கஞ்சநாயக்கன்படியில் கொள்ளையர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி திட்டம் வகுத்துக் தந்து தலைமறைவான காவல்துறை தலைமைக் காவலர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை தாலுகாவிலுள்ள கஞ்சநாயக்கன்படியில்
ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் (வயது 80). அவரது மனைவி இறந்ததுவிட தனியாக வசித்து வருகிறார். அதைத் தெரிந்து வைத்துக் கொண்ட ஒரு கும்பல், காரில் வந்து வீட்டுக்குள் நுழைந்து, அவரைக் கட்டிப் போட்டுவிட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவிலிருந்த ரூ. நான்கு இலட்சத்தையும், ஐந்து சவரன் தங்க நகையையும் கொள்ளையடித்த் தப்பிச் சென்ற நிலையில்
அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன், காரியாபட்டி காவல்நிலையத்தின் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்களைத் தேடிய நிலையில் கோபிக் கண்ணன், சம்பத்குமார், மகேஷ் வர்மா, அஜய் சரவணன், அலெக்ஸ் குமார், மூர்த்தி ஆகிய நபர்கள் பிடிபட்ட நிலையில்.
அந்தக் கொள்ளையர்களிடமிருந்து. 88 ஆயிரம் ரூபாயும் , 2½ சவரன் தங்க நகையையும் மீட்டு விசாரணை நடத்திய நிலையில், இத் திருடன்களுக்குக் கொள்ளை அடிக்க ஆலோசனை வழங்கியது இலட்சுமி நகர் மூன்றாவது தெருவில் குடியிருக்கும் காவல்துறையில் பணியில் உள்ள தலைமைக் காவலர் இளங்குமரன் என தெரியவந்த நிலையில். அந்த ஏட்டு தலைமறைவானதால் ஏட்டு இளங்குமரனை காவல்துறையினர் தேடுகின்றனர். இதில் விஷேசம் என்னவென்றால் கொள்ளை போன ஓய்வு பிடிஒ வீட்டின் அருகில் வசிக்கும் நபர் தான் அந்த ஏட்டு இளங்குமரன்.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தலைமைக் காவலர் இளங்குமரன், தனிமையில் வசிக்கும் முதியவர் கணேசன் வீட்டில் பணமும் நகையும் இருப்பதைத் தெரிந்து, கொள்ளையர்களை அனுப்பி கொள்ளையடிப்பதற்குத் திட்டம் வகுத்துத் கொடுத்திருக்கிறார் என்றால், நமது கருத்து தோட்டம் காக்கும் வேலி பயிரை மேய்கிறது காரணம் ஊழல் இவரை காவல்துறை தனிப்படை தேடி வந்த நிலையில் நேற்று ராமநாயக்கன்பட்டி விளக்கு அருகில் ஏட்டு இளங்குமரனை தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள்