முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியலமைப்புச் செயல்முறையை செய்து முடிப்போம் என பிரதமர் தகவல்


பிரதமர் நாட்டுக்கு வழங்கிய உரையின் தமிழாக்கம்


வணக்கம் எனதருமை நாட்டு மக்களே!

இன்று தேவ்-தீபாவளி புனிதப் பண்டிகை. இன்று குருநானக் தேவ் அவர்களின் பிரகாஷ் புராப் புனித திருவிழாவும் ஆகும். இந்த புனிதத் திருநாளில் உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு கர்தார்பூர் சாஹிப் வழித்தடமானது தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே

'விச் துனியா செவ் கமியா தா தர்காஹ் பைசான் பையே' என்று குருநானக் கூறியுள்ளார்.

 அதாவது, சேவையின் வழியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. இத்தகைய சேவை மனப்பான்மையுடன் நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளது. பல தலைமுறையினரின் கனவுகளை நனவாக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

நண்பர்களே,

ஐம்பதாண்டு கால என் பொது வாழ்வில் விவசாயிகளின் பிரச்சனைகளை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். எனவே, 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்க நாடு எனக்கு வாய்ப்பளித்தபோது விவசாயத்தின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம்.

நண்பர்களே,

நாட்டில் 100-க்கு 80 விவசாயிகள் சிறு விவசாயிகள் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. இவர்களுக்கு இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலமே உள்ளது. இந்த சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்த சிறிய நிலம்தான் அவர்களின் முழு வாழ்க்கைக்கும் ஆதாரம். இதுதான் அவர்களின் வாழ்க்கை, இந்த சிறிய நிலத்தின் உதவியுடன் அவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்கின்றனர். பரம்பரை பரம்பரையாக குடும்பங்கள் பிரிவது இந்த நிலத்தை சிறியதாக்கி வருகிறது.

எனவே, நாட்டின் சிறு விவசாயிகளின் சவால்களை சமாளிக்க விதைகள், காப்பீடு, சந்தைகள் மற்றும் சேமிப்புகளை வழங்குவதில் நாங்கள் முழுவதுமாக பணியாற்றியுள்ளோம். நல்ல தரமான விதைகளுடன், விவசாயிகளுக்கு வேம்பு பூசிய யூரியா, மண் சுகாதார அட்டைகள், நுண்ணீர் பாசனம் போன்ற வசதிகளையும் அரசு வழங்கியுள்ளது. 22 கோடி மண் சுகாதார அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதனால், இந்த அறிவியல் இயக்கத்தால் விவசாய உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம். அதிக விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், பேரிடர் நேரத்தில் விவசாயிகள் எளிதாக இழப்பீடு பெறும் வகையில் பழைய விதிகளும் மாற்றப்பட்டன. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு இழப்பீடு கிடைத்துள்ளது. சிறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை விரிவுபடுத்தியுள்ளோம். சிறு விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 1.62 லட்சம் கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

விவசாயிகளின் கடின உழைப்புக்கு ஈடாக விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு அதன் கிராமப்புற சந்தை உள்கட்டமைப்பை பலப்படுத்தியது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியதோடு மட்டுமின்றி, சாதனை அளவில் அரசு கொள்முதல் மையங்களையும் உருவாக்கியுள்ளோம். எங்கள் அரசின் விளைபொருட்கள் கொள்முதல் கடந்த பல தசாப்தங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட மண்டிகளை இ-நாம் (e-NAM) திட்டத்துடன் இணைப்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க ஒரு தளத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். இதோடு, நாடு முழுவதும் உள்ள விவசாய மண்டிகளை நவீனப்படுத்தவும் பல கோடி ரூபாய் செலவழித்தோம்.

நண்பர்களே,

மத்திய அரசின் விவசாய பட்ஜெட் முன்பை விட இன்று ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ், கிராமங்கள் மற்றும் பண்ணைகளுக்கு அருகில் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கும், விவசாய உபகரணங்கள் விரைவாக கிடைக்கச் செய்வது போன்ற பல வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 10,000 எஃப்பிஓ-க்களை (விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகள்) உருவாக்கும் நடவடிக்கையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நுண்ணீர் பாசன நிதி ஒதுக்கீடு இரண்டு மடங்காக, 10,000 கோடி ரூபாயாக, உயர்த்தப்பட்டுள்ளது. பயிர்க்கடனையும் இரட்டிப்பாக்கினோம், இந்த ஆண்டு ரூ 16 லட்சம் கோடியாக இது இருக்கும். மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நமது விவசாயிகளும் கிசான் கடன் அட்டைகளின் பலனை இப்போது பெறத் தொடங்கியுள்ளனர். அதாவது, விவசாயிகளின் நலனுக்காக நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களின் சமூக நிலையை வலுப்படுத்தவும் நேர்மையாக செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும் இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டின் விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகள், வலுவூட்டப்பட வேண்டும் என்பதும், அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதும், அவர்களின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்தது. பல ஆண்டுகளாக, இந்த கோரிக்கையை நாட்டின் விவசாயிகள், விவசாய நிபுணர்கள், விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த காலங்களிலும், பல அரசுகள் இது குறித்து விவாதித்தன. இம்முறையும் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம் பெற்றதைத் தொடர்ந்து இந்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகளும், பல விவசாய அமைப்புகளும் இதை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் மற்றும் அவர்களுக்கு நன்றி சொல்லவும் விரும்புகிறேன்.

