முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிழக்கு கடற்கரை சாலை அல்லது இ சி ஆர் தேசிய நெடுஞ்சாலையாகிறது.

கிழக்கு கடற்கரை சாலை அல்லது இ சி ஆர் (East Coast Road) என அழைக்கும் சாலையை இனிமேல் தேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது.

கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவிப்பு. செய்வதற்கான வேலைகள் நடக்கின்றன.

சென்னை வாழ் மக்கள் தினம் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். பல லட்சங்கள், கோடிகள் என வாங்கிய வாகனங்கள் என்றாலும் சென்னைச் சாலைகளின் நெரிசலில்  ஊர்ந்து தான் செல்லும். இதனால் சென்னை வாழ் மக்கள் வாரத்தில் ஒருநாளாவது கிழக்கு கடற்கரை சாலையில்  பயணம் செய்வார்கள். கிழக்கு கடற்கரை சாலை பயணங்களில் அழகு  சேர்க்கும் விதமாக மாயாஜால் சினிமாஸ், வி.ஜி.பி, எம்.ஜி.எம் தீம் பார்க்குகள், முட்டுக்காடு படகுக்குழாம், கோவளம் கடற்கரை, திருவிடந்தை நித்தியப் பெருமாள் கோயில், முதலைப்பண்ணை, புலிக்குகை, மாமல்லபுரமென ஏராள பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரி வரை மாநில நெடுஞ்சாலையாகவும், 


அங்கிருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலையாகவும், நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி வரை மீண்டும் மாநில நெடுஞ்சாலையாகவும் இருக்கிறது. இப்போது NHAI தொழில் வடத் திட்டம் மூலம் சென்னையிலிருந்து - கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது.


1998 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சென்னைப் புறநகர் பகுதியிலிருந்து மரக்காணமடுத்த கூனிமேடு வரை ஒருவழித்தடமாக இருந்த கிழக்கு கடற்கரை சாலை. அக்காலத்தில் புதுச்சேரி மற்றும் , கடலூரிலிருந்து மொத்தமாக நான்கு  பேருந்துகளும் மட்டுமே சென்னை பாரிஸ் கார்னர் வரை இயக்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டில் இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதிக அளவில் பேருந்துகள் கோயம்பேடு வரை  இயக்கப்படுகின்றன.

2002 ஆம்  ஆண்டு முதல் கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (TNRDC) வசமிருந்தது. பின்பு சர்வதேச தரத்துக்கு இணையாகச் சாலையின் தரம் உயர்த்தப்பட்டு கட்டணச் சாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பயணப் போக்குவரத்து அதிகமிருந்ததால் சென்னையிலிருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரை நான்கு வழிச்சாலையாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மாற்றியது.   மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை தற்போது வரை இருவழிச்சாலையாக இருக்கிறது. அதை  தற்போது 64 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை மாநில நெடுஞ்சாலை எண் 49 என இதுவரை இருந்தது. தற்போது, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டபின் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரை உள்ள சாலை 332 A என மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நடுவில் 4 மீட்டர் அகலம் கொண்ட இடைவெளியில், இரண்டு பக்கங்களிலும் 30 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைய உள்ளது. பிப்ரவரி மாதத்திலிருந்தே தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் அந்தச் சாலை ஆய்வு செய்யப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வசமுள்ள நிலம் என்பதைக் குறிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் கற்கள் நடப்பட்டன. அதிக வளைவுகள் மற்றும் கல்பாக்கம் அணுஉலை காரணமாக புதுப்பட்டினம் பகுதியில் புறவழிச்சாலையும் அமைகிறது. இதனால் புதுப்பட்டினத்துக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்குமான தொடர்பிருக்காது. இது குறித்து சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விசாரித்த போது வரும் பதில் ` திட்ட இயக்குநரிடம் தான்  முழுமையான தகவல்களைப் பெறமுடியும். தற்போது சாலை அகலம் கூடும் பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப் படுகின்றன. அதன் பிறகு இது தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிடுவோம்.” என்றார். முன்பு , சென்னை முதல் சேலம் வரை 6 வழிச்சாலை சமூக ஆர்வலர்களையும், விவசாயிகளையும் பாதிப்புகள் ஏற்படும் எனக் காரணம் கூறப்பட்டு வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அடுத்த அறிவிப்பு தமிழகத்தில் பாதிப்புகள்  ஏற்படுத்துமா அல்லது உண்மை வளர்ச்சி பணி தானா என்பது பின்னர் தான் தெரியவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த