முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நியமனத் தேர்தலில் நடக்கும் பதவிப் போட்டி

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு (கடம்பூர் தவிர) பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தேர்தல் பதிவான வாக்குகள் 22 ஆம் தேதி எண்ணப்பட்டதில் திமுகவின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய நிலையில்


சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில்  திமுக கூட்டணி 175, இடங்களிலும் அதிமுக - 15, இடங்களிலும் பாஜக, அமமுக மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்ற  தனிப்பெரும்பான்மையுடன் திமுக வென்ற பின்னர்


சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி முதன்முறையாக பட்டியலினப் பெண்கள் என  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் கடும் போட்டி நிலவிய  நிலையில், புதிய மேயராக சென்னை திருவிக நகர் 74-ஆவது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் மார்ச் மாதம் 4  ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தியாவார். அவர் தந்தை ராஜன் திரு.வி.க.நகர் திமுக பொறுப்பாளராவார் 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்தவர் இவர் கணவர் கே.ராஜா தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணி செய்வதாகத் தகவல்.



சென்னை மாநகராட்சியில் இதற்கு முன்  தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரும் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது பெண் மேயர், முதல் ஆதிதிராவிடர் பெண் மேயர் என்ற தகுதி பெற்ற பிரியா ராஜன் தனது பணியை எப்படிச் செய்யப்போகிறார் என சென்னை மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதிலும்  வடசென்னை பகுதி பிரியா ராஜன் அந்த  மக்களுக்காக சென்ன செய்யப்போகிறார் என்று ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த மேயர் பிரியா ராஜன், தான் 18 வயது முதல் திமுகவில் உறுப்பினராகவும் அரசியல் அனுபவம் உள்ளதாகவும்  கூறியுள்ளார். அதேநேரத்தில், தனது குடும்பம் அரசியல் பின்னணியைகீ கொண்டதாக இருந்தாலும் தான் ஆசிரியராக வேண்டும் என விரும்பியதாகவும் கூறியுள்ளார்.




மேலும், தன்னை நம்பி தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாபெரும் பொறுப்பை வழங்கியுள்ளதாகத்  தெரிவித்த மேயர் பிரியா சென்னை மாநகராட்சியை உலகத்தரம் வாய்ந்த நகராக மாற்றுவதே இலக்கு என்றும் குறிப்பாக வட சென்னை மக்களின் முக்கிய பிரச்சனையான மழைநீர் தேக்கம், சுகாதார மேம்பாடு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போவதாகவும் தெரிவித்துள்ளார் இப்போது சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நியமனத் தேர்தலில் திமுக வில் எழும் போட்டிகள்                     முதல் மண்டலத்தில் திமுக அதன்தோழமைக் கட்சிக்கு ஒதுக்கினால் ஏற்கனவே நகர்மன்றத் தலைவரான ஜெயராமன் (CPI-M) மற்றும் காங்கிரசை சேர்ந்த சாமுவேல் திரவியம் இருவரில் ஒருவருக்கே வாய்ப்பே இல்லை எனில்




திமுகவின் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு (முதலமைச்சரிடம் வீர திர செயலுக்கான விருதை குடியரசு நாளில் பெற்றவர்). மற்றும் மாநில மாணவரணி பொறுப்பிலுள்ள அட்வகேட் கவீ.கணேசன் இருவரில் ஒருவர்.

இரண்டாம் மண்டலத்தில் திமுகவில் ஆறுமுகம் இரண்டாவது முறையாக கவுன்சிலர். பண படை பலமும்  கொண்ட திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கரின் ஆதரவாளர்.





மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது மண்டலங்கள் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாத நிலை யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஐந்தாவது மண்டலத்தில் இராயபுரம் இளங்கோ எனும் இளைய அருணா (மாவட்டச்.செயலாளர்.) போட்டியேயில்லாமல் தேர்வாகலாம்.



ஆறாவது மண்டலத்தில் திமுக வின் புனிதவதி எத்திராசன், மற்றும்  பகுதிச் செயலாளர்  வேலு  இருவரும் போட்டியில் உள்ளார் கள்.

