முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின பிரதமர் வாழ்த்து மற்றும் முதல்வர் கலந்து கொண்ட கிராமசபை

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை


முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் என்று அவர் கூறினார்.இந்தியாவின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது தொழில்நுட்பத்தின் சக்தியை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதாகும்: பிரதமர்



நாட்டின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் முக்கிய அம்சம் தொழில்நுட்பத்தின் சக்தியை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதாக்கும் என்று  பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இதற்கு உதாரணமாக,  SVAMITVA திட்டம் சிறந்த பலனைத் தந்ததுள்ளது என்று தெரிவித்தார்

MyGovIndia-வின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது;

“இந்தியாவின் கிராமங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது மக்களின் நலனுக்காக தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதாகும். இதற்கு உதாரணமாக SVAMITVA திட்டம் சிறந்த பலனைத் தந்துள்ளது."

SVAMITVA திட்டம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராமங்களின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான மந்திரம்: பிரதமர் @நரேந்திர மோடி

இந்தத் திட்டம் எவ்வாறு நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குகிறது மற்றும் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். சுயசார்பு பஞ்சாயத்து

பிரதமர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில்;

உங்கள் அனைவருக்கும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள். பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகும். அதன் பலத்தில் புதிய இந்தியாவின் செழுமை உள்ளது. தன்னம்பிக்கை மிக்க  இந்தியாவை உருவாக்குவதில் நமது பஞ்சாயத்து அமைப்புகளை மேலும் வலுப்படுத்த உறுதிமொழி எடுப்போம்.எனத் தெரிவித்துள்ளார் தமிழகத்தின் முதல்வர் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் செங்காட்டு ஊராட்சி  கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.கூட்டத்தில் பெண்கள், குடிநீர் பிரச்சனை, ரேஷன் கடை பிரச்சனை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் குறித்து  குறைகளைக் கோரிக்கையாக வைத்தனர் அவை அனைத்தும் சரி செய்யப்படுமென உறுதியளித்தார்.  முதல்வர் பேசியதாவது



''உங்களோடு இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். காஞ்சிபுரத்திலிருக்கக்கூடிய செங்காடு கிராம ஊராட்சியினுடைய மக்களைச் சந்திக்க கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தமிழக உள்ளாட்சி அமைப்புகள் பாரம்பரியமான பழம்பெருமை வரலாறு கொண்டதென்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுக் குறிப்புகள் இதற்குச் சான்றாகிறது. அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமை. நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு முறையாக உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தி முடித்திருக்கிறோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். உள்ளாட்சியில் ஏதோ நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆளுங்கட்சி தான் வந்திருக்கிறது என்று அல்ல, 95 சதவீதம் நாம் வந்திருந்தாலும் மீதமுள்ள சதவீதம் எதிர்க்கட்சியினரும் வந்திருக்கிறார்கள். எனவே அவர்களை எதிர்க்கட்சி, இன்னொரு கட்சி என்று பார்க்காமல் எல்லா ஊராட்சிகளுக்கும் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ அதனை நிறைவேற்றி வருகிறோம். குடிநீர் பிரச்சனை பற்றி சொன்னீர்கள், ரேஷன் கடையைப் பற்றி சொன்னீர்கள், அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சந்திக்கும் இடையூறுகளைப் பற்றியும் சொன்னீர்கள், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி பல கோரிக்கைகள் இருக்கிறது. இதை எல்லாம் நாங்கள் இன்றைக்கு கவனமாகக் குறித்து வைத்துக் கொண்டு நிச்சயமாக, உறுதியாக அதை எல்லாம் மிக மிக விரைவில் அத்தனையும் நிறைவேற்றித் தருவதற்குக் காத்திருக்கிறோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் வழங்குகிறேன்'' என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த