பெங்களூரு விமானப்படை கட்டளையக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விமானப்படை அதிகாரி க்ருப் கேப்டன் வருண் சிங் காலமானார்
டிசம்பர் மாதம் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகில் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதியுடன் 12 நபர்கள் உயரிழந்தனர்.
அவர்களுடன் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானப்படை அதிகாரி க்ருப் கேப்டன் வருண் சிங் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு
வெலிங்கடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பின்னர் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு விமானப்படை கட்டளையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையிலிருந்தவர் இன்று சற்று முன்னர் துரதிர்ஷ்டவசமாக வீரமரணம் அடைந்ததாக விமானப்படைல் தகவல் வெளியிட்டுள்ளது.
க்ருப் கேப்டன் வருண் சிங் தனது இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை தனது உயிரை துச்சமாக மதித்து மிக திறமையாக இயக்கி விபத்திலிருந்து மீட்ட காரணத்தால் ஷவுர்ய சக்ரா விருது பெற்றவராவார். மிகவும் திறமையான மற்றுமொரு வீரரை இந்த நாடும் இந்திய விமானப்படையும் நல்ல மனிதரை அவரது குடும்பமும் நண்பர்களும் இழந்துள்ளனர்.
கருத்துகள்