலைவர் ( மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் உரிமம் ), மற்றும் கிழக்கு பிராந்திய ஆய்வகம் தலைவராக தனது கடமையை நிறைவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல், திரு. எச். அஜய் கன்னா, துணை இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தரநிலை கிளப்: ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தில் இந்திய தரநிலை அலுவலகம்(பிஸ்) தொடங்கியது
ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தில், முதல் தரநிலை கிளப்-ஐ, சென்னையில் உள்ள இந்திய தரநிலை அலுவலகம்-1 (பிஸ்) இன்று தொடங்கியது
இந்த தரநிலை கிளப்-ஐ இந்திய தரநிலை அலுவலகத்தின் தெற்கு பிராந்திய துணை தலைமை இயக்குனர் திரு யு.எஸ்.பி யாதவ் தொடங்கி வைத்தார்.
ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தின் முதல்வர் திருமதி ஆர்.பரிமளா வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் இந்த மையத்தில் தரநிலை கிளப் அமைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
தரநிலை மற்றும் தரம் குறித்த மாணவர்களின் உணர்வை தூண்டுவதுதான் இந்த கிளப்பின் நோக்கம் எனவும், இதை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.
இந்திய தரநிலை சென்னை கிளை அலுவலகத்தின்-1 தலைவியும், ‘இ’ பிரிவு விஞ்ஞானியுமான திருமதி ஜி.பவானி, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்து கூறினார் மற்றும் தரநிலை கிளப்பின் பயன்பாடு மற்றும் தரநிலை நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். இது, எதிர்கால தூண்களான மாணவர்களின் தரநிலை உணர்வு குறித்த அம்சங்களின் பார்வையை கவரும். இந்த தரநிலை கிளப்பில், உறுப்பினர்கள் தீவிரமாக பங்காற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய தரநிலை அலுவலகத்தின் தெற்கு பிராந்திய துணை தலைமை இயக்குனர் திரு யு.எஸ்.பி யாதவ் பேசுகையில், அன்றாட வாழ்க்கையில் தரநிலை மற்றும் தரம் குறித்த தேவைகளை விளக்கினார். இந்த மையத்தின் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் உணவு தொழில்துறை மேலாளர்களாகவும், தொழில் முனைவோர்களாக இருப்பார்கள் என குறிப்பிட்ட அவர், தரநிலை கிளப்புகள் மூலம் தரப்படுத்தல் என்ற கருத்துடன் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்திய தரநிலை சென்னை கிளை அலுவலகம்-1-ன் டி பிரிவு விஞ்ஞானி திரு ஜோஸ் சார்லஸ் பேசுகையில், இந்திய தரநிலை அலுவலகத்தின் பல நடவடிக்கைகளையும், உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் இந்திய தரநிலை அலவலகம் உருவாக்கிய தரநிலைகளையும் மாணவர்களுக்கு விளக்கினார். சென்னை கிளை அலுவலகத்தின் பி பிரிவு விஞ்ஞானி ஜி.துர்கா பிரசாத் பேசுகையில், தரநிலை கிளப்பின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து தெளிவாக விளக்கினார். இந்த தரநிலை கிளப்பில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டனர். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய தரநிலை அலுவலக அதிகாரிகள் திருப்திகரமாக பதில் அளித்தனர்.
இவ்வாறு, துணை இயக்குனர் திரு எச்.அஜய் கண்ணா (மார்கெட்டிங் மற்றும் நுகர்வோர் விவகாரம்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்