முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் விழாவில் மரம் அறக்கட்டளை இணைந்து அமைத்த பழப்பண்ண தோட்டம்

படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT)  தமிழ்நாட்டிலுள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை .





329 & 366 - DSC.DET,OFT இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.


 1947 முதல் உறுவானது கடந்த  1966 ஆம் ஆண்டு ஜுலை மூன்றாம் நாள் அன்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது.  மேலும் உற்பத்தி 1967 ல் துவங்கியது.            படைக்கலத் தொழிற்சாலை இஷாபூர் மற்றும் சிறிய ஆயுத தொழிற்சாலை, கான்பூர் ஆகியவற்றிற்கு உதவியது.

1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்த தேவை உணரப்பட்டது . படைக்கத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) , ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி திருச்சி என அழைக்கப்படுகிறது , இது திருச்சிராப்பள்ளியில் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் மூலம் இயக்கப்படும் ஒரு சிறிய ஆயுதத் தொழிற்சாலை ஆகும் ,

இது முன்னர் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது .







நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்குப் பொறுப்பான தலைமை நிர்வாக அதிகாரியான பொது மேலாளர் (முன்னாள் அதிகாரபூர்வ கூடுதல் செயலாளர் இந்திய அரசாங்கத்தின் ) எனப்படும் IOFS அதிகாரியால் மட்டுமே இந்த நிறுவனம் வழிநடத்தப்படுகிறது.  OFT மிகப்பெரியது இந்தியாவின் சிறிய ஆயுத உற்பத்தி நிறுவனம் மற்றும் மிகவும் மாறுபட்ட வரம்பைக் கொண்டுள்ளது.







புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய கூட்டமைப்பின் கீழ் இனைய மறுத்து வந்த காலத்தில் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சிகள் காரணமாக இந்த ஆலை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எல்லையில் கொண்டு வந்த பிறகு தான் புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 ல் இந்திய நாட்டின் கூட்டமைப்பின் கீழ் இணைந்தது தனி வரலாறு. 



                                                          இங்கு பாதுகாப்பு விதிமுறைகளுடன் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை இணைந்து பழத் தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து உரிய வழியில் அமைக்க நடவடிக்கை எடுத்த முயற்சியால் மரம் நடுதல் நிகழ்வு 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் விழாவாக ஏற்பாடு செய்து பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்டது. 






திருச்சிராப்பள்ளி துப்பாக்கித் தொழிற்சாலையில் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையுடன் நடத்தும் மூன்றாவது நிகழ்வாகும். ஒரு ஏக்கர் பரப்பளவில் ஓர் பழக்காடு அமைகிறது..முற்றிலும் பாரம்பரிய பழவகை மர வகைகளுடன் மட்டுமே


அதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெரும்பாலும் அங்கேயே இருந்து செயலாற்றிய நிர்வாகிகள் மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கும் நிலையில் கேட்டதை யெல்லாம் செய்து கொடுத்து நிர்வாகம். இந்தப் பழப்பண்ணை உருவாக்குவதற்கு அனுமதி அளித்த O F T நிர்வாக அதிகாரிகள். இதன் தொடர்ச்சியாக வேதிக் மரக் குழுமம் அமைக்கும் முயற்சியையும் துவங்கியுள்ளது நன்கு அணைவராலும் பாராட்டுப் பெருகிறது.         






 பசுமைத்தமிழகம்  படைத்திடுவோம். பழப்பண்ண உருவாக்கி... .பறவைகளுக்கான உணவுக்காடாக.  பல்லுயிர்பெருக்கத்திற்கான வீடாக...விஷமற்ற கனிகள் கிடைக்கும் நாடாக....மாற்றுவோம்.. பசுமைத்தமிழகம் படைத்திடுவோம். என்ற உயரிய நோக்கம் கொண்டு  நிகழ்வு நடந்தது.                                திருச்சிராப்பள்ளி படைக்கல உற்பத்தித் தொழிற்சாலையில் 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் விழா கொண்டாடப்பட்டதில் மிகவும் முக்கியமான நிகழ்வாக இராணுவக் கட்டுப்பாடுகளுடன் 500 பழ மரக்கன்றுகள்  நடப்பட்டது இராணுவ அதிகாரிகள் மற்றும் திருச்சிராப்பள்ளி படைக்கலத் தொழிற்சாலையின் பொது மேலாளர் ஏ.கே.சிங்க் தலைமையில்..பாதுகாப்பு அதிகாரி கர்ணல் கே.கார்த்திகேசு. மற்றும் கேப்டன் கே.பத்மநாபன், உதவி ஆய்வலர் செல்வராஜ், மற்றும் டி.எஸ்.சி. & டி.இ.டி. ஒ.எப்.டி அனைத்து அதிகாரிகள்.மற்றும் ஜவான்களுடன் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற நிகழ்வு. அவர்களின் குடும்பங்களுடன் புதுக்கோட்டை  மரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மரம் ராஜா மற்றும் புதுக்கோட்டை சுந்தர்,கார்த்திக், சிவகுமார், சத்தியமூர்த்தி, மதிவதணன், பிரபாகரன், ஜூனியர் P பரத், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்




மற்றும் விழாவில் மரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மரம் இராஜாவுக்கு திருச்சிராப்பள்ளி படைக்கலத் தொழிற்சாலையின் பொது மேலாளர் ஏ.கே.சிங்க் நினைவுப் பரிசு வழங்கினார் மேலும் அங்குள்ள மண்டபத்தில் கல்லூரி மாணவிகள் நடத்திய பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தினர் வருகை தந்த அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் மதிய விருந்தளிக்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஜவான்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் விரும்பிய பழ மரக்கன்றுகள் வழங்கியதுடன் மரம் இராஜா தலைமையில் அணைவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார் கள், அணைவரும் பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...