சிவகங்கை மாவட்ட நிா்வாகத்துடன் பபாசி அமைப்பு இணைந்து, ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்துகின்றனர்
புத்தகம் வாசிப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமானதாகும். பொதுமக்களின் எண்ணம் மற்றும் சிந்தனைகளை ஆக்கபூா்வமானதாக மாற்ற புத்தக வாசிப்பு அடிப்படையாக அமைகிறது.
சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இந்தப்புத்தகக் கண்காட்சியில், 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 100 அரங்குகள் புத்தகக் கண்காட்சிகளுக்கும், 10 அரங்குகள் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் உள்ளன. 600 நபா்கள் அமரும் வகையில் மிகப்பெரிய அரங்கும் அமைக்கப்பட்டு, தினந்தோறும் காலை 11 முதல் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகளிடையே இலக்கியம் சாா்ந்த பல போட்டிகள் மற்றும் 1 மணி நேரம் கூட்டாக புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது
நிகழ்வில் பாரம்பரிய உணவுப் பொருள்களைக் கொண்ட உணவகங்களும் உள்ளன. புத்தகக் கண்காட்சியினை, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிடலாம். மேலும், புத்தகக் கண்காட்சிக்கு போக்குவரத்து, குடிநீா்,கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை நகரில் நடைபெற்ற புத்தகக் காட்சி துவக்க விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி கண்காட்சி குறித்து விளக்க உரையாற்றி வரவேற்றார். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இலக்கிய உரையாற்றினார்
தமிழ்நாடு மருத்துவத் துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரகவளர்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிவகங்கை நகராட்சி தலைவர் சி.எம்.துரை ஆனந்த் துவக்கி வைத்தார். நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.தமிழரசி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி,
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) எம். வீரராகவன், செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ. நாகராஜபூபதி ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள்