முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வன்னியர் உள் இட ஒதுக்கீடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது- உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய உத்தரவை உறுதி செய்தது.

கல்வியிலும், வேலை வாய்ப்பில்லும் வன்னியர் ஜாதியினருக்கு, 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது.     

அவசரஅவசரமாக முன்னால் ஆட்சி செய்த கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செய்த அலங்கோலம்..


அதுவும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு செய்த அவசர உத்தரவு..

இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததாகச் சொல்லி விளம்பரங்கள் செய்து தேர்தலில் வடக்கு பகுதியில் தமிழ்நாட்டில் சாதிக்கலாமென்று அதிமுகவும்   அதன் தோழமை கட்சி பாமகவும் நினைத்தன.

ஆனால் அதிமுகவின் ஒரு பிரிவினரே மதுரை சார்ந்த தென் மாவட்டங்களிலும் கோயமுத்தூர் சார்ந்த மேற்கு  மாவட்டங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து அதிமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் குழி தோண்டினர்.

அப்படி இப்படிப் போய் கடைசியில் உள் இட ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை  உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என்று இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்காலிக வெற்றிக்காக, ஏமாற்ற நினைத்தவர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள்..


நாங்கள் தான் சரி செய்யவில்லை. நீங்கள் அதை வாதத்தின் மூலம் சரி செய்திருக்கலாமே என்று அதிமுகவின் சிலர் கேட்கலாம் .

நீங்கள் சரியாக செய்ய முடியாமல் போனதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று திமுக கேட்கும்.. அதன் முன்னோட்ட நிகழ்வு தான் தீர்ப்பு வரும்போது அந்த சமூகத்தின் அமைச்சர் சிவசங்கர் அரசியல் சாதுர்யமாக பிற்படுத்தப்பட்ட துறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டது அக் கட்சி செய்த சாமர்த்தியமான சாணக்கியத்தனம்

மொத்தத்தில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு என்பதன் மூலம் பணியில்   சிலபேர் உள்ளே வேளைக்குப் போனார்கள் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.   இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, தமிழ்நாடு  அரசு மற்றும் பா.ம.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் மீ



தான விசாரணை பிப்ரவரி மாதம் 15, மற்றும் 16-ஆம் தேதிகளில் நடந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று ஒத்திவைதத நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று வழங்கிய தீர்ப்பு: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது. 1994 ஆம் ஆண்டு சட்டத்தை மீறும் வகையில் இட ஒதுக்கீடு கூடாது. உள் ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான நியாயமான காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ஜாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பு வழங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.


வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு எதிரானது வன்னியர் உள் ஒதுக்கீடு என்பது தான் குற்றச்சாட்டு, மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதே பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட அஜென்டாவில் தங்களுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கேட்பதே தவறு இதில் கிடைக்கவில்லை என்றானதும் பாஜக மொத்த இட ஒதுக்கீட்டையும் ரத்து பண்ணிடும்னு இப்போது சமூக வலைதளவாசிகள்  சாபம் வேறு



விடுகிறார்கள் அறியாமையின் பிடியில் தற்குறிகளாக வளர்ந்து நிற்கும் சட்டம் அறியாமல் சிலர். 10.5 சதவீதம் உள்  ஒதுக்கீடுனு அறிவிப்பு வந்ததுமே பெரும்பான்மை வன்னியர்கள் இதெல்லாம் சாத்தியமேயில்லாதது என்று புரிந்துக்கொண்டனர்.

இப்போது வந்த உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின் அந்த அமைப்பு நிர்வாகிகளை ஜாதி ரீதியிலான அரசியல் நகர்வுகள் மூலம் பா.ம க நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸை சந்தித்துப் பேசினார்கள் அவர்கள் இதை வேறு வழியில் வழிநடத்த முனைந்தாலும்  அது எந்தக் காலத்திலும் எந்த நன்மையையும் தந்துவிடாது,  மத்த படி வன்னியர்களுக்கு 6.75 சதவீதம் உள் ஒதுக்கீடு தருவதில் யாருக்கும் சிக்கல் இருக்காது எனக் கூறிய பலர் இப்போது காணும் நிலை பா.ம.க. தலைமை நிலையத்தில்


வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் நிறுவனர்  மருத்துவர் ச.இராமதாஸ நேற்று தீர்ப்பு வரும் முன்பே ஆலோசனை நடத்தினார்.  தைலாபுரம் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் இசக்கிப் படையாட்சி,  வன்னியர் சங்கச் செயலாளர்கள் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம், சேலம் கார்த்தி, மற்றும் தருமபுரி அரசாங்கம்  மற்றும் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தீர்ப்பு எதுவாகினும்... முறையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல்; பிற்படுத்தப்பட்ட பிற சமூகத்தினருக்கு உரிய பங்கீடு அற்ற இட ஒதுக்கீட்டு கொள்கையை  எதிர்த்தாக வேண்டும் என்ற நிலையில்

முக்குலத்தோர் மூன்று பிரிவினர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் தற்போதைய முறையே சிறந்தது எனச் சிலர் நம்பச் செய்கின்றனர். உண்மையில் அப்படியான நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள் எவரிடத்திலும் இல்லை.

ஒட்டுமொத்த மக்களுக்கும் சமவிகிதத்தில் நீதியளிக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை தான் இனி சட்ட வழியில் கோர வேண்டும்.

எப்படியாயினும், தன் சமூகத்திற்கு ஓரிடர் வராதளவில் போராடும் பாட்டாளி மக்கள் கட்சி போல் ஒன்றை உருவாக்க மற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்கள்  தவறியிருக்கிறோம். எனவும் இனி பாடம் பயில்வோம். இதனில் என தென் மாவட்டங்களில் பலத்த குரல் வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...