முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிழக்கு கடற்கரை சாலை அல்லது இ சி ஆர் தேசிய நெடுஞ்சாலையாகிறது.

கிழக்கு கடற்கரை சாலை அல்லது இ சி ஆர் (East Coast Road) என அழைக்கும் சாலையை இனிமேல் தேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது.

கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவிப்பு. செய்வதற்கான வேலைகள் நடக்கின்றன.

சென்னை வாழ் மக்கள் தினம் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். பல லட்சங்கள், கோடிகள் என வாங்கிய வாகனங்கள் என்றாலும் சென்னைச் சாலைகளின் நெரிசலில்  ஊர்ந்து தான் செல்லும். இதனால் சென்னை வாழ் மக்கள் வாரத்தில் ஒருநாளாவது கிழக்கு கடற்கரை சாலையில்  பயணம் செய்வார்கள். கிழக்கு கடற்கரை சாலை பயணங்களில் அழகு  சேர்க்கும் விதமாக மாயாஜால் சினிமாஸ், வி.ஜி.பி, எம்.ஜி.எம் தீம் பார்க்குகள், முட்டுக்காடு படகுக்குழாம், கோவளம் கடற்கரை, திருவிடந்தை நித்தியப் பெருமாள் கோயில், முதலைப்பண்ணை, புலிக்குகை, மாமல்லபுரமென ஏராள பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரி வரை மாநில நெடுஞ்சாலையாகவும், 


அங்கிருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலையாகவும், நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி வரை மீண்டும் மாநில நெடுஞ்சாலையாகவும் இருக்கிறது. இப்போது NHAI தொழில் வடத் திட்டம் மூலம் சென்னையிலிருந்து - கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது.


1998 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சென்னைப் புறநகர் பகுதியிலிருந்து மரக்காணமடுத்த கூனிமேடு வரை ஒருவழித்தடமாக இருந்த கிழக்கு கடற்கரை சாலை. அக்காலத்தில் புதுச்சேரி மற்றும் , கடலூரிலிருந்து மொத்தமாக நான்கு  பேருந்துகளும் மட்டுமே சென்னை பாரிஸ் கார்னர் வரை இயக்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டில் இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதிக அளவில் பேருந்துகள் கோயம்பேடு வரை  இயக்கப்படுகின்றன.

2002 ஆம்  ஆண்டு முதல் கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (TNRDC) வசமிருந்தது. பின்பு சர்வதேச தரத்துக்கு இணையாகச் சாலையின் தரம் உயர்த்தப்பட்டு கட்டணச் சாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பயணப் போக்குவரத்து அதிகமிருந்ததால் சென்னையிலிருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரை நான்கு வழிச்சாலையாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மாற்றியது.   மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை தற்போது வரை இருவழிச்சாலையாக இருக்கிறது. அதை  தற்போது 64 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை மாநில நெடுஞ்சாலை எண் 49 என இதுவரை இருந்தது. தற்போது, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டபின் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரை உள்ள சாலை 332 A என மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நடுவில் 4 மீட்டர் அகலம் கொண்ட இடைவெளியில், இரண்டு பக்கங்களிலும் 30 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைய உள்ளது. பிப்ரவரி மாதத்திலிருந்தே தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் அந்தச் சாலை ஆய்வு செய்யப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வசமுள்ள நிலம் என்பதைக் குறிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் கற்கள் நடப்பட்டன. அதிக வளைவுகள் மற்றும் கல்பாக்கம் அணுஉலை காரணமாக புதுப்பட்டினம் பகுதியில் புறவழிச்சாலையும் அமைகிறது. இதனால் புதுப்பட்டினத்துக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்குமான தொடர்பிருக்காது. இது குறித்து சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விசாரித்த போது வரும் பதில் ` திட்ட இயக்குநரிடம் தான்  முழுமையான தகவல்களைப் பெறமுடியும். தற்போது சாலை அகலம் கூடும் பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப் படுகின்றன. அதன் பிறகு இது தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிடுவோம்.” என்றார். முன்பு , சென்னை முதல் சேலம் வரை 6 வழிச்சாலை சமூக ஆர்வலர்களையும், விவசாயிகளையும் பாதிப்புகள் ஏற்படும் எனக் காரணம் கூறப்பட்டு வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அடுத்த அறிவிப்பு தமிழகத்தில் பாதிப்புகள்  ஏற்படுத்துமா அல்லது உண்மை வளர்ச்சி பணி தானா என்பது பின்னர் தான் தெரியவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...