முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை.மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் பயனடையும் வழி

பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தை (PM-GKAY) மேலும் 6 மாதங்களுக்கு (ஏப்ரல்-செப்டம்பர், 2022) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏழைகள் மற்றும் நலிந்தோர் பயன்பெறுவதற்கான நடவடிக்கை

பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 3.4 லட்சம் கோடி ரூபாய் செலவில், 1,000 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் ஏழை மற்றும் நலிவடைந்த  பிரிவு மக்கள் மீதான அக்கறை மற்றும் அவர்களது உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிரதமரின்  கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. செப்டம்பர் 2022 (கட்டம் VI).

பிரதமரின்  ஏழைகள் நலன்  உணவுத்   (PM-GKAY) திட்டத்தின்  ஐந்தாவது கட்டம் 2022-ம் ஆண்டு  மார்ச் மாதத்தில் முடிவடையவிருந்தது. உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாக பிரதமரின்   ஏழைகள் நலன்  உணவுத்   (PM-GKAY) திட்டம்  கடந்த   2020-ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது நினைவுகூறத்தக்கது.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு இதுவரை சுமார் 2.60 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு அதாவது, 2022-ம் ஆண்டு  செப்டம்பர்  மாதம் வரை  80,000 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதனையடுத்து, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 3.40 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 80 கோடிப் பேர்  பயன்பெறுவர்: இதற்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்கும்.

கோவிட்-19 தொற்று  பரவல் கணிசமான அளவில் குறைந்திருந்த போதிலும் , பொருளாதார நடவடிக்கைகள் வேகம் அதிகரித்துள்ள நிலையிலும், இத்திட்டத்தை  நீட்டிப்பதன் மூலம், இந்த மீட்புக் காலத்தில் எந்த ஒரு ஏழை மக்களும் உணவின்றி  படுக்கைக்குச் செல்லாத நிலை உறுதி செய்யப்படும்.

நீட்டிக்கப்பட்ட பிரதமரின்  ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுடன் கூடுதலாக நபர்  ஒருவருக்கு  மாதம் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் . அதாவது ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் சாதாரண ரேஷன் அளவை விட  இருமடங்கு அதிகமாக பெறுவார்கள்.

இத்திட்டத்தின் ஐந்தாம் கட்டம் வரை சுமார் 759 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீட்டிப்பின் மூலம் மேலும் 244 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களுடன் (கட்டம் VI), இலவச உணவு தானியங்களின் மொத்த  ஒதுக்கீடு. தற்போது 1,003 லட்சம் மெட்ரிக் டன்னாக  உள்ளது .

நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் ரேஷன் கடைகளில், ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை  (ONORC) திட்டத்தின் கீழ் எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் அல்லது பயனாளியும் இலவச உணவு தானியங்களைப்   பெற முடியும். இதுவரை, 61 கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த  மக்கள்  பயனடைந்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் மிக மோசமான தொற்று நோய் பாதிப்பு இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு அரசால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான தொகையை வழங்கி இதுவரை இல்லாத அளவு கொள்முதல் செய்யப்பட்டதன் காரணமாக விவசாயிகள் உணவு தானினியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதற்காக  விவசாயிகள் - 'அன்னதாதா'  எனப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த