சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தை
கையகப்படுத்தும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டுக்கெதிராகத் தொடரப்பட்ட உரிமையியல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது காரணமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தச் சென்றனர்.அப்போது ஏராளமான பிராமணர் சமூகத்தில் பலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து அயோத்யா மண்டபத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், தென் சென்னை மாவட்டத் தலைவர் வே.காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து விருகம்பாக்கம் ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டிலுள்ள சூழலில் மண்டபத்தை துவக்கத்தில் நிர்வகித்த இராம சமாஜம் என்ற அமைப்பு பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ந.க எண் 1947 /2012 நாள் 31.12.2013 கொண்ட தமிழக அரசாணையின் படி, அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியது. அதை எதிர்த்து , இராம சமாஜம் அமைப்பின் தலைவர் இரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எதிர் தரப்பினராக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், துணை ஆணையர், மாம்பலம் பகுதி அறநிலையத்துறை தக்கார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
வழக்கு விசாரணையின் போது, மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்து அபிஷேகம் ,ஆராதணை செய்து வழிப்பாடு நடந்ததெனவும் உண்டியல் வைத்து மக்களிடம் காணிக்கையும் பெறப்பட்டதெனவும் எதிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதெனவே, சட்டப் படி, சிலை வைத்து வழிப்பாடு நடைபெறுவதால் இந்த மண்டபம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்ட நிலையில் இந்த மண்டபம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை எதிர்த்துப் போராட்டம் செய்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கரு நாகராஜன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர் மீது, தடையை மீறி செயல்படுதல் மற்றும் சட்ட விரோதமாக தடுத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் சென்னை அசோக்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
கருத்துகள்