முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வைகை வடகரையில் கள்ளழகர் வைபவம் வரலாற்றுப் பார்வை

சோலைகள் கொண்ட சோலைமலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம்

எனும் பெயர்களையும் கொண்ட கருவறையில் உள்ள தெய்வம் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி யாகவும் உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் என்ற கள்ளழகர் ஆலயம்

மதுரை வழி பாண்டிய மன்னர்கள், விஜயநகர வழியில் வந்த மதுரை நாயக்க மன்னர்களின் திருப்பணிகளைக் கொண்டுள்ளது. சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையிலுள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும் போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனிக்காது இருப்பதைக் கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால்  சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலை நம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.



இது 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான ஆலயம். அழகர் கள்ளழகர் ஆன வரலாறு பெரியது 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மன்னர்  திருமலை நாயக்கர் காலத்தில் ஊர்வலம் மதுரையைச்  சேர்ந்த(சைவப் பிராமணர்களால்) அதாவது ஐயர்களால் தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக்கலாம்.



வைணவப் பிராமணர்களால் தெலுங்கு வடுகர் ஆதரவில் அதாவது ஐயங்கார்  பூசைபெறும் பெருந்தெய்வமான அழகர், கள்ளர்களைப் போல வேடமணிந்து வந்தது, இதற்கு வலுவான காரணமாகயிருக்கலாம் . அக்காலத்தில் பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். மோதலுக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் அழகர் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு, வைகையாற்று பகுதியிலும், வண்டியூரிலும் கள்ளர் வேடம் தடை செய்யப்பட்டிருக்கலாம்.'' என்றும் ஆய்வியல் நிறைஞர் தொ.பரமசிவன் எழுதிய ஆய்வு நூல் கூறுகிறது


வைகை ஆற்றின் தென் கரை பகுதி முழுவது சைவம், வைகை ஆற்றின் வட கரையில் வைணவம் சார்ந்த நிகழ்வுகளும் நடக்கின்றன. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் வட கரையில் தான் நடைபெறும்.




தமிழ்நாட்டில் நிலாக்காலம் முழுவதும் வசந்த காலத்தில் விழாக்காலம். இதன்படி, வளர்பிறை காலத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும் விழா 12 நாட்கள் நடக்கிறது. பெளர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்.   "மதுரையைத் தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் வேறு பழமையான ஆலயத்தில் கிடையாது.       பாண்டியர் மன்னர்களின் குலதெய்வம் என மீனாட்சியை சொல்லும் வகையில் மணிமுடி சூடும் நாளில்  பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம் பூ மாலையை சூடுகிறாள்" என்கிறார். ஆய்வாளர்.  சோழவந்தானருகில்  தேனூரில் உள்ள மண்டபத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த அழகர் ஊர்வலம், திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி மன்னர் திருமலை நாயக்கரால் மாற்றப்பட்டுள்ளது.




வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் கொடுக்க அழகர் செல்லும் மண்டபத்தின் பெயரும் அதன் பின்னர் தேனூர் செல்லாததால் 'தேனூர் மண்டபம்'. தேனூரைச் சேர்ந்தவர்களே இங்கு கோவில் மரியாதை பெறுகின்றனர் என்பதும் அதற்கான சான்று.


இந்த இரண்டு விழாக்களையும் மன்னர் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1623 - 1659) தான் இணைத்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் தேர் இழுக்க ஆட்களைச் சேர்க்கவும், கால்நடைச் சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக  சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் திருமலை நாயக்கர் அதை செய்துள்ளார். திருவிழாக்களை மாற்றக் கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டவும் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். மேலும் தெலுங்கு மக்கள் தமிழ் மக்கள் இணைக்க வாய்ப்பாக அதைக் கருதினார்.

அழகர் ஊர்வலத்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்களை எடுத்து வரும் வண்டிகளும், உண்டியல்களை ஏந்திய வண்டிகளும் வரும். கற்பனைக் கதை உருவாக்கி அதனையே தங்கை மீனாட்சிக்கு அண்ணன் அழகர் திருமணச் சீர் கொண்டு வருவதாகவும்  மக்களை மன்னர் உத்தரவு என்பதால் நம்பவைத்துள்ளனர். மற்றபடி அழகர் ஊர்வலத்திற்கும் மீனாட்சி கல்யாணத்திற்கும் எந்த விதமான  சம்பந்தமும் இல்லை.''மீனாட்சி அம்மன் கோவில் தேர் இழுக்க ஆட்களை சேர்க்கவும், கால்நடைச் சந்தைகளை நடத்தவும், மக்கள் உறவுகள் வரவழைத்து தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் மன்னர் திருமலை நாயக்கர் இதைச் செய்துள்ளார். 

