முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ. 40 லட்சம் லஞ்ச பணம் தொடர் விசாரணை.


திருச்சிராப்பள்ளி துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ. 40 லட்சம் லஞ்ச பணம் தொடர் விசாரணை.


திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியரின் காரில் கட்டுக்கட்டாக ரூபாய்.40 லட்சம் சிக்கியது. சென்னைக்குச் சென்ற வழியில் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் காரை மறித்துச் சோதனை நடத்தியதில்  பணம் சிக்கிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.  திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றுபவர் சரவணகுமார்( வயது 52 ). இவர் தனது காரில் சென்னை நோக்கிப் பயணித்தார். மணி காரை ஓட்டினார். அவரது காரில் கட்டுக்கட்டாக பணம் செல்வதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் வந்தது விழுப்புரம் இலஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவலர்கள் விழுப்புரம் மாவட்ட எல்லை கெடிலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துணை கலெக்டர் சரவணகுமார் வந்த காரை மறித்துச் சோதனையிட்டனர்.

காரில் அவரது  இருக்கையினருகில் இருந்த கட்டைப் பையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சமிருந்தது. தொடர்ந்து  அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறவே துணை ஆட்சியர் சரவணகுமார் மற்றும் ஓட்டுநர் மணி ஆகியோரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது,  பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் சென்னையில் உயர் அதிகாரிகளுக்கு  கொண்டுசெல்லப்பட்டதா என்று பல கேள்விகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் துருவித் துருவி கேள்வி கேட்டனர். அதற்கு சரவணகுமார் சரியாகப் பதில் கூறவில்லை.

இது குறித்து வரும் தகவல்  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் உள்ள விடுதிகளில் சமையலர், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு  ஆள் தேர்வு நடைபெற உள்ளதாகவும், அதற்கு ஒவ்வொரு பணியிடங்களுக்கும் வசூல் வேட்டை நடந்ததாகவும் அதில் கையூட்டு வந்த பணத்தை காரில் கொண்டு வந்ததையடுத்து இந்த சோதனை எனத்  தெரிகிறது.

எனவே இது லஞ்சப் பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து, இவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இவரை சென்னை செல்லும் வழியில் மடக்கிய தில் பணத்துடன் சிக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து ஓட்டுநர்  மணியிடமும் விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டு அவரை அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டதுடன். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கக் கொண்டு சென்றதாக ஒப்புதல் அவர் அளித்த வாக்குமூலம்: 

விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கிய திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை ஆட்சியர் சரவணகுமாரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தியதில் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சரவணகுமார் பின்னர், சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் கலைமோகன் என்பவருக்கு இலஞ்சமாகக் கொடுக்க கொண்டு சென்றதாகத் தெரிவித்துள்ள காரணமாக இதில் உயர் அதிகாரிகளுக்கு பங்கு இருக்கும் நிலை உண்டா என்பது வழக்கு நகர்வில் தெரியும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...