தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு (கடம்பூர் தவிர) பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தேர்தல் பதிவான வாக்குகள் 22 ஆம் தேதி எண்ணப்பட்டதில் திமுகவின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய நிலையில்
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி 175, இடங்களிலும் அதிமுக - 15, இடங்களிலும் பாஜக, அமமுக மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்ற தனிப்பெரும்பான்மையுடன் திமுக வென்ற பின்னர்
சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி முதன்முறையாக பட்டியலினப் பெண்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் கடும் போட்டி நிலவிய நிலையில், புதிய மேயராக சென்னை திருவிக நகர் 74-ஆவது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தியாவார். அவர் தந்தை ராஜன் திரு.வி.க.நகர் திமுக பொறுப்பாளராவார் 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்தவர் இவர் கணவர் கே.ராஜா தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணி செய்வதாகத் தகவல்.
சென்னை மாநகராட்சியில் இதற்கு முன் தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரும் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது பெண் மேயர், முதல் ஆதிதிராவிடர் பெண் மேயர் என்ற தகுதி பெற்ற பிரியா ராஜன் தனது பணியை எப்படிச் செய்யப்போகிறார் என சென்னை மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதிலும் வடசென்னை பகுதி பிரியா ராஜன் அந்த மக்களுக்காக சென்ன செய்யப்போகிறார் என்று ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மேயர் பிரியா ராஜன், தான் 18 வயது முதல் திமுகவில் உறுப்பினராகவும் அரசியல் அனுபவம் உள்ளதாகவும் கூறியுள்ளார். அதேநேரத்தில், தனது குடும்பம் அரசியல் பின்னணியைகீ கொண்டதாக இருந்தாலும் தான் ஆசிரியராக வேண்டும் என விரும்பியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தன்னை நம்பி தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாபெரும் பொறுப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த மேயர் பிரியா சென்னை மாநகராட்சியை உலகத்தரம் வாய்ந்த நகராக மாற்றுவதே இலக்கு என்றும் குறிப்பாக வட சென்னை மக்களின் முக்கிய பிரச்சனையான மழைநீர் தேக்கம், சுகாதார மேம்பாடு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போவதாகவும் தெரிவித்துள்ளார் இப்போது சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நியமனத் தேர்தலில் திமுக வில் எழும் போட்டிகள் முதல் மண்டலத்தில் திமுக அதன்தோழமைக் கட்சிக்கு ஒதுக்கினால் ஏற்கனவே நகர்மன்றத் தலைவரான ஜெயராமன் (CPI-M) மற்றும் காங்கிரசை சேர்ந்த சாமுவேல் திரவியம் இருவரில் ஒருவருக்கே வாய்ப்பே இல்லை எனில்
திமுகவின் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு (முதலமைச்சரிடம் வீர திர செயலுக்கான விருதை குடியரசு நாளில் பெற்றவர்). மற்றும் மாநில மாணவரணி பொறுப்பிலுள்ள அட்வகேட் கவீ.கணேசன் இருவரில் ஒருவர்.
இரண்டாம் மண்டலத்தில் திமுகவில் ஆறுமுகம் இரண்டாவது முறையாக கவுன்சிலர். பண படை பலமும் கொண்ட திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கரின் ஆதரவாளர்.
மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது மண்டலங்கள் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாத நிலை யார் வேண்டுமானாலும் வரலாம்.
ஐந்தாவது மண்டலத்தில் இராயபுரம் இளங்கோ எனும் இளைய அருணா (மாவட்டச்.செயலாளர்.) போட்டியேயில்லாமல் தேர்வாகலாம்.
ஆறாவது மண்டலத்தில் திமுக வின் புனிதவதி எத்திராசன், மற்றும் பகுதிச் செயலாளர் வேலு இருவரும் போட்டியில் உள்ளார் கள்.
