முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹோட்டல் மேலாண்மை முதல் தரநிலை கிளப் தென் பிராந்திய துணை தலைமை இயக்குனர் யு.எஸ்.பி யாதவ் தொடங்கி வைத்தார்.

 இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (தென்  பிராந்தியம் - சென்னை) புதிய துணை இயக்குனர் ஜெனரலாக, ஸ்ரீ யு எஸ் பி யாதவ்   விஞ்ஞானி எஃப், இன்று (2 செப்டம்பர் 2021) பதவி ஏற்றுக் கொண்டார்.

தெற்கு பிராந்திய அலுவலகத்தின் அதிகார வரம்பு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றின் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.
இந்திய தர நிர்ணய அமைவனத்தில், ஸ்ரீ யு எஸ் பி யாதவ்பெங்களூரு, டெல்லி, கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். மேலும் துணை இயக்குநர் ஜெனரலாக (தெற்கு மண்டலம்) பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் புதுடில்லியில் தலைவர் ( மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் உரிமம் ), மற்றும் கிழக்கு பிராந்திய ஆய்வகம்  தலைவராக தனது கடமையை நிறைவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல், திரு. எச். அஜய் கன்னா, துணை இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                           முதல் தரநிலை கிளப்: ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தில் இந்திய தரநிலை அலுவலகம்(பிஸ்) தொடங்கியது

ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தில், முதல் தரநிலை கிளப்-ஐ, சென்னையில் உள்ள  இந்திய தரநிலை அலுவலகம்-1 (பிஸ்) இன்று தொடங்கியது   


இந்த தரநிலை கிளப்-ஐ இந்திய தரநிலை அலுவலகத்தின் தெற்கு பிராந்திய துணை தலைமை இயக்குனர் திரு யு.எஸ்.பி யாதவ் தொடங்கி வைத்தார்.

ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தின் முதல்வர் திருமதி ஆர்.பரிமளா வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் இந்த மையத்தில் தரநிலை கிளப் அமைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தரநிலை மற்றும் தரம் குறித்த மாணவர்களின் உணர்வை தூண்டுவதுதான் இந்த கிளப்பின் நோக்கம் எனவும், இதை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.


இந்திய தரநிலை சென்னை கிளை அலுவலகத்தின்-1 தலைவியும், ‘இ’ பிரிவு விஞ்ஞானியுமான திருமதி ஜி.பவானி, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்து கூறினார் மற்றும் தரநிலை கிளப்பின் பயன்பாடு மற்றும் தரநிலை நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். இது, எதிர்கால தூண்களான மாணவர்களின் தரநிலை உணர்வு குறித்த அம்சங்களின் பார்வையை கவரும்.  இந்த தரநிலை கிளப்பில், உறுப்பினர்கள் தீவிரமாக பங்காற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.


இந்திய தரநிலை அலுவலகத்தின் தெற்கு பிராந்திய துணை தலைமை இயக்குனர் திரு யு.எஸ்.பி யாதவ் பேசுகையில், அன்றாட வாழ்க்கையில் தரநிலை மற்றும் தரம் குறித்த தேவைகளை விளக்கினார்.  இந்த மையத்தின் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் உணவு தொழில்துறை மேலாளர்களாகவும், தொழில் முனைவோர்களாக இருப்பார்கள் என குறிப்பிட்ட அவர்,  தரநிலை கிளப்புகள் மூலம் தரப்படுத்தல் என்ற கருத்துடன் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்திய தரநிலை சென்னை கிளை அலுவலகம்-1-ன் டி பிரிவு விஞ்ஞானி திரு ஜோஸ் சார்லஸ் பேசுகையில், இந்திய தரநிலை அலுவலகத்தின் பல நடவடிக்கைகளையும், உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் இந்திய தரநிலை அலவலகம் உருவாக்கிய தரநிலைகளையும்  மாணவர்களுக்கு விளக்கினார். சென்னை கிளை அலுவலகத்தின் பி பிரிவு விஞ்ஞானி ஜி.துர்கா பிரசாத் பேசுகையில், தரநிலை கிளப்பின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து தெளிவாக விளக்கினார்.  இந்த தரநிலை கிளப்பில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டனர். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய தரநிலை அலுவலக அதிகாரிகள் திருப்திகரமாக பதில் அளித்தனர்.

இவ்வாறு, துணை இயக்குனர் திரு எச்.அஜய் கண்ணா (மார்கெட்டிங் மற்றும் நுகர்வோர் விவகாரம்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த