முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நகைக் கடன் மோசடி தனியார் நகை அடகுக்கடைக்காரர்கள் வங்கி ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு

நகைக் கடன் மோசடி


தனியார் நகை அடகுக்கடைக்காரர்கள் வங்கி ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு



தமிழகம் முழுவதும் உள்ள அந்தியோஜனா திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கியில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்து  பல ஆண்டுகளாக முறைகேடு நடைபெற்றுள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு திண்டுக்கல்லில் பேட்டி அளித்தபோது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகை அடமானம் வைத்திருப்பவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி ரூபாய்.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் .2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்கள் இல்லை. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய அந்தியோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்ததாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் எப்படி கிலோ கணக்கில் தங்கம் இருந்திருக்கும்.

கூட்டுறவு வங்கிகளில் நூதன முறைகளில் நகை கடன் மோசடி- நடந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி  அதிர்ச்சி அடைந்த நிலையில்

600 நகைக்கடன் வழங்கியதில் வங்கியில் பெரிய தவறு நடைபெற்றுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாவட்டத்திலுள்ள பாப்பையாபுரம் என்ற சொசைட்டியில் மூக்கையா என்பவர் மட்டும் 300 நகைக்கடன் பெற்றுள்ளார. இதுபோல் ஒரு சில நபர்கள் 100, 200, 300, 600 என மொத்தமாக நகைக்கடன் பெற்றுள்ளார்கள். கவரிங் நகைக்கு கடன் வழங்கியுள்ளார்கள். இப்படி விதவிதமாக மோசடி நடந்து உள்ளது

கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கடன் பெற்றவர்களுக்கும் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி பெற வருபவர்களின் தகுதியை உறுதி செய்த பின்புதான் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

தாசில்தார் அலுவலகத்தில் வட்டிக்கடை நடத்த உரிமம் பெற்ற பலர் குறைந்த முதலீடு செய்து மூன்று வட்டி அடமானம் வைப்பவர் மூலம் வாங்கி அவர்கள் நகையை தங்கள் பெயரில் வங்கியில் வைத்து பல கோடி பலவருடங்களாக சம்பாதித்த பலரை நாம் அறிவோம் அவர்கள் மீது வருமான வரித்துறை மற்றும் அதற்கு உதவியாக இருக்கும் வங்கி ஊழியர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே அணைத்து மக்கள் எதிர்பார்க்கின்றனர் காரணம் இப்படி நாம் அறிந்த வரையில் முப்பது வட்டிக் கடைகள் உள்ளன.

தனியார் நகை அடகுக்கடை நடத்தக் கூடியவர்கள் தங்களிடம் அடமானத்திற்கு வரக்கூடிய நகைகளை, கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது கிராம வங்கிகளிளோ அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அது பல மாவட்டங்களில் வங்கி அலுவலர்கள் உதவியில் நடந்துள்ளது. அவர்கள் கூடுதலாக லாபம் அடைந்துள்ளனர் என்ற  சந்தேகம் அல்ல அதில் உண்மை உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் ஆடிட்டர் உள்ளிட்ட நபர்கள் உடந்தை இது கடந்த 20 வருடமாக நடக்கும் குற்றச் செயல்களாகும்.

தமிழகத்தில் மொத்தம் ரூபாய்.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ ரூபாய்.2,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி அளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் பயிர்க்கடன் தள்ளுபடியில் 25 சதவீதம் அளவிற்கு இங்கே தள்ளுபடி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது குறைந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு அதிகளவில் பயிர்க்கடன் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யாத தரிசு நிலங்களுக்கு ரூபாய்.110 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது" இவ்வாறு அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்,.

இதனிடையே ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்தது என பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் வழங்கியதற்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் ஆய்வின்போது நகை இல்லை. நகை இல்லாத இந்த பொட்டலங்களின் நகை கடன் மதிப்பு ரூபாய்.1.98 கோடி ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில், குமாரக்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் பலர், பல செல்போன் எண்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகை கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. குமரி மாவட்டம் கீழ்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒரே நபர் 647 நகை கடன்கள் மூலம் ரூ.1.47 கோடி கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நபர் 5 பவுனுக்கு உட்பட்டு 625 நகை கடன்கள் மூலம் ரூ.1.25 கோடி கடன் பெற்றுள்ளதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஒரு சிலர் அவர்களுக்குரிய ஆதார் எண்ணை பயன்படுத்தி 538 நகை கடன்கள் மூலம் 5 பவுனுக்கு உட்பட்டு 3 ஆயிரத்து 508 கிராமுக்கு ரூ.74 லட்சம் கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் (அனைத்தும் 40 கிராமுக்கு உட்பட்டது) 2 ஆயிரத்து 808 கிராமுக்கு நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் நகை கடன் பெற்று உள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் பாப்பையாபுரம் மற்றும் சுந்தரலிங்கபுரம் ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.70 லட்சம் கடன் பெற்று உள்ளார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் நகை அடமானம் வியாபாரம் செய்யும் ஒருவர் செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கியில் 25-க்கு மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து, தகுதியின் அடிப்படையிலான உரிய பயனாளிகளைத் தவிர மற்றவர்கள் பெற்ற நகை கடன்களை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர், அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் (40 கிராம்) அளவுக்கு மேற்பட்டு நகை ஈடாக பெற்று கடன் வழங்கப்பட்டு 31-3-2021 மற்றும் 31-7-21 அன்றைய தேதியில் இருந்த நிலுவை விவரங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தபோது சில விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன

அதன் விவரம் வருமாறு:- தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் (வங்கிகளில்) 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு' அடிப்படையில் மாவட்ட வாரியிலான கடன்தாரர்கள் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ஆதார் எண் அடிப்படையில் மாவட்ட வாரியான கடன்தாரர்கள் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்ற கடன்தாரர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன்கள் பெற்ற கடன்தாரர்களின் நகை கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் நகை கடன்கள் தவணை கட்ட தவறியிருந்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகைகளை வசூலிக்க வேண்டும்" இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரவேற்பு பெறும் நிலையில் இனி இதில் வருமானவரித்துறை உரிய நடவடிக்கை இந்த அடமான பணம் பெற்று கடைநடத்திய நபர்கள் மீது தொடங்கும் போது தான் இவர்கள் கதறல் பெரிதாக கேட்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த