ஏழாவது மண்டலத்தில் திமுக வில் எம்.இ.சேகர் மற்றும் ராஜகோபால் இருவரும் . பலப்பரீட்சை நடத்தி வருகிற நிலையில் மேலும்
பரிதி இளம்சுருதி மற்றும் சென்னை மண்டலத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இருவரில் ஒருவர் அதியமான் மற்றும் பகுதிச் செயலாளர் பரமசிவம் மனைவி வசந்தி பரமசிவம், இரு முறை சேர்மன், ஒருமுறை ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்த இராமலிங்கம் ஆகியவர்கள் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. எட்டாவது மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற லதா வாசுவின் பக்கம் வெற்றி அலை வீச்சு இருக்கும் என பேசுவது தெரிகிறது.
ஒன்பதாவது மண்டலத்தில் கடுமையான போட்டியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது காரணம் (சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி) பகுதி செயலாளரான தனசேகர் ( எ ) ஏ ஆர் பி எம் காமராஜ், மதன் மோகன், துணை மேயர் பதவிக்கு காத்திருந்த
நே.சிற்றரசு (மாவட்டச்.செயலாளர்.) என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பத்தாவது மண்டலத்தில் இளம் கவுன்சிலர் நிலவரசி துரைராஜ், முன்னாள் மா.செ. மற்றும் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளன. சென்னையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்சியின் பகுதிச் செயலாளரான கே.கே. நகர் தனசேகரன் ஆகியோர் பந்தயத்தில் தனி ஆளாக முதலில் முந்தும் நிலையில் தெரிகிறார்.
பதினோராம் மண்டலத்தில் ஆலப்பாக்கம் கு. சண்முகம், செல்வகுமார் ஆகிய இருவரும் போட்டியில்
பதிமூன்றாம் மண்டலத்தில் மருத்துவ அமைச்சர் மற்றும் முன்னால் மேயர் மா.சுப்பிரமணியன் ஆதரவாளராகக் கருதப்படும்
இரா துரைராஜ் (பகுதிசீ செயலாளர்), தொழிலதிபரும் அதிமுக ஆட்சியில் பாதிப்புகளுக்கு உள்ளானவரான வேளச்சேரி ஆனந்தம் பந்தயத்தில் முந்தும் நிலையில் .
பதினான்காம் மண்டலத்தில் முன்னாள் கவுன்சிலர் பாலவாக்கம் விஸ்வநாதன் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர். கவுன்சிலரான காலத்தில் சிறந்த செயல்பாடு மேலும் தமிழரசி சோமு. (பாலவாக்கம் சோமுவின் மகள் என்பது கூடுதல் பலம்) இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்
பதினைந்தாவது மண்டலத்தில் வீ.எ. மதியழகன் பெயருடன் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளரும் நீலாங்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான நீலாங்கரை எட்டியப்பனின் மகன் இவர். பாரம்பரிய திமுக பின்னணி. அடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் க. ஏகாம்பரம். ரியல் எஸ்டேட் மற்றும் கேபிள் டிவி தொழில் நடத்தும் இவர் மக்கள் பணியில் வேகமானவர். குற்றப் பின்னணியில் அடிபடாத நபர் மற்றும் முன்னாள் மண்டலக் குழு தலைவர் லியோ சுந்தரம் (அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்). சேர்மன் பந்தயத்தில் இவரும் உள்ளார். ஆக மாநகராட்சி பதவியை பிடிக்க பலரும் இருக்க தலைமை அறிவிப்பு எதிர் பார்த்து கட்சியின் மற்றவர்கள் பேசுவதை கேட்கும் போது காதில் விழுந்தது முன்பு திமுகவில் தேர்தல் என்றால் இவர் தான் வேட்பாளராக வருவார் என அறிய முடியும் ஆனால் இப்போது நிலைமை தலை கீழ் தகுதி புதிய நபர்கள் பக்கத்தில் காற்று பலமாக வீசுகிறது .. வாழ்த்துக்கள் நல்ல நிலை தான் .
கருத்துகள்