இலஞ்ச வழக்கில் சிஜிஎஸ்டி ஆய்வாளரும், கண்காணிப்பாளரும் கைது: சிபிஐ நடவடிக்கை
அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட்பிளேரில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) பிரிவில் பணியாற்றும் கண்காணிப்பாளரையும், ஆய்வாளரையும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு லஞ்ச வழக்கில் கைது செய்துள்ளது.
ஜிஎஸ்டி பதிவு நடைமுறைக்காக இவர்கள் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பேச்சுவார்த்தையில் இந்தத் தொகை ரூ.15,000-மாக குறைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்தத் தொகையை சிஜிஎஸ்டி ஆய்வாளர் மனோஜ் குமார் மூலமாக கண்காணிப்பாளர் அத்தானு குமார் தாசிடம் அளிக்க அறிவுறுத்தப்பட்டதாக புகார்தாரர் தெரிவித்தார்.
இதையடுத்து, புகார்தாரரிடமிருந்து ரூ.5,000-த்தை ஆய்வாளர் லஞ்சமாக பெறும்போது சிபிஐ அதிகாரிகள் பொறிவைத்துப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து கண்காணிப்பாளரும் பிடிபட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியபோது சுமார் ரூ.9.33 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவரும் போர்ட்பிளேரில் உள்ள உரிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்
கருத்துகள்