நண்பர்களே

நமது அரசு நல்ல நோக்கத்துடன், விவசாயிகளின் நலனுக்காகவும், குறிப்பாக சிறு விவசாயிகளுக்காகவும், விவசாயம் மற்றும் நாட்டின் நலனுக்காகவும், கிராமங்களில் உள்ள ஏழைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் முழு நேர்மை மற்றும் முழுமையான அர்ப்பணிப்புடன் புதிய சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால், நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், முற்றிலும் தூய்மையான, விவசாயிகளின் நலனுக்கான இத்தகைய புனிதமான விஷயத்தை சில விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை.

விவசாயிகளில் ஒரு பகுதியினர் மட்டும் போராட்டம் நடத்தினாலும், அது எங்களுக்கு முக்கியமானது. விவசாயப் பொருளாதார வல்லுநர்கள், விஞ்ஞானிகள், முற்போக்கு விவசாயிகள் ஆகியோரும் விவசாய சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரிய வைக்க கடுமையாக முயன்றனர். நாங்கள் மிகவும் பணிவுடன், திறந்த மனதுடன் அவர்களுக்கு விளக்கிக்கொண்டே இருந்தோம். தனிப்பட்ட மற்றும் குழு தொடர்புகள் பல்வேறு வழிகளில் தொடர்ந்தன. விவசாயிகளின் வாதங்களைப் புரிந்துகொள்ள நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம்.

அவர்களுக்கு ஆட்சேபனைகள் இருந்த சட்ட விதிகளை மாற்றவும் அரசு ஒப்புக்கொண்டது. இந்த சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தவும் நாங்கள் முன்மொழிந்தோம். இதற்கிடையில், இந்த விவகாரம் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது. இந்த விஷயங்கள் அனைத்தும் நாட்டின் முன்னால் உள்ளன, எனவே நான் மேலும் விரிவாக செல்ல மாட்டேன்.

நண்பர்களே,

நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கேட்கும் அதே வேளையில், விவசாய சகோதரர்களுக்கு விளக்கின் வெளிச்சம் போல உண்மையை விளக்க முடியாமல் போனதற்கு எங்களது தவத்தில் ஏதோ குறை இருந்திருக்கலாம் என்பதை இன்று மனதார சொல்ல விரும்புகிறேன்.

இன்று குருநானக் தேவ் அவர்களின் பிரகாஷ் புரப் புனித விழா. யாரையும் குறை சொல்லும் நேரம் இதுவல்ல. மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்பதை இன்று முழு நாட்டிற்கும் நான் சொல்ல விரும்புகிறேன். இம்மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியலமைப்புச் செயல்முறையை செய்து முடிப்போம்.

நண்பர்களே,

இன்று குரு பூரப் புனித நாள். எனவே நீங்கள் உங்கள் வீடுகள், வயல்வெளிகள் மற்றும் உங்கள் குடும்பங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எனது விவசாயத் தோழர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக ஆரம்பிப்போம். புதிய தொடக்கத்துடன் முன்னேறுவோம்.

நண்பர்களே, 

விவசாயத்துறை தொடர்பான மற்றுமொரு முக்கிய தீர்மானத்தை இன்று அரசாங்கம் எடுத்துள்ளது. ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங் எனப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப பயிர் முறையை அறிவியல் பூர்வமாக மாற்றவும், குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் பயனுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஆக்கவும் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயப் பொருளாதார நிபுணர்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

நண்பர்களே, 

விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது, அதை தொடர்ந்து செய்யும். குரு கோவிந்த் சிங் அவர்களின் உணர்வில் எனது உரையை முடிக்கிறேன்

‘தே சிவா பாரு மோஹி இஹை சுப் கர்மன் தே கபூன் ந தோரோ’.

ஓ தேவி, நற்செயல்களில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்காத இந்த வரத்தை எனக்கு வழங்குவாயாக.

நான் எதைச் செய்தேனோ, அதை விவசாயிகளுக்காகச் செய்தேன், எதைச் செய்தாலும் நாட்டிற்காகச் செய்கிறேன். உங்கள் ஆசீர்வாதத்தால் முன்பு கூட எனது கடின உழைப்பில் எந்த குறையும் இல்லை. உங்கள் கனவுகள் நனவாகவும், நாட்டின் கனவுகள் நனவாகவும் நான் இன்னும் கடினமாக உழைப்பேன் என்று இன்று உறுதியளிக்கிறேன்

உங்களுக்கு மிக்க நன்றி! வணக்கம்!"

இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...