முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தானே மற்றும் திவா-வை இணைக்கும் வகையிலான 2 கூடுதல் ரயில் பாதை

 தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிப்பு அளிக்கும் விதமாக மும்பையின் திறனை இந்த நடவடிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்”


“மும்பையில் 21 ஆம் நூற்றாண்டுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நாம் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்”

“இந்திய ரயில்வேயை மேலும் பாதுகாப்பானதாக, வசதி மிகுந்ததாக, நவீனமானதாக மாற்றுவது என்ற அரசின் உறுதிப்பாட்டை கொரோனா பெருந்தொற்றால் கூட அசைக்க முடியவில்லை”


“ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வளங்களில் போதுமான முதலீடு செய்யாததால் கடந்த காலத்தில் நாட்டின் பொது போக்குவரத்து முடங்கி கிடந்தது”

ரூ. 620 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் ரயில் பாதைகள் நீண்ட தூர ரயில் போக்குவரத்துக்கும் புறநகர் ரயில் போக்குவரத்துக்கும் இடையிலான குறுக்கீடுகளை கணிசமாக அகற்றும்

தானே மற்றும் திவா-வை இணைக்கும் வகையிலான 2 கூடுதல் ரயில் பாதைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  மும்பை புறநகர் ரயில்வேயின் இரண்டு புறநகர் ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர், ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்த நாள், நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தி தமது உரையை பிரதமர் தொடங்கினார்.  சிவாஜி மகராஜ் இந்தியாவின் பெருமிதம், அடையாளம் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழ்ந்தவர் என்று பிரதமர்  குறிப்பிட்டார்.

தானே மற்றும் திவா-வை இணைக்கும் 5 மற்றும் 6-வது ரயில்பாதைகள் தொடங்கப்பட்டு இருப்பதையொட்டி, மும்பைவாசிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், எப்போதும் நடமாட்டம் மிகுந்த பெருநகரில் வசிப்போரின் வாழ்க்கையை இந்த புதிய பாதைகள் எளிதாக்கும் என்றார்.  இந்த புதிய 2 பாதைகளின் நான்கு நேரடி பலன்களை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  முதலாவதாக உள்ளூர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தனித்தனி பாதை; இரண்டாவதாக வெளி மாநிலங்களிலிருந்து வரும் ரயில்கள், உள்ளூர் ரயில்கள் கடந்த செல்வதற்காக  காத்திருக்கத் தேவையில்லை; மூன்றாவதாக மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் கல்யாண் மற்றும் குர்லா வரையிலான பிரிவில்  பெருமளவு தடையின்றி இயங்க முடியும் என்பதோடு, நிறைவாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பாதையை மூடுவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கல்வா மும்ரா பயணிகள் தப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த புதிய ரயில் பாதைகள் மற்றும் மத்திய ரயில்வேயில் பெரும்பாலும் குளிர்சாதன வசதி கொண்ட 36 புதிய உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுவது, உள்ளூர் ரயில் சேவையை விரிவுபடுத்தி, வசதிகளை நவீனப்படுத்துவது என்ற அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் மும்பை பெருநகரின் பங்களிப்பை நினைவு கூர்ந்த பிரதமர், தற்சார்பு இந்தியாவுக்கான பங்களிப்பில் மும்பையின் திறனை பன்மடங்கு அதிகரிக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். “எனவேதான், மும்பையில் 21 ஆம் நூற்றாண்டுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நாம் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மும்பை புறநகர் ரயில் போக்குவரத்தை நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாக மாற்றும் வகையில், மும்பை ரயில் போக்குவரத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.  மும்பையில் மேலும் 400 கி.மீ. தொலைவுக்கு புறநகர் ரயில் பாதைகளையும், 19 ரயில் நிலையங்களை அமைப்பதோடு, நவீன சிபிடிசி சிக்னல் சாதனங்களை அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

“அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் நாட்டின் தேவை என்றும், இது கனவு நகரான மும்பையின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும்.  இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுதான் நமது முன்னுரிமைப் பணி” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய  ரயில்வேயை மேலும் பாதுகாப்பானதாக, வசதி மிகுந்ததாக, நவீனமானதாக மாற்றுவது என்ற அரசின் உறுதிப்பாட்டை கொரோனா பெருந்தொற்றால் கூட அசைக்க முடியவில்லை என்று பிரதமர் கூறினார்.  கடந்த இரண்டாண்டுகளில் ரயில்வே துறை, சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனைகளை படைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.  8 ஆயிரம் கி.மீ தூர ரயில்பாதைகள் மின்சார மயமாக்கப்பட்டு இருப்பதுடன், 4.5  ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது.  கொரோனா காலக்கட்டத்தில் கிஷான் ரயில்கள் மூலம் விவசாயிகளுக்கு நாடு தழுவிய சந்தைகளுடன் இணைப்பு  வசதி  ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். 

கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான புதிய இந்தியாவின் மாறுபட்ட அணுகுமுறை பற்றி குறிப்பிட்ட பிரதமர், திட்டமிடல் முதல் நிறைவேற்றி முடிக்கும் நிலை வரை போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், கடந்த கால திட்டங்கள் தாமதமடைந்து வந்ததாகவும் தெரிவித்தார்.   இதனால், 21 ஆம் நூற்றாண்டுக்கான கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க முடியாமல் போனதால்தான், பிரதமரின் கதி சக்தி திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டம் மத்திய அரசின் அனைத்து துறைகள், மாநில அரசுகளின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் துறையினரை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரும்.  இந்த அமைப்பு, முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு தேவையான தகவல்களை  சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்கூட்டியே வழங்கும்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வளங்களில் போதுமான முதலீடு  செய்வது பற்றி, சிந்திக்காததை திரு மோடி வெகுவாக குறைகூறினார்.  இதன்காரணமாக  கடந்த காலத்தில் நாட்டின் பொது போக்குவரத்து முடங்கி கிடந்தது என்றார்.  “இதுபோன்ற சிந்தனைகளை புறந்தள்ளி, இந்தியா தற்போது முன்னேறிச் செல்கிறது” என்று அவர் கூறினார்.

இந்திய ரயில்வேக்கு புதிய பொலிவை அளிக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் பட்டியலிட்டார்.  காந்திநகர் மற்றும் போபாலில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் நிலையங்கள், இந்திய ரயில்வேயின் அடையாளமாக வேகமாக உருவெடுத்து வருவதுடன் 6,000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் ரயில்வே துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்து நவீன வசதிகளை ஏற்படுத்தியுள்ளன.  வரும் ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தேச சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   

கல்யாண் ரயில் சந்திப்பு, மத்திய ரயில்வேயின் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் கல்யாண் நிலையத்தில் ஒன்றாக இணைந்து சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை நோக்கி செல்கின்றன.  கல்யாண் மற்றும் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் இடையே  உள்ள 4 ரயில் பாதைகளில் இரண்டு பாதைகள், மெதுவாக செல்லும் உள்ளூர் ரயில்களுக்காகவும், எஞ்சிய  இரண்டு பாதைகள், விரைவு உள்ளூர் ரயில்கள், மெயில் / எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.  புறநகர் மற்றும் நீண்ட தூர ரயில் போக்குவரத்தை தனித்தனியாக பிரிக்கும் விதமாக 2 கூடுதல் ரயில் பாதைகள் திட்டமிடப்பட்டது,

ரூ. 620 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட தானே – திவா –வை இணைக்கும் இரண்டு கூடுதல் ரயில் பாதையில், 1.4 கி.மீ. தூர ரயில்வே மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.  இந்த ரயில்பாதைகள் மும்பையில் நீண்ட தூர ரயில் போக்குவரத்துக்கும், புறநகர் ரயில் போக்குவரத்துக்கும் இடையிலான குறுக்கீடுகளை கணிசமாக அகற்றும்.  இந்த ரயில் பாதைகள், நகரில் (மும்பையில்) 36 புதிய புறநகர் ரயில்களை அறிமுகப்படுத்த வழிவகை செய்துள்ளன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த