முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வைகை வடகரையில் கள்ளழகர் வைபவம் வரலாற்றுப் பார்வை

சோலைகள் கொண்ட சோலைமலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம்

எனும் பெயர்களையும் கொண்ட கருவறையில் உள்ள தெய்வம் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி யாகவும் உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் என்ற கள்ளழகர் ஆலயம்

மதுரை வழி பாண்டிய மன்னர்கள், விஜயநகர வழியில் வந்த மதுரை நாயக்க மன்னர்களின் திருப்பணிகளைக் கொண்டுள்ளது. சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையிலுள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும் போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனிக்காது இருப்பதைக் கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால்  சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலை நம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.



இது 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான ஆலயம். அழகர் கள்ளழகர் ஆன வரலாறு பெரியது 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மன்னர்  திருமலை நாயக்கர் காலத்தில் ஊர்வலம் மதுரையைச்  சேர்ந்த(சைவப் பிராமணர்களால்) அதாவது ஐயர்களால் தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக்கலாம்.



வைணவப் பிராமணர்களால் தெலுங்கு வடுகர் ஆதரவில் அதாவது ஐயங்கார்  பூசைபெறும் பெருந்தெய்வமான அழகர், கள்ளர்களைப் போல வேடமணிந்து வந்தது, இதற்கு வலுவான காரணமாகயிருக்கலாம் . அக்காலத்தில் பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். மோதலுக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் அழகர் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு, வைகையாற்று பகுதியிலும், வண்டியூரிலும் கள்ளர் வேடம் தடை செய்யப்பட்டிருக்கலாம்.'' என்றும் ஆய்வியல் நிறைஞர் தொ.பரமசிவன் எழுதிய ஆய்வு நூல் கூறுகிறது


வைகை ஆற்றின் தென் கரை பகுதி முழுவது சைவம், வைகை ஆற்றின் வட கரையில் வைணவம் சார்ந்த நிகழ்வுகளும் நடக்கின்றன. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் வட கரையில் தான் நடைபெறும்.




தமிழ்நாட்டில் நிலாக்காலம் முழுவதும் வசந்த காலத்தில் விழாக்காலம். இதன்படி, வளர்பிறை காலத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும் விழா 12 நாட்கள் நடக்கிறது. பெளர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்.   "மதுரையைத் தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் வேறு பழமையான ஆலயத்தில் கிடையாது.       பாண்டியர் மன்னர்களின் குலதெய்வம் என மீனாட்சியை சொல்லும் வகையில் மணிமுடி சூடும் நாளில்  பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம் பூ மாலையை சூடுகிறாள்" என்கிறார். ஆய்வாளர்.  சோழவந்தானருகில்  தேனூரில் உள்ள மண்டபத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த அழகர் ஊர்வலம், திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி மன்னர் திருமலை நாயக்கரால் மாற்றப்பட்டுள்ளது.




வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் கொடுக்க அழகர் செல்லும் மண்டபத்தின் பெயரும் அதன் பின்னர் தேனூர் செல்லாததால் 'தேனூர் மண்டபம்'. தேனூரைச் சேர்ந்தவர்களே இங்கு கோவில் மரியாதை பெறுகின்றனர் என்பதும் அதற்கான சான்று.


இந்த இரண்டு விழாக்களையும் மன்னர் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1623 - 1659) தான் இணைத்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் தேர் இழுக்க ஆட்களைச் சேர்க்கவும், கால்நடைச் சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக  சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் திருமலை நாயக்கர் அதை செய்துள்ளார். திருவிழாக்களை மாற்றக் கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டவும் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். மேலும் தெலுங்கு மக்கள் தமிழ் மக்கள் இணைக்க வாய்ப்பாக அதைக் கருதினார்.

அழகர் ஊர்வலத்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்களை எடுத்து வரும் வண்டிகளும், உண்டியல்களை ஏந்திய வண்டிகளும் வரும். கற்பனைக் கதை உருவாக்கி அதனையே தங்கை மீனாட்சிக்கு அண்ணன் அழகர் திருமணச் சீர் கொண்டு வருவதாகவும்  மக்களை மன்னர் உத்தரவு என்பதால் நம்பவைத்துள்ளனர். மற்றபடி அழகர் ஊர்வலத்திற்கும் மீனாட்சி கல்யாணத்திற்கும் எந்த விதமான  சம்பந்தமும் இல்லை.''மீனாட்சி அம்மன் கோவில் தேர் இழுக்க ஆட்களை சேர்க்கவும், கால்நடைச் சந்தைகளை நடத்தவும், மக்கள் உறவுகள் வரவழைத்து தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் மன்னர் திருமலை நாயக்கர் இதைச் செய்துள்ளார். 

