வன்னியர் உள் இட ஒதுக்கீடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது- உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய உத்தரவை உறுதி செய்தது.
கல்வியிலும், வேலை வாய்ப்பில்லும் வன்னியர் ஜாதியினருக்கு, 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது.
அவசரஅவசரமாக முன்னால் ஆட்சி செய்த கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செய்த அலங்கோலம்..
அதுவும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு செய்த அவசர உத்தரவு..
இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததாகச் சொல்லி விளம்பரங்கள் செய்து தேர்தலில் வடக்கு பகுதியில் தமிழ்நாட்டில் சாதிக்கலாமென்று அதிமுகவும் அதன் தோழமை கட்சி பாமகவும் நினைத்தன.
ஆனால் அதிமுகவின் ஒரு பிரிவினரே மதுரை சார்ந்த தென் மாவட்டங்களிலும் கோயமுத்தூர் சார்ந்த மேற்கு மாவட்டங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து அதிமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் குழி தோண்டினர்.
அப்படி இப்படிப் போய் கடைசியில் உள் இட ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என்று இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்காலிக வெற்றிக்காக, ஏமாற்ற நினைத்தவர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள்..
நாங்கள் தான் சரி செய்யவில்லை. நீங்கள் அதை வாதத்தின் மூலம் சரி செய்திருக்கலாமே என்று அதிமுகவின் சிலர் கேட்கலாம் .
நீங்கள் சரியாக செய்ய முடியாமல் போனதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று திமுக கேட்கும்.. அதன் முன்னோட்ட நிகழ்வு தான் தீர்ப்பு வரும்போது அந்த சமூகத்தின் அமைச்சர் சிவசங்கர் அரசியல் சாதுர்யமாக பிற்படுத்தப்பட்ட துறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டது அக் கட்சி செய்த சாமர்த்தியமான சாணக்கியத்தனம்
மொத்தத்தில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு என்பதன் மூலம் பணியில் சிலபேர் உள்ளே வேளைக்குப் போனார்கள் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மற்றும் பா.ம.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீ
தான விசாரணை பிப்ரவரி மாதம் 15, மற்றும் 16-ஆம் தேதிகளில் நடந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று ஒத்திவைதத நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று வழங்கிய தீர்ப்பு: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது. 1994 ஆம் ஆண்டு சட்டத்தை மீறும் வகையில் இட ஒதுக்கீடு கூடாது. உள் ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான நியாயமான காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ஜாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பு வழங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு எதிரானது வன்னியர் உள் ஒதுக்கீடு என்பது தான் குற்றச்சாட்டு, மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதே பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட அஜென்டாவில் தங்களுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கேட்பதே தவறு இதில் கிடைக்கவில்லை என்றானதும் பாஜக மொத்த இட ஒதுக்கீட்டையும் ரத்து பண்ணிடும்னு இப்போது சமூக வலைதளவாசிகள் சாபம் வேறு
விடுகிறார்கள் அறியாமையின் பிடியில் தற்குறிகளாக வளர்ந்து நிற்கும் சட்டம் அறியாமல் சிலர். 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடுனு அறிவிப்பு வந்ததுமே பெரும்பான்மை வன்னியர்கள் இதெல்லாம் சாத்தியமேயில்லாதது என்று புரிந்துக்கொண்டனர்.
இப்போது வந்த உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின் அந்த அமைப்பு நிர்வாகிகளை ஜாதி ரீதியிலான அரசியல் நகர்வுகள் மூலம் பா.ம க நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸை சந்தித்துப் பேசினார்கள் அவர்கள் இதை வேறு வழியில் வழிநடத்த முனைந்தாலும் அது எந்தக் காலத்திலும் எந்த நன்மையையும் தந்துவிடாது, மத்த படி வன்னியர்களுக்கு 6.75 சதவீதம் உள் ஒதுக்கீடு தருவதில் யாருக்கும் சிக்கல் இருக்காது எனக் கூறிய பலர் இப்போது காணும் நிலை பா.ம.க. தலைமை நிலையத்தில்
வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ நேற்று தீர்ப்பு வரும் முன்பே ஆலோசனை நடத்தினார். தைலாபுரம் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் இசக்கிப் படையாட்சி, வன்னியர் சங்கச் செயலாளர்கள் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம், சேலம் கார்த்தி, மற்றும் தருமபுரி அரசாங்கம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தீர்ப்பு எதுவாகினும்... முறையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல்; பிற்படுத்தப்பட்ட பிற சமூகத்தினருக்கு உரிய பங்கீடு அற்ற இட ஒதுக்கீட்டு கொள்கையை எதிர்த்தாக வேண்டும் என்ற நிலையில்
முக்குலத்தோர் மூன்று பிரிவினர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் தற்போதைய முறையே சிறந்தது எனச் சிலர் நம்பச் செய்கின்றனர். உண்மையில் அப்படியான நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள் எவரிடத்திலும் இல்லை.
ஒட்டுமொத்த மக்களுக்கும் சமவிகிதத்தில் நீதியளிக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை தான் இனி சட்ட வழியில் கோர வேண்டும்.
எப்படியாயினும், தன் சமூகத்திற்கு ஓரிடர் வராதளவில் போராடும் பாட்டாளி மக்கள் கட்சி போல் ஒன்றை உருவாக்க மற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்கள் தவறியிருக்கிறோம். எனவும் இனி பாடம் பயில்வோம். இதனில் என தென் மாவட்டங்களில் பலத்த குரல் வருகிறது.
கருத்துகள்