ஏழாவது மண்டலத்தில்  திமுக வில் எம்.இ.சேகர் மற்றும் ராஜகோபால்  இருவரும் . பலப்பரீட்சை நடத்தி வருகிற நிலையில் மேலும்

பரிதி இளம்சுருதி மற்றும் சென்னை மண்டலத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இருவரில் ஒருவர் அதியமான் மற்றும் பகுதிச் செயலாளர் பரமசிவம் மனைவி வசந்தி பரமசிவம், இரு முறை சேர்மன், ஒருமுறை ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்த இராமலிங்கம் ஆகியவர்கள் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.       எட்டாவது மண்டலத்தில்   செல்வாக்கு பெற்ற லதா வாசுவின் பக்கம் வெற்றி அலை வீச்சு இருக்கும்  என பேசுவது தெரிகிறது.

ஒன்பதாவது மண்டலத்தில் கடுமையான போட்டியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது காரணம்  (சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி) பகுதி செயலாளரான தனசேகர் ( எ ) ஏ ஆர் பி எம் காமராஜ், மதன் மோகன், துணை மேயர் பதவிக்கு காத்திருந்த

நே.சிற்றரசு (மாவட்டச்.செயலாளர்.) என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பத்தாவது மண்டலத்தில்  இளம் கவுன்சிலர் நிலவரசி துரைராஜ், முன்னாள் மா.செ. மற்றும் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளன. சென்னையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்சியின் பகுதிச் செயலாளரான கே.கே. நகர் தனசேகரன்  ஆகியோர் பந்தயத்தில் தனி ஆளாக முதலில் முந்தும் நிலையில் தெரிகிறார்.

பதினோராம் மண்டலத்தில்  ஆலப்பாக்கம் கு. சண்முகம், செல்வகுமார் ஆகிய இருவரும் போட்டியில் 

பதிமூன்றாம் மண்டலத்தில் மருத்துவ அமைச்சர் மற்றும் முன்னால் மேயர் மா.சுப்பிரமணியன் ஆதரவாளராகக் கருதப்படும்

இரா துரைராஜ் (பகுதிசீ செயலாளர்), தொழிலதிபரும் அதிமுக ஆட்சியில் பாதிப்புகளுக்கு உள்ளானவரான வேளச்சேரி ஆனந்தம் பந்தயத்தில் முந்தும் நிலையில் .

பதினான்காம் மண்டலத்தில் முன்னாள் கவுன்சிலர் பாலவாக்கம் விஸ்வநாதன் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர். கவுன்சிலரான காலத்தில் சிறந்த செயல்பாடு மேலும்  தமிழரசி சோமு. (பாலவாக்கம் சோமுவின் மகள் என்பது கூடுதல் பலம்) இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்

பதினைந்தாவது  மண்டலத்தில் வீ.எ. மதியழகன் பெயருடன் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளரும் நீலாங்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான நீலாங்கரை எட்டியப்பனின் மகன் இவர். பாரம்பரிய திமுக பின்னணி. அடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் க. ஏகாம்பரம். ரியல் எஸ்டேட் மற்றும் கேபிள் டிவி தொழில் நடத்தும் இவர் மக்கள் பணியில் வேகமானவர். குற்றப் பின்னணியில் அடிபடாத நபர் மற்றும் முன்னாள் மண்டலக் குழு தலைவர் லியோ சுந்தரம் (அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்). சேர்மன் பந்தயத்தில் இவரும் உள்ளார். ஆக மாநகராட்சி பதவியை பிடிக்க பலரும் இருக்க  தலைமை அறிவிப்பு எதிர் பார்த்து கட்சியின்  மற்றவர்கள் பேசுவதை கேட்கும்  போது  காதில் விழுந்தது முன்பு திமுகவில் தேர்தல் என்றால் இவர் தான் வேட்பாளராக வருவார் என அறிய முடியும் ஆனால் இப்போது நிலைமை தலை கீழ் தகுதி புதிய நபர்கள் பக்கத்தில் காற்று பலமாக வீசுகிறது .. வாழ்த்துக்கள் நல்ல நிலை தான் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...