கிழக்கு கடற்கரை சாலை அல்லது இ சி ஆர் (East Coast Road) என அழைக்கும் சாலையை இனிமேல் தேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது.
கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவிப்பு. செய்வதற்கான வேலைகள் நடக்கின்றன.
சென்னை வாழ் மக்கள் தினம் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். பல லட்சங்கள், கோடிகள் என வாங்கிய வாகனங்கள் என்றாலும் சென்னைச் சாலைகளின் நெரிசலில் ஊர்ந்து தான் செல்லும். இதனால் சென்னை வாழ் மக்கள் வாரத்தில் ஒருநாளாவது கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்வார்கள். கிழக்கு கடற்கரை சாலை பயணங்களில் அழகு சேர்க்கும் விதமாக மாயாஜால் சினிமாஸ், வி.ஜி.பி, எம்.ஜி.எம் தீம் பார்க்குகள், முட்டுக்காடு படகுக்குழாம், கோவளம் கடற்கரை, திருவிடந்தை நித்தியப் பெருமாள் கோயில், முதலைப்பண்ணை, புலிக்குகை, மாமல்லபுரமென ஏராள பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரி வரை மாநில நெடுஞ்சாலையாகவும்,
அங்கிருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலையாகவும், நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி வரை மீண்டும் மாநில நெடுஞ்சாலையாகவும் இருக்கிறது. இப்போது NHAI தொழில் வடத் திட்டம் மூலம் சென்னையிலிருந்து - கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது.
1998 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சென்னைப் புறநகர் பகுதியிலிருந்து மரக்காணமடுத்த கூனிமேடு வரை ஒருவழித்தடமாக இருந்த கிழக்கு கடற்கரை சாலை. அக்காலத்தில் புதுச்சேரி மற்றும் , கடலூரிலிருந்து மொத்தமாக நான்கு பேருந்துகளும் மட்டுமே சென்னை பாரிஸ் கார்னர் வரை இயக்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டில் இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதிக அளவில் பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்படுகின்றன.
2002 ஆம் ஆண்டு முதல் கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (TNRDC) வசமிருந்தது. பின்பு சர்வதேச தரத்துக்கு இணையாகச் சாலையின் தரம் உயர்த்தப்பட்டு கட்டணச் சாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பயணப் போக்குவரத்து அதிகமிருந்ததால் சென்னையிலிருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரை நான்கு வழிச்சாலையாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மாற்றியது. மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை தற்போது வரை இருவழிச்சாலையாக இருக்கிறது. அதை தற்போது 64 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை மாநில நெடுஞ்சாலை எண் 49 என இதுவரை இருந்தது. தற்போது, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டபின் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரை உள்ள சாலை 332 A என மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நடுவில் 4 மீட்டர் அகலம் கொண்ட இடைவெளியில், இரண்டு பக்கங்களிலும் 30 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைய உள்ளது. பிப்ரவரி மாதத்திலிருந்தே தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் அந்தச் சாலை ஆய்வு செய்யப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வசமுள்ள நிலம் என்பதைக் குறிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் கற்கள் நடப்பட்டன. அதிக வளைவுகள் மற்றும் கல்பாக்கம் அணுஉலை காரணமாக புதுப்பட்டினம் பகுதியில் புறவழிச்சாலையும் அமைகிறது. இதனால் புதுப்பட்டினத்துக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்குமான தொடர்பிருக்காது. இது குறித்து சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விசாரித்த போது வரும் பதில் ` திட்ட இயக்குநரிடம் தான் முழுமையான தகவல்களைப் பெறமுடியும். தற்போது சாலை அகலம் கூடும் பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப் படுகின்றன. அதன் பிறகு இது தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிடுவோம்.” என்றார். முன்பு , சென்னை முதல் சேலம் வரை 6 வழிச்சாலை சமூக ஆர்வலர்களையும், விவசாயிகளையும் பாதிப்புகள் ஏற்படும் எனக் காரணம் கூறப்பட்டு வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அடுத்த அறிவிப்பு தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்படுத்துமா அல்லது உண்மை வளர்ச்சி பணி தானா என்பது பின்னர் தான் தெரியவரும்.
கருத்துகள்