பாதுகாப்பு படைகளில் பணியாற்றும் பெண்கள்
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு .அஜய் பட் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
இந்திய ராணுவத்தில் ராணுவ காவல்துறையின் இதர பதவிகளில் பெண்களை சேர்ப்பதற்கான ஏற்பாடு 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1700 பெண் பணியாளர்களை படிப்படியாக (ஆண்டுக்கு சுமார் 100 பேர்) சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு முதல் பெண்களுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. இன்று வரை மொத்தம் 300 மகளிர் ராணுவ காவலர் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆயுதப் படைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு என்பது தொடர்ந்து முன்னேறி வரும் செயல்முறையாகும். இந்திய ராணுவத்தில் பத்து பிரிவுகள்/சேவைகளில் பெண்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 15 பெண் போர் விமானிகளை இந்திய விமானப்படை நியமித்துள்ளது. மேலும், அனைத்து போர் பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்
இந்திய கடற்படை ஏற்கனவே 28 பெண் அதிகாரிகளை கப்பல்களில் அனுப்பியுள்ளது. கடற்படை விமானம்/கப்பல் ஹெலிகாப்டர்களில் பெண் அதிகாரிகளும் பொறுப்புகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்