தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை
முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் என்று அவர் கூறினார்.இந்தியாவின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது தொழில்நுட்பத்தின் சக்தியை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதாகும்: பிரதமர்
நாட்டின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் முக்கிய அம்சம் தொழில்நுட்பத்தின் சக்தியை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதாக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இதற்கு உதாரணமாக, SVAMITVA திட்டம் சிறந்த பலனைத் தந்ததுள்ளது என்று தெரிவித்தார்
MyGovIndia-வின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது;
“இந்தியாவின் கிராமங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது மக்களின் நலனுக்காக தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதாகும். இதற்கு உதாரணமாக SVAMITVA திட்டம் சிறந்த பலனைத் தந்துள்ளது."
SVAMITVA திட்டம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராமங்களின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான மந்திரம்: பிரதமர் @நரேந்திர மோடி
இந்தத் திட்டம் எவ்வாறு நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குகிறது மற்றும் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். சுயசார்பு பஞ்சாயத்து
பிரதமர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில்;
உங்கள் அனைவருக்கும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள். பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகும். அதன் பலத்தில் புதிய இந்தியாவின் செழுமை உள்ளது. தன்னம்பிக்கை மிக்க இந்தியாவை உருவாக்குவதில் நமது பஞ்சாயத்து அமைப்புகளை மேலும் வலுப்படுத்த உறுதிமொழி எடுப்போம்.எனத் தெரிவித்துள்ளார் தமிழகத்தின் முதல்வர் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் செங்காட்டு ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.கூட்டத்தில் பெண்கள், குடிநீர் பிரச்சனை, ரேஷன் கடை பிரச்சனை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் குறித்து குறைகளைக் கோரிக்கையாக வைத்தனர் அவை அனைத்தும் சரி செய்யப்படுமென உறுதியளித்தார். முதல்வர் பேசியதாவது
''உங்களோடு இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். காஞ்சிபுரத்திலிருக்கக்கூடிய செங்காடு கிராம ஊராட்சியினுடைய மக்களைச் சந்திக்க கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தமிழக உள்ளாட்சி அமைப்புகள் பாரம்பரியமான பழம்பெருமை வரலாறு கொண்டதென்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுக் குறிப்புகள் இதற்குச் சான்றாகிறது. அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமை. நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு முறையாக உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தி முடித்திருக்கிறோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். உள்ளாட்சியில் ஏதோ நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆளுங்கட்சி தான் வந்திருக்கிறது என்று அல்ல, 95 சதவீதம் நாம் வந்திருந்தாலும் மீதமுள்ள சதவீதம் எதிர்க்கட்சியினரும் வந்திருக்கிறார்கள். எனவே அவர்களை எதிர்க்கட்சி, இன்னொரு கட்சி என்று பார்க்காமல் எல்லா ஊராட்சிகளுக்கும் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ அதனை நிறைவேற்றி வருகிறோம். குடிநீர் பிரச்சனை பற்றி சொன்னீர்கள், ரேஷன் கடையைப் பற்றி சொன்னீர்கள், அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சந்திக்கும் இடையூறுகளைப் பற்றியும் சொன்னீர்கள், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி பல கோரிக்கைகள் இருக்கிறது. இதை எல்லாம் நாங்கள் இன்றைக்கு கவனமாகக் குறித்து வைத்துக் கொண்டு நிச்சயமாக, உறுதியாக அதை எல்லாம் மிக மிக விரைவில் அத்தனையும் நிறைவேற்றித் தருவதற்குக் காத்திருக்கிறோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் வழங்குகிறேன்'' என்றார்.
கருத்துகள்