முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓமிக்ரான் பாதிப்புகள் மற்றும் டிசம்பர் 2021 முதல் அமலுக்கு வரும் புதிய வழிகாட்டுதல்கள்

புதிய கொவிட் வகை (ஓமிக்ரான்) பாதிப்புகள் உலகெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்தியா வெளியிட்டுள்ளது


கொவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான துடிப்புமிக்க மற்றும் ஆபத்து சார்ந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாக, 'சர்வதேச வருகைக்கான வழிகாட்டுதல்களை' மத்திய சுகாதார அமைச்சகம் 28 நவம்பர், 2021 அன்று திருத்தியுள்ளது.


புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி அனைத்து பயணிகளும் (கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும்) 'அபாயத்தில் உள்ள நாடுகள்' என அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனைக்கு கூடுதலாக விமான நிலையத்தில் வருகைக்கு பிந்தைய கொவிட்-19 சோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.


இந்த சோதனையில் தொற்று கண்டறியப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ மேலாண்மை நெறிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படுவார்கள். மேலும், அவர்களின் மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு (ஜீனோம் சீக்வென்சிங்க்) எடுக்கப்படும்.


தொற்று பாதிப்பில்லாத பயணிகள் விமான நிலையத்திலிருந்து புறப்படலாம். ஆனால், 7 நாட்களுக்கு வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும், அதைத் தொடர்ந்து, இந்தியா வந்த 8-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்துக்கொள்வதோடு, அதற்கடுத்த 7 நாட்கள் சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும்.


மேலும், ஓமிக்ரான் வகை பாதிப்புகள் கண்டறியப்படும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் தகவல்களை கருத்தில் கொண்டு, 'ஆபத்து பிரிவில்' இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 5% பேர் விமான நிலையங்களில் கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.


சர்வதேச பயணிகளின் தீவிர கண்காணிப்பு, அதிகளவில் பரிசோதனைகள், கொவிட்-19 பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளைக் கண்காணித்தல், முழு மரபணு வரிசைமுறைக்கான மாதிரிகளை சேகரிப்பது, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை  உறுதிசெய்யவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


1 டிசம்பர் 2021 முதல் அமலுக்கு வரும் புதிய வழிகாட்டுதல்களின் முழுமையான விவரங்களை https://www.mohfw.gov.in/pdf/GuidelinesforInternationalarrival28112021.pdf எனும் முகவரியில் காணலாம்.                           தென் ஆப்பிரிக்காவில் இருந்து மாறுபட்ட கொரோனா வகை ஒமிக்ரான் தொற்று பரவல்: வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


தென் ஆப்பிரிக்காவில், ‘ஒமிக்ரான்’ என்ற  மாறுபட்ட கொரோனா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.


 மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

1. தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற பி.1.1.529 என்ற மாறுபட்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 25ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தது. இந்த புதிய வகை கொரோனா கவலையளிக்க கூடியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளை அபாய பிரிவு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளிடம் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். 

3. இந்த மாறுபட்ட கொரோனா வகை அச்சுறுத்தலாக உள்ளதால், இதை சமாளிக்க, கட்டுப்பாடு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்துதல், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

4. அனைத்து நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள், குறிப்பாக அபாய பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிப்பது அவசியம். அதற்கேற்ப நாட்டில் பரிசோதனை வசதிகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியா வரும் பயணிகளை மாநிலங்கள் தீவிரமாக பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அபாய பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பாதிப்பு உறுதியானால், அவர்களின் மாதிரிகளை ‘இன்சாகாக்’ பரிசோதனை மையங்களுக்கு முறையாக அனுப்ப வேண்டும்.

5. மாறுபட்ட கொரோனா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்தால், விரிவான பரிசோதனை கட்டமைப்பை செயல்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. போதிய பரிசோதனை வசதி இல்லாவிட்டால், பாதிப்பின் உண்மையான அளவை கண்டறிவது சிரமம். அதனால் மாநிலங்கள் பரிசோதனை கட்டமைப்பை வலுப்படுத்தி, பரிசோதனை வழிகாட்டுதல்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்6. சமீபத்தில் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை தொடர்ந்து கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  பாதிப்பு உறுதியானால், கொரோனா வைரஸ் வகையை கண்டறிய அதன் மாதிரிகளை இன்சாகாக் பரிசோதனை கூடங்களுக்கு அனுப்ப வேண்டும். கொவிட் பாதிப்பை 5 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும்படி மாநிலங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தொற்றை விரைவில் கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

7. மாநிலம் முழுவதும் மருத்துவமனை வசதிகளை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.

8. நாட்டில் கொரோனா வைரஸ் மாறுபாடுகளை கண்டறிய ‘இன்சாகாக்’ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

9. கொவிட் தொற்று பற்றி தவறான தகவல்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதை பார்த்துள்ளோம். அதனால், ஆதாரபூர்வ தகவல்களை, மாநிலங்கள் செய்திகளாக வெளியிட வேண்டும்

10. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் படி கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த உறுதி செய்ய பரிசோதனை- கண்காணிப்பு - சிகிச்சை - தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் பின்பற்றுவது முக்கியம்.

11. உங்களின் தலைமையின் கீழ், தற்போதை நிலையை பராமரித்து, பெருந்தொற்று குறித்த சமீபத்திய அச்சுறுத்தலை முறியடிக்க முடியும் என நம்புகிறேன்.  மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான, அனைத்து   உதவிகளையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வழங்கும்.

இவ்வாறு திரு ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த