முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை.மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் பயனடையும் வழி

பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தை (PM-GKAY) மேலும் 6 மாதங்களுக்கு (ஏப்ரல்-செப்டம்பர், 2022) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏழைகள் மற்றும் நலிந்தோர் பயன்பெறுவதற்கான நடவடிக்கை

பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 3.4 லட்சம் கோடி ரூபாய் செலவில், 1,000 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் ஏழை மற்றும் நலிவடைந்த  பிரிவு மக்கள் மீதான அக்கறை மற்றும் அவர்களது உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிரதமரின்  கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. செப்டம்பர் 2022 (கட்டம் VI).

பிரதமரின்  ஏழைகள் நலன்  உணவுத்   (PM-GKAY) திட்டத்தின்  ஐந்தாவது கட்டம் 2022-ம் ஆண்டு  மார்ச் மாதத்தில் முடிவடையவிருந்தது. உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாக பிரதமரின்   ஏழைகள் நலன்  உணவுத்   (PM-GKAY) திட்டம்  கடந்த   2020-ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது நினைவுகூறத்தக்கது.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு இதுவரை சுமார் 2.60 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு அதாவது, 2022-ம் ஆண்டு  செப்டம்பர்  மாதம் வரை  80,000 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதனையடுத்து, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 3.40 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 80 கோடிப் பேர்  பயன்பெறுவர்: இதற்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்கும்.

கோவிட்-19 தொற்று  பரவல் கணிசமான அளவில் குறைந்திருந்த போதிலும் , பொருளாதார நடவடிக்கைகள் வேகம் அதிகரித்துள்ள நிலையிலும், இத்திட்டத்தை  நீட்டிப்பதன் மூலம், இந்த மீட்புக் காலத்தில் எந்த ஒரு ஏழை மக்களும் உணவின்றி  படுக்கைக்குச் செல்லாத நிலை உறுதி செய்யப்படும்.

நீட்டிக்கப்பட்ட பிரதமரின்  ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுடன் கூடுதலாக நபர்  ஒருவருக்கு  மாதம் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் . அதாவது ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் சாதாரண ரேஷன் அளவை விட  இருமடங்கு அதிகமாக பெறுவார்கள்.

இத்திட்டத்தின் ஐந்தாம் கட்டம் வரை சுமார் 759 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீட்டிப்பின் மூலம் மேலும் 244 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களுடன் (கட்டம் VI), இலவச உணவு தானியங்களின் மொத்த  ஒதுக்கீடு. தற்போது 1,003 லட்சம் மெட்ரிக் டன்னாக  உள்ளது .

நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் ரேஷன் கடைகளில், ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை  (ONORC) திட்டத்தின் கீழ் எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் அல்லது பயனாளியும் இலவச உணவு தானியங்களைப்   பெற முடியும். இதுவரை, 61 கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த  மக்கள்  பயனடைந்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் மிக மோசமான தொற்று நோய் பாதிப்பு இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு அரசால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான தொகையை வழங்கி இதுவரை இல்லாத அளவு கொள்முதல் செய்யப்பட்டதன் காரணமாக விவசாயிகள் உணவு தானினியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதற்காக  விவசாயிகள் - 'அன்னதாதா'  எனப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...