 திருமலை நாயக்கர் காலத்திற்குப் பின்னர் மதுரையை ஆண்ட விஜயரங்கசொக்கநாதநாயக்கர் (கி.பி.1706 - 1717) ஆட்சிக் காலத்தில் ஊர்வலத்தை ஒருமுறை தன்னாட்சி நாட்டுக்  கள்ளர்கள் வழி மறித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த சமூகத்தினருக்கு 'இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை' தருவதற்கு கோவில் உடன்பட்டிருக்கிறது. அதுவே காலப்போக்கில்  எதிர் சேவை 

மேலும், கோவில் சொத்துடைமை நிறுவனமாக இருந்ததால் அதனை காத்துக் கொள்வதற்கும், தன்னாட்சி கள்ளர்களோடு உறவு கொண்டு அதற்கு ஆன்மீக வண்ணமும் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கிக் கிளம்பும் கள்ளழகர், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு தெலுங்கு சம்பிரதாய வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், 'காங்கு' எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளர் தோற்றத்தில் வருகிறார்.          அழகரின் ஊர்வலம் தல்லாகுளம் பகுதிக்கு வரும்போது ஒருமுறை பாண்டிமுனி அதனை மறித்துக் கொண்டார், உடனே அழகர் அவரது காவலாளியான பதினெட்டாம்படி கருப்பசாமி நினைத்ததும், கருப்பன் வந்து பாண்டிமுனியை விரட்டி அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார்" எனவும் தல்லாகுளத்தில் கருப்பசாமி கோவில் ஏற்பட்டதற்கு ஒரு கதையும் பேச்சு வழக்கில் இருந்து வருகிறது.

   தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக சீர்வரிசைகளுடன் மதுரை வருகிறார் கள்ளழகர். அவர் வருவதற்கு முன்னரே மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விட்டதால், கோபம் கொண்டு, வைகையாற்றில் இறங்கி குளித்து விட்டு வண்டியூர் சென்று விடுகிறார் என்பது திரிந்து விட்ட கதை அன்றிரவு அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கி விட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்பி விடுகிறார்" என்கிறது இஸ்லாமிய மக்கள் புராண இதிகாச காலத்தில் வாழ்ந்த வரலாறு இல்லை மாலிக்காபூர் படையெடுப்பு நடந்த 1310 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இஸ்லாமிய மக்கள் இங்கு வந்து குடியேறினர் என்பது வரலாறு அதுவும் ஒரு கதை தான். ஆனால், இந்தக் கதைக்கும் ஒரு விளக்கம் தருகிறது  ஆய்வு நூல்.

வண்டியூரில் துலுக்கநாச்சியார் கோவில் இல்லை, மாலிக் கபூர் படையெடுப்பு நடத்தப்பட்ட போது அங்கு முகாமிட்ட அலாவுதீன் கில்ஜி தளபதி அதனால் மன்னர் திருமலை நாயக்கர் ஏற்பாடு காரணமாக அங்குள்ள பெருமாள் கோவிலில் தான் அழகர் தங்குகிறார். அதையே துலுக்கநாச்சியார் கோவில் எனவும், அங்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் அழகர் தங்கும் இரவில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு வாணவேடிக்கைகள் நடத்தியதாக  செவி வழிச் செய்திகள் உண்டு. மேலும் வடுக நாயக்கர் வகுப்பு பெண் மக்கள் இஸ்லாமிய பெண்களைப் போல கருகமணி அணியும் பழக்கமுடையவர்கள் அதை திருமலை நாயக்கர் மன்னர் கதையில் புகுத்தி விழா நடத்தப்பட்டது தான் வரலாறு. 

இஸ்லாமியர்கள் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களுக்குப் பின்னர் திருமாலை நாயக்கர் ஆணையால் 'சாந்து நாச்சியார்' எனும் துலுக்க நாச்சியார் அமைக்கப்பட்டுள்ளதாக.'' அழகர் கோயில் என்ற ஆய்வு நூல்.தகவல்

சங்க இலக்கியங்களில் பெயர் சுட்டப்படும் ஒரே வைணவத் ஸ்தலமாக அழகர் கோவில் இருக்கிறது. பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகிறார்',     சங்க காலத்திலிருந்து அழகர் கோயில் இருப்பதற்கான சான்றுகளுண்டு. சிலப்பதிகாரம், ஆழ்வார் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் முதன்மையானது. பாண்டியர்கள் காலத்து கல்வெட்டுக்களையும் காணலாம்.                 மேல நாட்டு தன்னாட்சிக் கள்ளர்கள் அழகர் கோவில் கள்ளழகரை காலகாலமாக வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோவில் தேர்த்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகளும் இவர்களுக்குண்டு நரசிங்கம் பட்டி நாட்டு அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெறுகிறது. கள்ளழகர் கோவில் தேர்த்திருவிழாவின் போது தேரிழுக்கும் உரிமை பெற்றவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த