நாட்டில் சிறார் குற்றவாளிகள் சீர்திருத்த மையங்களின் நிலவரம்
நடப்பு நிதியாண்டான 2021-22-ல் குழந்தைப் பாதுகாப்பு சேவைகள் திட்டம் - நேச இயக்கத்தின் கீழ் ரூ.247.41 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி சுபின் இரானி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 31.12.2021 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 383 இடங்களில் சிறார் குற்றவாளிகள் சீர்திருத்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார். இவற்றில் தமிழ்நாட்டில் 11, புதுச்சேரியில் 3 உள்ளன.
தங்களின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதலான குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைப்பதற்கான ஆலோசனைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்
கருத்துகள்