முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ. 40 லட்சம் லஞ்ச பணம் தொடர் விசாரணை.


திருச்சிராப்பள்ளி துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ. 40 லட்சம் லஞ்ச பணம் தொடர் விசாரணை.


திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியரின் காரில் கட்டுக்கட்டாக ரூபாய்.40 லட்சம் சிக்கியது. சென்னைக்குச் சென்ற வழியில் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் காரை மறித்துச் சோதனை நடத்தியதில்  பணம் சிக்கிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.  திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றுபவர் சரவணகுமார்( வயது 52 ). இவர் தனது காரில் சென்னை நோக்கிப் பயணித்தார். மணி காரை ஓட்டினார். அவரது காரில் கட்டுக்கட்டாக பணம் செல்வதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் வந்தது விழுப்புரம் இலஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவலர்கள் விழுப்புரம் மாவட்ட எல்லை கெடிலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துணை கலெக்டர் சரவணகுமார் வந்த காரை மறித்துச் சோதனையிட்டனர்.

காரில் அவரது  இருக்கையினருகில் இருந்த கட்டைப் பையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சமிருந்தது. தொடர்ந்து  அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறவே துணை ஆட்சியர் சரவணகுமார் மற்றும் ஓட்டுநர் மணி ஆகியோரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது,  பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் சென்னையில் உயர் அதிகாரிகளுக்கு  கொண்டுசெல்லப்பட்டதா என்று பல கேள்விகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் துருவித் துருவி கேள்வி கேட்டனர். அதற்கு சரவணகுமார் சரியாகப் பதில் கூறவில்லை.

இது குறித்து வரும் தகவல்  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் உள்ள விடுதிகளில் சமையலர், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு  ஆள் தேர்வு நடைபெற உள்ளதாகவும், அதற்கு ஒவ்வொரு பணியிடங்களுக்கும் வசூல் வேட்டை நடந்ததாகவும் அதில் கையூட்டு வந்த பணத்தை காரில் கொண்டு வந்ததையடுத்து இந்த சோதனை எனத்  தெரிகிறது.

எனவே இது லஞ்சப் பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து, இவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இவரை சென்னை செல்லும் வழியில் மடக்கிய தில் பணத்துடன் சிக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து ஓட்டுநர்  மணியிடமும் விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டு அவரை அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டதுடன். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கக் கொண்டு சென்றதாக ஒப்புதல் அவர் அளித்த வாக்குமூலம்: 

விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கிய திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை ஆட்சியர் சரவணகுமாரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தியதில் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சரவணகுமார் பின்னர், சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் கலைமோகன் என்பவருக்கு இலஞ்சமாகக் கொடுக்க கொண்டு சென்றதாகத் தெரிவித்துள்ள காரணமாக இதில் உயர் அதிகாரிகளுக்கு பங்கு இருக்கும் நிலை உண்டா என்பது வழக்கு நகர்வில் தெரியும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...