முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியலமைப்புச் செயல்முறையை செய்து முடிப்போம் என பிரதமர் தகவல்


பிரதமர் நாட்டுக்கு வழங்கிய உரையின் தமிழாக்கம்


வணக்கம் எனதருமை நாட்டு மக்களே!

இன்று தேவ்-தீபாவளி புனிதப் பண்டிகை. இன்று குருநானக் தேவ் அவர்களின் பிரகாஷ் புராப் புனித திருவிழாவும் ஆகும். இந்த புனிதத் திருநாளில் உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு கர்தார்பூர் சாஹிப் வழித்தடமானது தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே

'விச் துனியா செவ் கமியா தா தர்காஹ் பைசான் பையே' என்று குருநானக் கூறியுள்ளார்.

 அதாவது, சேவையின் வழியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. இத்தகைய சேவை மனப்பான்மையுடன் நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளது. பல தலைமுறையினரின் கனவுகளை நனவாக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

நண்பர்களே,

ஐம்பதாண்டு கால என் பொது வாழ்வில் விவசாயிகளின் பிரச்சனைகளை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். எனவே, 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்க நாடு எனக்கு வாய்ப்பளித்தபோது விவசாயத்தின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம்.

நண்பர்களே,

நாட்டில் 100-க்கு 80 விவசாயிகள் சிறு விவசாயிகள் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. இவர்களுக்கு இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலமே உள்ளது. இந்த சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்த சிறிய நிலம்தான் அவர்களின் முழு வாழ்க்கைக்கும் ஆதாரம். இதுதான் அவர்களின் வாழ்க்கை, இந்த சிறிய நிலத்தின் உதவியுடன் அவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்கின்றனர். பரம்பரை பரம்பரையாக குடும்பங்கள் பிரிவது இந்த நிலத்தை சிறியதாக்கி வருகிறது.

எனவே, நாட்டின் சிறு விவசாயிகளின் சவால்களை சமாளிக்க விதைகள், காப்பீடு, சந்தைகள் மற்றும் சேமிப்புகளை வழங்குவதில் நாங்கள் முழுவதுமாக பணியாற்றியுள்ளோம். நல்ல தரமான விதைகளுடன், விவசாயிகளுக்கு வேம்பு பூசிய யூரியா, மண் சுகாதார அட்டைகள், நுண்ணீர் பாசனம் போன்ற வசதிகளையும் அரசு வழங்கியுள்ளது. 22 கோடி மண் சுகாதார அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதனால், இந்த அறிவியல் இயக்கத்தால் விவசாய உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம். அதிக விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், பேரிடர் நேரத்தில் விவசாயிகள் எளிதாக இழப்பீடு பெறும் வகையில் பழைய விதிகளும் மாற்றப்பட்டன. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு இழப்பீடு கிடைத்துள்ளது. சிறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை விரிவுபடுத்தியுள்ளோம். சிறு விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 1.62 லட்சம் கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

விவசாயிகளின் கடின உழைப்புக்கு ஈடாக விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு அதன் கிராமப்புற சந்தை உள்கட்டமைப்பை பலப்படுத்தியது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியதோடு மட்டுமின்றி, சாதனை அளவில் அரசு கொள்முதல் மையங்களையும் உருவாக்கியுள்ளோம். எங்கள் அரசின் விளைபொருட்கள் கொள்முதல் கடந்த பல தசாப்தங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட மண்டிகளை இ-நாம் (e-NAM) திட்டத்துடன் இணைப்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க ஒரு தளத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். இதோடு, நாடு முழுவதும் உள்ள விவசாய மண்டிகளை நவீனப்படுத்தவும் பல கோடி ரூபாய் செலவழித்தோம்.

நண்பர்களே,

மத்திய அரசின் விவசாய பட்ஜெட் முன்பை விட இன்று ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ், கிராமங்கள் மற்றும் பண்ணைகளுக்கு அருகில் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கும், விவசாய உபகரணங்கள் விரைவாக கிடைக்கச் செய்வது போன்ற பல வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 10,000 எஃப்பிஓ-க்களை (விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகள்) உருவாக்கும் நடவடிக்கையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நுண்ணீர் பாசன நிதி ஒதுக்கீடு இரண்டு மடங்காக, 10,000 கோடி ரூபாயாக, உயர்த்தப்பட்டுள்ளது. பயிர்க்கடனையும் இரட்டிப்பாக்கினோம், இந்த ஆண்டு ரூ 16 லட்சம் கோடியாக இது இருக்கும். மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நமது விவசாயிகளும் கிசான் கடன் அட்டைகளின் பலனை இப்போது பெறத் தொடங்கியுள்ளனர். அதாவது, விவசாயிகளின் நலனுக்காக நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களின் சமூக நிலையை வலுப்படுத்தவும் நேர்மையாக செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும் இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டின் விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகள், வலுவூட்டப்பட வேண்டும் என்பதும், அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதும், அவர்களின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்தது. பல ஆண்டுகளாக, இந்த கோரிக்கையை நாட்டின் விவசாயிகள், விவசாய நிபுணர்கள், விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த காலங்களிலும், பல அரசுகள் இது குறித்து விவாதித்தன. இம்முறையும் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம் பெற்றதைத் தொடர்ந்து இந்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகளும், பல விவசாய அமைப்புகளும் இதை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் மற்றும் அவர்களுக்கு நன்றி சொல்லவும் விரும்புகிறேன்.

