ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் தகுதிச் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)
தமிழகத்தில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஐபிஆர்சி வளாகத்தில் 720 வினாடிகளுக்கு நடத்தப்பட்டது. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியிலுள்ள இஸ்ரோ வளாகத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்த இஸ்ரோ தகவலின் படி, என்ஜினின் செயல்திறன் சோதனை நோக்கங்களின் அனைத்து அம்சங்களிலும் செயல்திறன் நிவர்த்தியாக பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மிகப் பெரிய மைல்கல் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டமானது வெற்றிகரமான நீண்ட கால சோதனையாகும். என்ஜின் சோதனையில் இதன் நம்பகத்தன்மை மற்றும் வலிமையை உறுதி செய்துள்ளது. இந்த என்ஜின் மேலும் நான்கு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையானது 1810 வினாடிகளுக்கு நடக்க இருக்கிறது. ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் என்ஜின் முழு தகுதியை முடிக்க இயந்திரம் இரண்டு குறுகிய கால சோதனைகள் மற்றும் ஒரு நீண்ட கால சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து ககன்யான் திட்டம் பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. இந்த திட்டத்தின் சோதனை தொடர்ந்து வெற்றி பெற்று வருவது இஸ்ரோ நிறுவனத்தை பல கட்டம் முன்னோக்கி எடுத்து செல்லும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வர்த்தகம் மற்றம் தொழில் கூட்டமைப்பின் சார்பாக, எதிர்கால விண்வெளி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் காணொளிக் காட்சி வாயிலாக விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்த தகவல், "ககன்யான் திட்டம் கொரோனா காரணமாக தாமதமாகி விட்டது. இருந்தபோதிலும் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலோ ககன்யான் விண்கலம் செலுத்தப்படும்" என்று கூறினார்.
கருத்துகள்