கடல் விமான சேவை
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் டாக்டர் சர்பானந்த சோனோவால் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
ஆர் சி எஸ்-உடான் திட்டத்தின் கிழ் நீர் விமான சேவைகளுக்காக விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இன்றுவரை, 14 நீர் விமான நிலையங்களை இணைக்கும் 28 கடல் விமான வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் விமான நிலைய செயல்பாட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சலுகைகளை வழங்குகிறார்கள்.
கருத்துகள்