மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெ.குமார் நியமணம் செய்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய மு.கிருஷ்ணனை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் 2021 ஆம் ஆண்டு அறிவித்ததையடுத்து பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை தற்போது ஒருங்கிணைப்புக் குழுவினர் கவனித்து வருகின்ற நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கு தேடுதல் குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமியும் பேராசிரியர்கள் எம்.ராஜேந்திரன், பி.மருதமுத்து குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். குழு சார்பில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்த பத்து நபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய நேர்காணல் படி மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பட்டியலை மாநில ஆளுனருக்கு அனுப்பிவைத்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெ.குமாரை நியமித்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் பணியில் 29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட குமார், 3 ஆண்டுகள் இந்தம் பதவியிலிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் பதிவாளர் ஜெ. குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கிரிஸ்ட்டல் கிரோத் சென்டர் மையத்தின் பேராசிரியராகவும், ஆராய்ச்சியிலும் 29 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர் ஜெ. குமார். மேலும் 20 வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தியதுடன், ஐந்து சர்வதேச கருத்தரங்குகளையும் நடத்திய அனுபவம் பெற்றவர். 160 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், 25 சர்வதேச ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், தொழில்நுட்ப மேம்பாடு, பரிமாற்றம் மையத்தின் இயக்குநர், திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர், அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) உள்ளிட்ட நிர்வாகப் பணியிலும் இருந்துள்ளார். மேலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்' என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்