சோலைகள் கொண்ட சோலைமலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம்
எனும் பெயர்களையும் கொண்ட கருவறையில் உள்ள தெய்வம் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி யாகவும் உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் என்ற கள்ளழகர் ஆலயம்மதுரை வழி பாண்டிய மன்னர்கள், விஜயநகர வழியில் வந்த மதுரை நாயக்க மன்னர்களின் திருப்பணிகளைக் கொண்டுள்ளது. சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையிலுள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும் போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனிக்காது இருப்பதைக் கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலை நம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.
இது 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான ஆலயம். அழகர் கள்ளழகர் ஆன வரலாறு பெரியது 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் ஊர்வலம் மதுரையைச் சேர்ந்த(சைவப் பிராமணர்களால்) அதாவது ஐயர்களால் தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக்கலாம்.
வைணவப் பிராமணர்களால் தெலுங்கு வடுகர் ஆதரவில் அதாவது ஐயங்கார் பூசைபெறும் பெருந்தெய்வமான அழகர், கள்ளர்களைப் போல வேடமணிந்து வந்தது, இதற்கு வலுவான காரணமாகயிருக்கலாம் . அக்காலத்தில் பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். மோதலுக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் அழகர் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு, வைகையாற்று பகுதியிலும், வண்டியூரிலும் கள்ளர் வேடம் தடை செய்யப்பட்டிருக்கலாம்.'' என்றும் ஆய்வியல் நிறைஞர் தொ.பரமசிவன் எழுதிய ஆய்வு நூல் கூறுகிறது
வைகை ஆற்றின் தென் கரை பகுதி முழுவது சைவம், வைகை ஆற்றின் வட கரையில் வைணவம் சார்ந்த நிகழ்வுகளும் நடக்கின்றன. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் வட கரையில் தான் நடைபெறும்.
தமிழ்நாட்டில் நிலாக்காலம் முழுவதும் வசந்த காலத்தில் விழாக்காலம். இதன்படி, வளர்பிறை காலத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும் விழா 12 நாட்கள் நடக்கிறது. பெளர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். "மதுரையைத் தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் வேறு பழமையான ஆலயத்தில் கிடையாது. பாண்டியர் மன்னர்களின் குலதெய்வம் என மீனாட்சியை சொல்லும் வகையில் மணிமுடி சூடும் நாளில் பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம் பூ மாலையை சூடுகிறாள்" என்கிறார். ஆய்வாளர். சோழவந்தானருகில் தேனூரில் உள்ள மண்டபத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த அழகர் ஊர்வலம், திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி மன்னர் திருமலை நாயக்கரால் மாற்றப்பட்டுள்ளது.
வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் கொடுக்க அழகர் செல்லும் மண்டபத்தின் பெயரும் அதன் பின்னர் தேனூர் செல்லாததால் 'தேனூர் மண்டபம்'. தேனூரைச் சேர்ந்தவர்களே இங்கு கோவில் மரியாதை பெறுகின்றனர் என்பதும் அதற்கான சான்று.
இந்த இரண்டு விழாக்களையும் மன்னர் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1623 - 1659) தான் இணைத்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் தேர் இழுக்க ஆட்களைச் சேர்க்கவும், கால்நடைச் சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் திருமலை நாயக்கர் அதை செய்துள்ளார். திருவிழாக்களை மாற்றக் கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டவும் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். மேலும் தெலுங்கு மக்கள் தமிழ் மக்கள் இணைக்க வாய்ப்பாக அதைக் கருதினார்.
அழகர் ஊர்வலத்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்களை எடுத்து வரும் வண்டிகளும், உண்டியல்களை ஏந்திய வண்டிகளும் வரும். கற்பனைக் கதை உருவாக்கி அதனையே தங்கை மீனாட்சிக்கு அண்ணன் அழகர் திருமணச் சீர் கொண்டு வருவதாகவும் மக்களை மன்னர் உத்தரவு என்பதால் நம்பவைத்துள்ளனர். மற்றபடி அழகர் ஊர்வலத்திற்கும் மீனாட்சி கல்யாணத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.''மீனாட்சி அம்மன் கோவில் தேர் இழுக்க ஆட்களை சேர்க்கவும், கால்நடைச் சந்தைகளை நடத்தவும், மக்கள் உறவுகள் வரவழைத்து தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் மன்னர் திருமலை நாயக்கர் இதைச் செய்துள்ளார்.