 திருமலை நாயக்கர் காலத்திற்குப் பின்னர் மதுரையை ஆண்ட விஜயரங்கசொக்கநாதநாயக்கர் (கி.பி.1706 - 1717) ஆட்சிக் காலத்தில் ஊர்வலத்தை ஒருமுறை தன்னாட்சி நாட்டுக்  கள்ளர்கள் வழி மறித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த சமூகத்தினருக்கு 'இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை' தருவதற்கு கோவில் உடன்பட்டிருக்கிறது. அதுவே காலப்போக்கில்  எதிர் சேவை 

மேலும், கோவில் சொத்துடைமை நிறுவனமாக இருந்ததால் அதனை காத்துக் கொள்வதற்கும், தன்னாட்சி கள்ளர்களோடு உறவு கொண்டு அதற்கு ஆன்மீக வண்ணமும் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கிக் கிளம்பும் கள்ளழகர், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு தெலுங்கு சம்பிரதாய வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், 'காங்கு' எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளர் தோற்றத்தில் வருகிறார்.          அழகரின் ஊர்வலம் தல்லாகுளம் பகுதிக்கு வரும்போது ஒருமுறை பாண்டிமுனி அதனை மறித்துக் கொண்டார், உடனே அழகர் அவரது காவலாளியான பதினெட்டாம்படி கருப்பசாமி நினைத்ததும், கருப்பன் வந்து பாண்டிமுனியை விரட்டி அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார்" எனவும் தல்லாகுளத்தில் கருப்பசாமி கோவில் ஏற்பட்டதற்கு ஒரு கதையும் பேச்சு வழக்கில் இருந்து வருகிறது.

   தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக சீர்வரிசைகளுடன் மதுரை வருகிறார் கள்ளழகர். அவர் வருவதற்கு முன்னரே மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விட்டதால், கோபம் கொண்டு, வைகையாற்றில் இறங்கி குளித்து விட்டு வண்டியூர் சென்று விடுகிறார் என்பது திரிந்து விட்ட கதை அன்றிரவு அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கி விட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்பி விடுகிறார்" என்கிறது இஸ்லாமிய மக்கள் புராண இதிகாச காலத்தில் வாழ்ந்த வரலாறு இல்லை மாலிக்காபூர் படையெடுப்பு நடந்த 1310 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இஸ்லாமிய மக்கள் இங்கு வந்து குடியேறினர் என்பது வரலாறு அதுவும் ஒரு கதை தான். ஆனால், இந்தக் கதைக்கும் ஒரு விளக்கம் தருகிறது  ஆய்வு நூல்.

வண்டியூரில் துலுக்கநாச்சியார் கோவில் இல்லை, மாலிக் கபூர் படையெடுப்பு நடத்தப்பட்ட போது அங்கு முகாமிட்ட அலாவுதீன் கில்ஜி தளபதி அதனால் மன்னர் திருமலை நாயக்கர் ஏற்பாடு காரணமாக அங்குள்ள பெருமாள் கோவிலில் தான் அழகர் தங்குகிறார். அதையே துலுக்கநாச்சியார் கோவில் எனவும், அங்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் அழகர் தங்கும் இரவில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு வாணவேடிக்கைகள் நடத்தியதாக  செவி வழிச் செய்திகள் உண்டு. மேலும் வடுக நாயக்கர் வகுப்பு பெண் மக்கள் இஸ்லாமிய பெண்களைப் போல கருகமணி அணியும் பழக்கமுடையவர்கள் அதை திருமலை நாயக்கர் மன்னர் கதையில் புகுத்தி விழா நடத்தப்பட்டது தான் வரலாறு. 

இஸ்லாமியர்கள் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களுக்குப் பின்னர் திருமாலை நாயக்கர் ஆணையால் 'சாந்து நாச்சியார்' எனும் துலுக்க நாச்சியார் அமைக்கப்பட்டுள்ளதாக.'' அழகர் கோயில் என்ற ஆய்வு நூல்.தகவல்

சங்க இலக்கியங்களில் பெயர் சுட்டப்படும் ஒரே வைணவத் ஸ்தலமாக அழகர் கோவில் இருக்கிறது. பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகிறார்',     சங்க காலத்திலிருந்து அழகர் கோயில் இருப்பதற்கான சான்றுகளுண்டு. சிலப்பதிகாரம், ஆழ்வார் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் முதன்மையானது. பாண்டியர்கள் காலத்து கல்வெட்டுக்களையும் காணலாம்.                 மேல நாட்டு தன்னாட்சிக் கள்ளர்கள் அழகர் கோவில் கள்ளழகரை காலகாலமாக வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோவில் தேர்த்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகளும் இவர்களுக்குண்டு நரசிங்கம் பட்டி நாட்டு அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெறுகிறது. கள்ளழகர் கோவில் தேர்த்திருவிழாவின் போது தேரிழுக்கும் உரிமை பெற்றவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...