மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பழையூர் பட்டி கிராமத்தில் பொங்கலன்று இரு தரப்பினரிடையே மோதல்.
இந்த மோதல் ஜாதிக் கலவரமாக மாறவே, அப்பாவி மக்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலிருக்கிறது பழையூர்பட்டி. இங்கு பொங்கல் தினத்தன்று இரவு பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கள் ஜாதி தலைவராக நினைக்கும் திருமாவளவன் படத்தை வைத்ததாகவும், விசிக கொடியை ஏற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தன்னாட்சி நாடான வெள்ளளூர் நாட்டில் அமைந்துள்ளது பழையூர்பட்டி அங்கு மெஜாரிட்டி சமூகமாக வாழும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மதிவாணன், சுரேஷ், பழையூர்பட்டி தலைவர் ஆகியோர் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதாகவும், மந்தையில் கட்டி வைத்திருந்திருந்ததாகவும் அதுமட்டுமின்றி அதனை தடுக்கச் சென்ற வயது முதியவர்களையும், பெண்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும். அதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற நிலையில்
இதற்கு அந்த ஊரைச் சேர்ந்த பாண்டியன் பிள்ளை -கமலா ஆகியோர் மகனான திரைப்பட இயக்குனர் சேரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் இத்தனை வருடங்கள் இல்லாத நிகழ்வு என் கிராமத்தில் நடந்திருப்பது மனதைப் புண்படுத்துகிறது..
அங்கே எல்லோரும் இதுவரை தாய் பிள்ளைகளாக ஜாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். அந்த ஒற்றுமையை சிதைப்பது உடன் பெரியவர்கள் தடுக்கவேண்டும்
அச்சமடைந்த மக்கள் அவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பட்ட முயற்சியே திரித்து சொல்லப்பட்டிருக்கிறது.. தவறுகளை மறைத்து அவர்களை அடித்ததை மட்டும் சொல்லி புகாரை திசை திருப்பி இருக்கிறார்கள்.
இப்போது காவல்துறையும் பெரியவர்களும் தலையிட்டு சரியானதை அறிந்து அதற்கான முடிவு தேடும் முயற்சியில் இருக்கிறார்கள். எப்படியோ எங்கள் மண்ணின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும். தவறுகள் களையப்பட்டு, உணர்த்தப்பட்டு. நல்லவர்கள் தண்டிக்கப்படாமல் பகை மேலும் வளராமல் சுமூகமாக மாறினால் போதும். சிறுவர்களை இளைஞர்களை தவறான வழிக்கு திசை திருப்புவதை தடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். ஜாதி கடந்து நீதி வாழும் பூமியில் ஜாதிக்கலவரம் வருவது அரசியல் முன்னெடுப்பு தான் காரணம்.
கருத்துகள்