திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயத்தில் மாசி மாதம் தெப்ப உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானதனம் தேவஸ்தானம் ஆளுகைக்கு உட்பட்ட திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயத்தில் மாசி மாதம் தெப்ப உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆலயத்தில் மாசி மாதம் தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்ரவரி மாதம் .6 ஆம் தேதி மாலை பூர்வாங்க பூஜை நடந்தது. 7 ஆம் தேதி நேற்று காலை 7:00 மணிக்கு ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் கல்யாண மண்டபம் எழுந்தருளினார். சுவாமிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன.
மாலையில் காப்புக்கட்டுதலுடன் உற்ஸவம் துவங்கியது.தொடர்ந்து பல்லக்கில் சுவாமி தேவியருடன் திருவீதி உலா நடந்தது. தினசரி இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும், பிப்ரவரி.15 ஆம் தேதியில் காலை வெண்ணெய் தாழி அலங்கார சேவையும், தெப்பம் முட்டுத் தள்ளுதலும் நடைபெறும். பிப்ப்ரவரி .16 ஆம் தேதியில் காலையிலும், இரவிலும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
கருத்துகள்