படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் விழாவில் மரம் அறக்கட்டளை இணைந்து அமைத்த பழப்பண்ண தோட்டம்
படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) தமிழ்நாட்டிலுள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை .
329 & 366 - DSC.DET,OFT இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.
1947 முதல் உறுவானது கடந்த 1966 ஆம் ஆண்டு ஜுலை மூன்றாம் நாள் அன்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் உற்பத்தி 1967 ல் துவங்கியது. படைக்கலத் தொழிற்சாலை இஷாபூர் மற்றும் சிறிய ஆயுத தொழிற்சாலை, கான்பூர் ஆகியவற்றிற்கு உதவியது.
1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்த தேவை உணரப்பட்டது . படைக்கத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) , ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி திருச்சி என அழைக்கப்படுகிறது , இது திருச்சிராப்பள்ளியில் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் மூலம் இயக்கப்படும் ஒரு சிறிய ஆயுதத் தொழிற்சாலை ஆகும் ,
இது முன்னர் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது .
நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்குப் பொறுப்பான தலைமை நிர்வாக அதிகாரியான பொது மேலாளர் (முன்னாள் அதிகாரபூர்வ கூடுதல் செயலாளர் இந்திய அரசாங்கத்தின் ) எனப்படும் IOFS அதிகாரியால் மட்டுமே இந்த நிறுவனம் வழிநடத்தப்படுகிறது. OFT மிகப்பெரியது இந்தியாவின் சிறிய ஆயுத உற்பத்தி நிறுவனம் மற்றும் மிகவும் மாறுபட்ட வரம்பைக் கொண்டுள்ளது.
புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய கூட்டமைப்பின் கீழ் இனைய மறுத்து வந்த காலத்தில் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சிகள் காரணமாக இந்த ஆலை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எல்லையில் கொண்டு வந்த பிறகு தான் புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 ல் இந்திய நாட்டின் கூட்டமைப்பின் கீழ் இணைந்தது தனி வரலாறு.
இங்கு பாதுகாப்பு விதிமுறைகளுடன் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை இணைந்து பழத் தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து உரிய வழியில் அமைக்க நடவடிக்கை எடுத்த முயற்சியால் மரம் நடுதல் நிகழ்வு 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் விழாவாக ஏற்பாடு செய்து பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்டது.
திருச்சிராப்பள்ளி துப்பாக்கித் தொழிற்சாலையில் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையுடன் நடத்தும் மூன்றாவது நிகழ்வாகும். ஒரு ஏக்கர் பரப்பளவில் ஓர் பழக்காடு அமைகிறது..முற்றிலும் பாரம்பரிய பழவகை மர வகைகளுடன் மட்டுமே
அதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெரும்பாலும் அங்கேயே இருந்து செயலாற்றிய நிர்வாகிகள் மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கும் நிலையில் கேட்டதை யெல்லாம் செய்து கொடுத்து நிர்வாகம். இந்தப் பழப்பண்ணை உருவாக்குவதற்கு அனுமதி அளித்த O F T நிர்வாக அதிகாரிகள். இதன் தொடர்ச்சியாக வேதிக் மரக் குழுமம் அமைக்கும் முயற்சியையும் துவங்கியுள்ளது நன்கு அணைவராலும் பாராட்டுப் பெருகிறது.
பசுமைத்தமிழகம் படைத்திடுவோம். பழப்பண்ண உருவாக்கி... .பறவைகளுக்கான உணவுக்காடாக. பல்லுயிர்பெருக்கத்திற்கான வீடாக...விஷமற்ற கனிகள் கிடைக்கும் நாடாக....மாற்றுவோம்.. பசுமைத்தமிழகம் படைத்திடுவோம். என்ற உயரிய நோக்கம் கொண்டு நிகழ்வு நடந்தது. திருச்சிராப்பள்ளி படைக்கல உற்பத்தித் தொழிற்சாலையில் 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் விழா கொண்டாடப்பட்டதில் மிகவும் முக்கியமான நிகழ்வாக இராணுவக் கட்டுப்பாடுகளுடன் 500 பழ மரக்கன்றுகள் நடப்பட்டது இராணுவ அதிகாரிகள் மற்றும் திருச்சிராப்பள்ளி படைக்கலத் தொழிற்சாலையின் பொது மேலாளர் ஏ.கே.சிங்க் தலைமையில்..பாதுகாப்பு அதிகாரி கர்ணல் கே.கார்த்திகேசு. மற்றும் கேப்டன் கே.பத்மநாபன், உதவி ஆய்வலர் செல்வராஜ், மற்றும் டி.எஸ்.சி. & டி.இ.டி. ஒ.எப்.டி அனைத்து அதிகாரிகள்.மற்றும் ஜவான்களுடன் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற நிகழ்வு. அவர்களின் குடும்பங்களுடன் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மரம் ராஜா மற்றும் புதுக்கோட்டை சுந்தர்,கார்த்திக், சிவகுமார், சத்தியமூர்த்தி, மதிவதணன், பிரபாகரன், ஜூனியர் P பரத், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
மற்றும் விழாவில் மரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மரம் இராஜாவுக்கு திருச்சிராப்பள்ளி படைக்கலத் தொழிற்சாலையின் பொது மேலாளர் ஏ.கே.சிங்க் நினைவுப் பரிசு வழங்கினார் மேலும் அங்குள்ள மண்டபத்தில் கல்லூரி மாணவிகள் நடத்திய பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தினர் வருகை தந்த அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் மதிய விருந்தளிக்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஜவான்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் விரும்பிய பழ மரக்கன்றுகள் வழங்கியதுடன் மரம் இராஜா தலைமையில் அணைவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார் கள், அணைவரும் பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கருத்துகள்