நண்பர்களே

நமது அரசு நல்ல நோக்கத்துடன், விவசாயிகளின் நலனுக்காகவும், குறிப்பாக சிறு விவசாயிகளுக்காகவும், விவசாயம் மற்றும் நாட்டின் நலனுக்காகவும், கிராமங்களில் உள்ள ஏழைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் முழு நேர்மை மற்றும் முழுமையான அர்ப்பணிப்புடன் புதிய சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால், நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், முற்றிலும் தூய்மையான, விவசாயிகளின் நலனுக்கான இத்தகைய புனிதமான விஷயத்தை சில விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை.

விவசாயிகளில் ஒரு பகுதியினர் மட்டும் போராட்டம் நடத்தினாலும், அது எங்களுக்கு முக்கியமானது. விவசாயப் பொருளாதார வல்லுநர்கள், விஞ்ஞானிகள், முற்போக்கு விவசாயிகள் ஆகியோரும் விவசாய சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரிய வைக்க கடுமையாக முயன்றனர். நாங்கள் மிகவும் பணிவுடன், திறந்த மனதுடன் அவர்களுக்கு விளக்கிக்கொண்டே இருந்தோம். தனிப்பட்ட மற்றும் குழு தொடர்புகள் பல்வேறு வழிகளில் தொடர்ந்தன. விவசாயிகளின் வாதங்களைப் புரிந்துகொள்ள நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம்.

அவர்களுக்கு ஆட்சேபனைகள் இருந்த சட்ட விதிகளை மாற்றவும் அரசு ஒப்புக்கொண்டது. இந்த சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தவும் நாங்கள் முன்மொழிந்தோம். இதற்கிடையில், இந்த விவகாரம் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது. இந்த விஷயங்கள் அனைத்தும் நாட்டின் முன்னால் உள்ளன, எனவே நான் மேலும் விரிவாக செல்ல மாட்டேன்.

நண்பர்களே,

நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கேட்கும் அதே வேளையில், விவசாய சகோதரர்களுக்கு விளக்கின் வெளிச்சம் போல உண்மையை விளக்க முடியாமல் போனதற்கு எங்களது தவத்தில் ஏதோ குறை இருந்திருக்கலாம் என்பதை இன்று மனதார சொல்ல விரும்புகிறேன்.

இன்று குருநானக் தேவ் அவர்களின் பிரகாஷ் புரப் புனித விழா. யாரையும் குறை சொல்லும் நேரம் இதுவல்ல. மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்பதை இன்று முழு நாட்டிற்கும் நான் சொல்ல விரும்புகிறேன். இம்மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியலமைப்புச் செயல்முறையை செய்து முடிப்போம்.

நண்பர்களே,

இன்று குரு பூரப் புனித நாள். எனவே நீங்கள் உங்கள் வீடுகள், வயல்வெளிகள் மற்றும் உங்கள் குடும்பங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எனது விவசாயத் தோழர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக ஆரம்பிப்போம். புதிய தொடக்கத்துடன் முன்னேறுவோம்.

நண்பர்களே, 

விவசாயத்துறை தொடர்பான மற்றுமொரு முக்கிய தீர்மானத்தை இன்று அரசாங்கம் எடுத்துள்ளது. ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங் எனப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப பயிர் முறையை அறிவியல் பூர்வமாக மாற்றவும், குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் பயனுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஆக்கவும் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயப் பொருளாதார நிபுணர்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

நண்பர்களே, 

விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது, அதை தொடர்ந்து செய்யும். குரு கோவிந்த் சிங் அவர்களின் உணர்வில் எனது உரையை முடிக்கிறேன்

‘தே சிவா பாரு மோஹி இஹை சுப் கர்மன் தே கபூன் ந தோரோ’.

ஓ தேவி, நற்செயல்களில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்காத இந்த வரத்தை எனக்கு வழங்குவாயாக.

நான் எதைச் செய்தேனோ, அதை விவசாயிகளுக்காகச் செய்தேன், எதைச் செய்தாலும் நாட்டிற்காகச் செய்கிறேன். உங்கள் ஆசீர்வாதத்தால் முன்பு கூட எனது கடின உழைப்பில் எந்த குறையும் இல்லை. உங்கள் கனவுகள் நனவாகவும், நாட்டின் கனவுகள் நனவாகவும் நான் இன்னும் கடினமாக உழைப்பேன் என்று இன்று உறுதியளிக்கிறேன்

உங்களுக்கு மிக்க நன்றி! வணக்கம்!"

இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த