திருமலை நாயக்கர் காலத்திற்குப் பின்னர் மதுரையை ஆண்ட விஜயரங்கசொக்கநாதநாயக்கர் (கி.பி.1706 - 1717) ஆட்சிக் காலத்தில் ஊர்வலத்தை ஒருமுறை தன்னாட்சி நாட்டுக் கள்ளர்கள் வழி மறித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த சமூகத்தினருக்கு 'இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை' தருவதற்கு கோவில் உடன்பட்டிருக்கிறது. அதுவே காலப்போக்கில் எதிர் சேவை
மேலும், கோவில் சொத்துடைமை நிறுவனமாக இருந்ததால் அதனை காத்துக் கொள்வதற்கும், தன்னாட்சி கள்ளர்களோடு உறவு கொண்டு அதற்கு ஆன்மீக வண்ணமும் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கிக் கிளம்பும் கள்ளழகர், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு தெலுங்கு சம்பிரதாய வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், 'காங்கு' எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளர் தோற்றத்தில் வருகிறார். அழகரின் ஊர்வலம் தல்லாகுளம் பகுதிக்கு வரும்போது ஒருமுறை பாண்டிமுனி அதனை மறித்துக் கொண்டார், உடனே அழகர் அவரது காவலாளியான பதினெட்டாம்படி கருப்பசாமி நினைத்ததும், கருப்பன் வந்து பாண்டிமுனியை விரட்டி அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார்" எனவும் தல்லாகுளத்தில் கருப்பசாமி கோவில் ஏற்பட்டதற்கு ஒரு கதையும் பேச்சு வழக்கில் இருந்து வருகிறது.

வண்டியூரில் துலுக்கநாச்சியார் கோவில் இல்லை, மாலிக் கபூர் படையெடுப்பு நடத்தப்பட்ட போது அங்கு முகாமிட்ட அலாவுதீன் கில்ஜி தளபதி அதனால் மன்னர் திருமலை நாயக்கர் ஏற்பாடு காரணமாக அங்குள்ள பெருமாள் கோவிலில் தான் அழகர் தங்குகிறார். அதையே துலுக்கநாச்சியார் கோவில் எனவும், அங்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் அழகர் தங்கும் இரவில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு வாணவேடிக்கைகள் நடத்தியதாக செவி வழிச் செய்திகள் உண்டு. மேலும் வடுக நாயக்கர் வகுப்பு பெண் மக்கள் இஸ்லாமிய பெண்களைப் போல கருகமணி அணியும் பழக்கமுடையவர்கள் அதை திருமலை நாயக்கர் மன்னர் கதையில் புகுத்தி விழா நடத்தப்பட்டது தான் வரலாறு.
இஸ்லாமியர்கள் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களுக்குப் பின்னர் திருமாலை நாயக்கர் ஆணையால் 'சாந்து நாச்சியார்' எனும் துலுக்க நாச்சியார் அமைக்கப்பட்டுள்ளதாக.'' அழகர் கோயில் என்ற ஆய்வு நூல்.தகவல்
சங்க இலக்கியங்களில் பெயர் சுட்டப்படும் ஒரே வைணவத் ஸ்தலமாக அழகர் கோவில் இருக்கிறது. பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகிறார்', சங்க காலத்திலிருந்து அழகர் கோயில் இருப்பதற்கான சான்றுகளுண்டு. சிலப்பதிகாரம், ஆழ்வார் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் முதன்மையானது. பாண்டியர்கள் காலத்து கல்வெட்டுக்களையும் காணலாம். மேல நாட்டு தன்னாட்சிக் கள்ளர்கள் அழகர் கோவில் கள்ளழகரை காலகாலமாக வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோவில் தேர்த்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகளும் இவர்களுக்குண்டு நரசிங்கம் பட்டி நாட்டு அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெறுகிறது. கள்ளழகர் கோவில் தேர்த்திருவிழாவின் போது தேரிழுக்கும் உரிமை பெற்றவர்கள்.
கருத்துகள்