இரஷ்யா-உக்ரைன் இடையே நெருக்கடியும்: தற்போதைய பதட்டங்களும் இந்தியாவின் சாமானிய மனிதனை எவ்வாறு பாதிக்கும்
இரஷ்யா-உக்ரைன் இடையே நெருக்கடியும்: தற்போதைய பதட்டங்களும் இந்தியாவின் சாமானிய மனிதனை எவ்வாறு பாதிக்கும்
வியாழனன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸைப் பாதுகாக்க ஒரு சிறப்பு "இராணுவ நடவடிக்கையை" அறிவித்து உலகை ஆச்சரியப்படுத்தினார்.
ஜனாதிபதி புடின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அறிவித்ததால், நேற்று விஷயம் தீவிரமடையத் தொடங்கின, நிதி ஸ்திரமின்மை ஊடுருவத் தொடங்கியது. இந்த நடவடிக்கை உலகெங்கிலுமிருந்து அனைத்து வகையான எதிர்வினைகளையும் அழைத்தாலும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்குமிடையே நடந்து வரும் இந்த மோதலால் இந்தியாவின் சாமானியரை எவ்வாறு பாதிக்கிறது என்பது தான் இன்னும் அச்சுறுத்தலானது.
உதாரணமாக கடந்த, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ப்ரெண்ட் எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளதையொட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு உருளைகள் விலையை அதிகரிக்கப்படலாம்.
இரஷ்யா-உக்ரைன் மோதல் எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியத்தை அதிகரிக்க வழிவகுக்கும், அதாவது விலை உயரும். என்பதே நிஜம்
இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே போர் மூண்டதைப் பற்றி சொல்வதற்கு முன் சுருக்கமாகவே இதன் பிந்தைய வரலாற்றை பார்க்க வேண்டும். இரஷ்யா உக்ரைன் இல்லாமல் இதில் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளின் பெயர்களும் உதாரணமாக வரும் 1991 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சோவியத் யூனியன் அதாவது இன்றைய ரஷ்யாவுடன் இருந்த நாடுகளில் ஒன்றானது தான் உக்ரைன்
உடைபடும் முன்பாக இருந்த சோவியத் யூனியன் ஒரு இரும்புத் திரை நாடு என்று சொல்வார்கள் காரணம் அந்த நாட்டைப் பற்றிய எந்த உண்மைச் செய்தியும் வெளி வராது அந்த அளவுக்கு கம்யூனிச சித்தாந்த இடதுசாரிக கொள்கையை முழுமையாகப் பின்பற்றிய நாடு உலகத்திலேயே பெட்ரோலியம் உற்பத்தியில் முதலிடம் பிடித்த நாடு ஆனால் பொருளாதாரம் என்பதே கிடையாது இதற்கு என்ன சொல்வீர்கள் காரணம் கம்யூனிச சித்தாந்தக் கொள்கைக்கு ஒரு உதாரணம் ஜெர்மனியாகும்.
ஜெர்மனி இரண்டாம் உலக போருக்குப் பின்னர் கிழக்கு மேற்கு என இரண்டானது இதில் மேற்கு ஜெர்மனி யை அமெரிக்காவும் கிழக்கு ஜெர்மனியை ரஷ்யாவும் கைப் பற்றியது அமெரிக்கப் பிடியிலிருந்த மேற்கு ஜெர்மனி அமோக வளர்ச்சியடைந்த நிலையில் ரஷ்ய கையில் சிக்கிய கிழக்கு ஜெர்மனி சுருக்கமாக சொன்னால் அங்கு ஒரு தொலைபேசி வசதி கூடக் கிடையாது காரணம் கம்யூனிச சித்தாந்தக் கொள்கை அது போல் வட கொரியா தென் கொரியா அமெரிக்க ஆதரவிலிருந்த தென் கொரியா அமோக வளர்ச்சியடைந்த நிலையில் ரஷ்ய ஆதரவிலிருந்த வட கொரியா உண்ணும் உணவுக்குக் கூட வழியின்றி தவித்த காரணமும் அதுவே.
சரி மீண்டும் விஷயம் வருவோம் இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்ந்து ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருந்தது காரணம் இரண்டும் வல்லரசு நாடு நேரடியாக மோதினால் பெரும் விளைவுகள் வரலாம் என்பதனால் அமெரிக்கா ஒரு சூழ்ச்சி செய்தது அது என்னவென்றால் எண்ணை வளம் பொருந்திய மாநிலம் அஜர்பைஜான் அதாவது தமிழகம் போல இந்த அஜர்பைஜானைத்தான் குறி வைத்துக் காய் நகர்த்தியது அமெரிக்கா அஜர்பைஜானில் தான் தீ பொறியை பற்ற வைத்த அமெரிக்கா அதாவது உங்கள் மாநிலத்திலிருந்து பெட்ரோலியம் எடுக்கபடுகிறது அதனால் பாருங்கள் விவசாயம் அழிந்துவிடும் அப்படி இருந்தும் இந்த மாநில மக்கள் வறுமையில் தானே இருக்கிறீர்கள் என்று ஊதிவிட இது கொஞ்ச கொஞ்சமாக பெரிதாகி கடைசியில் 1991 ஆம் ஆண்டு கோர்பர்ஷேவ் ஆட்சியில் 50 நாடுகளாகப் பிரிந்தது இந்த 50 நாடுகளில் ஒன்று தான் உக்ரைன் ஒரு உதாரணம் அமெரிக்கா அன்று ரஷ்யாவிலுள்ள அஜர்பைஜானில் என்ன செய்ததோ அதே பானியில் தான் இன்று சீனா இந்தியாவில் உள்ள தமிழகத்தில் செய்கிறது இப்போது ரஷ்யா நாட்டை உடைத்து எறிந்தாகி விட்டதல்லவா அதன் பிறகு தனிநாடாகியது உக்ரைன் அந்த உக்ரைனில் ரஷ்யாவை அச்சுறுத்தும் விதமாக நேட்டோ நாடுகளில் உக்ரைனையும் சேர்க்கத் தயாராகி விட்டது அமெரிக்கா அமெரிக்க நேட்டோ படைகள் தனது நாட்டிற்கு அருகாமையிலேயே இருப்பதை விரும்பவில்லை ரஷ்யா சொல்லிப் பார்த்தது ரஷ்யா உக்ரைன் கேட்கவில்லை போர் வந்தாயிற்று சரி ரஷ்யாவில் உள்ள அஜர்பைஜானை எப்படி பயன்படுத்தி ரஷ்யாவை உடைத்த நிலை தான் இன்று பெரிய போராக மாற்றம் கண்டது. உக்ரைனில் உயர்கல்வி பயிலக்கூடிய இந்திய மாணவர்களை தாயகம் கொண்டு வரும் முயற்சிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து உக்ரைனில் படிக்கச் சென்றுள்ள மாணவ-மாணவியர் & பெற்றோர்கள் கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்தை இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும். என் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்